இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 26 அக்டோபர், 2021

அக்டோபர் 27 : முதல் வாசகம்கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30

அக்டோபர் 27 :   முதல் வாசகம்

கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30
சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.

மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டும் எனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்கவேண்டும் என்றே இப்படிச் செய்தார். தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 27th : Gospel The last shall be first and the first last.A Reading from the Holy Gospel accoding to St. Luke 13: 22-30

October 27th :  Gospel 

The last shall be first and the first last.

A Reading from the Holy Gospel accoding to St. Luke 13: 22-30 
Through towns and villages Jesus went teaching, making his way to Jerusalem. Someone said to him, ‘Sir, will there be only a few saved?’ He said to them, ‘Try your best to enter by the narrow door, because, I tell you, many will try to enter and will not succeed.
  ‘Once the master of the house has got up and locked the door, you may find yourself knocking on the door, saying, “Lord, open to us” but he will answer, “I do not know where you come from.” Then you will find yourself saying, “We once ate and drank in your company; you taught in our streets” but he will reply, “I do not know where you come from. Away from me, all you wicked men!”
  ‘Then there will be weeping and grinding of teeth, when you see Abraham and Isaac and Jacob and all the prophets in the kingdom of God, and yourselves turned outside. And men from east and west, from north and south, will come to take their places at the feast in the kingdom of God.
  ‘Yes, there are those now last who will be first, and those now first who will be last.’

The Word of the Lord.

October 27th : Responsorial PsalmPsalm 12(13):4-6 Lord, I trust in your mercy.

October 27th :   Responsorial Psalm

Psalm 12(13):4-6 

Lord, I trust in your mercy.
Look at me, answer me, Lord my God!
  Give light to my eyes lest I fall asleep in death,
lest my enemy say: ‘I have overcome him’;
  lest my foes rejoice to see my fall.

Lord, I trust in your mercy.

As for me, I trust in your merciful love.
  Let my heart rejoice in your saving help.
Let me sing to the Lord for his goodness to me,
  singing psalms to the name of the Lord, the Most High.

Lord, I trust in your mercy.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!
I am the Way, the Truth and the Life, says the Lord;
No one can come to the Father except through me.
Alleluia!

October 27th : First Reading The Spirit himself expresses our plea in a way that could never be put into words.A Reading from the Letter of St.Paul to the Romans 8: 26-30 .

October 27th : First Reading 

The Spirit himself expresses our plea in a way that could never be put into words.

A Reading from the Letter of St.Paul to the Romans 8: 26-30 .
The Spirit comes to help us in our weakness. For when we cannot choose words in order to pray properly, the Spirit himself expresses our plea in a way that could never be put into words, and God who knows everything in our hearts knows perfectly well what he means, and that the pleas of the saints expressed by the Spirit are according to the mind of God.
  We know that by turning everything to their good God co-operates with all those who love him, with all those that he has called according to his purpose. They are the ones he chose specially long ago and intended to become true images of his Son, so that his Son might be the eldest of many brothers. He called those he intended for this; those he called he justified, and with those he justified he shared his glory.

The Word of the Lord.

திங்கள், 25 அக்டோபர், 2021

அக்டோபர் 26 : நற்செய்தி வாசகம்கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21

அக்டோபர் 26 : நற்செய்தி வாசகம்

கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின” என்று கூறினார்.

மீண்டும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 26 : பதிலுரைப் பாடல்திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் மகிழ்ச்சியுறுகின்றோம்.

அக்டோபர் 26 : பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)

பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் மகிழ்ச்சியுறுகின்றோம்.
1
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.
2ab
அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. - பல்லவி

2cd
“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3
ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி

4
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5
கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். - பல்லவி

6
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

அக்டோபர் 26 : முதல் வாசகம்கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25

அக்டோபர் 26 :  முதல் வாசகம்

கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25
சகோதரர் சகோதரிகளே,

இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.

இந்நாள் வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர் நோக்குவாரா? நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காகத் தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 26th : Gospel The kingdom of God is like the yeast that leavened three measures of flour.A Reading from the Holy Gospel according to St.Luke 13:18-21

October 26th :    Gospel 

The kingdom of God is like the yeast that leavened three measures of flour.

A Reading from the Holy Gospel according to St.Luke 13:18-21 
Jesus said, ‘What is the kingdom of God like? What shall I compare it with? It is like a mustard seed which a man took and threw into his garden: it grew and became a tree, and the birds of the air sheltered in its branches.’
  Another thing he said, ‘What shall I compare the kingdom of God with? It is like the yeast a woman took and mixed in with three measures of flour till it was leavened all through.’

The Word of the Lord.

October 26th : Responsorial Psalm Psalm 125(126) What marvels the Lord worked for us.

October 26th : Responsorial Psalm 

Psalm 125(126) 

What marvels the Lord worked for us.

When the Lord delivered Zion from bondage,
  it seemed like a dream.
Then was our mouth filled with laughter,
  on our lips there were songs.
What marvels the Lord worked for us.

The heathens themselves said: ‘What marvels
  the Lord worked for them!’
What marvels the Lord worked for us!
  Indeed we were glad.

What marvels the Lord worked for us.

Deliver us, O Lord, from our bondage
  as streams in dry land.
Those who are sowing in tears
  will sing when they reap.

What marvels the Lord worked for us.

They go out, they go out, full of tears,
  carrying seed for the sowing:
they come back, they come back, full of song,
  carrying their sheaves.

What marvels the Lord worked for us.

Gospel Acclamation Jn15:15
Alleluia, alleluia!
I call you friends, says the Lord,
because I have made known to you
everything I have learnt from my Father.
Alleluia!

October 26th : First Reading The whole creation is eagerly waiting for God to reveal his sons.A Reading from the Letter of Letter of St.Paul to the Romans 8: 18-25.

October 26th : First Reading 

The whole creation is eagerly waiting for God to reveal his sons.

A Reading from the Letter of Letter of St.Paul to the Romans 8: 18-25. 
I think that what we suffer in this life can never be compared to the glory, as yet unrevealed, which is waiting for us. The whole creation is eagerly waiting for God to reveal his sons. It was not for any fault on the part of creation that it was made unable to attain its purpose, it was made so by God; but creation still retains the hope of being freed, like us, from its slavery to decadence, to enjoy the same freedom and glory as the children of God. From the beginning till now the entire creation, as we know, has been groaning in one great act of giving birth; and not only creation, but all of us who possess the first-fruits of the Spirit, we too groan inwardly as we wait for our bodies to be set free. For we must be content to hope that we shall be saved – our salvation is not in sight, we should not have to be hoping for it if it were – but, as I say, we must hope to be saved since we are not saved yet – it is something we must wait for with patience.

The Word of the Lord.