இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

MASS READINGS FIRST READING "A star rises, issuing from Jacob" Reading the Book of Numbers 24, 2-7.15-17a

13 December 2021, Advent Week 3 - Monday 

MASS READINGS 

FIRST READING 

"A star rises, issuing from Jacob" 

Reading the Book of Numbers 24, 2-7.15-17a 
In those days,
looking up, the pagan prophet Balaam
saw Israel encamped, ranged in tribes.
The spirit of God was upon him,
and he spoke these enigmatic words:
“Oracle of Balaam, son of Beor,
oracle of man with penetrating gaze,
oracle of one who hears the words of God.
He sees what the Mighty makes him see,
he falls into ecstasy, and his eyes open.
How beautiful are your tents, Jacob,
and your dwellings, Israel!
They stretch out like valleys,
like gardens by a river;
the Lord planted them like aloes,
like cedars by the water's edge!
A hero will come out of the descendants of Jacob,
he will rule over many peoples.
His reign will be greater than that of Gog,
his kingship will be exalted. " 

Balaam again uttered these enigmatic words:
“Oracle of Balaam, son of Beor,
oracle of man with penetrating gaze,
oracle of one who hears the words of God,
who possesses the knowledge of the Most High.
He sees what the Mighty makes him see,
he falls into ecstasy, and his eyes open.
This hero, I see him - but not for now -
I see him - but not up close:
A star rises, issuing from Jacob,
a scepter rises, issuing from Israel. " 

- Word of the Lord.

13 December 2021, RESPONSORIAL Psalm 24 (25), 4-5ab, 6-7bc, 8-9(cf. Ps 24, 4b)

13 December 2021, 

RESPONSORIAL 

Psalm 24 (25), 4-5ab, 6-7bc, 8-9(cf. Ps 24, 4b) 

Respons : Lord, let me know your way! 
Lord, teach me your ways,
let me know your way.
Guide me through your truth, teach me,
for you are the God who saves me. 

Remember, Lord, your tenderness,
your love that is forever.
In your love, do not forget me,
because of your goodness, Lord. 

He is righteous, he is good, the Lord,
he who shows sinners the way.
His righteousness directs the humble,
he teaches the humble his way.

Alleluia, Alleluia. Show us, Lord, your love, and give us your salvation. Alleluia. (Ps 84, 8)

சனி, 11 டிசம்பர், 2021

டிசம்பர் 12 : நற்செய்தி வாசகம்நாங்கள் என்ன செய்யவேண்டும்?✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 10-18

டிசம்பர் 12 :  நற்செய்தி வாசகம்

நாங்கள் என்ன செய்யவேண்டும்?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 10-18
அக்காலத்தில்

திருமுழுக்கு யோவான் போதித்துக்கொண்டிருந்தபோது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார்.

வரிதண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” என்றார்.

படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.

அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 12 : இரண்டாம் வாசகம்ஆண்டவர் அண்மையில் உள்ளார்.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7.

டிசம்பர் 12 : இரண்டாம் வாசகம்

ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7.
சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 61: 1ac

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

டிசம்பர் 12 : பதிலுரைப் பாடல்எசா 12: 2-3. 4. 5-6 (பல்லவி: 6)பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.

டிசம்பர் 12 :    பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3. 4. 5-6 (பல்லவி: 6)

பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.
2
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். - பல்லவி

4
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

5
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். - பல்லவி

டிசம்பர் 12 : முதல் வாசகம்உன் பொருட்டு ஆண்டவர் மகிழ்ந்து களிகூருவார்.இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17.

டிசம்பர் 12 : முதல் வாசகம்

உன் பொருட்டு ஆண்டவர் மகிழ்ந்து களிகூருவார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17.
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்; “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 12th : Gospel 'Someone is coming who will baptize you with the Holy Spirit and fire'.A Reading from the Holy Gospel according to St. Luke 3 : 10-18

December 12th : Gospel 

'Someone is coming who will baptize you with the Holy Spirit and fire'.

A Reading from the Holy Gospel according to St. Luke 3 : 10-18 
When all the people asked John, ‘What must we do?’ he answered, ‘If anyone has two tunics he must share with the man who has none, and the one with something to eat must do the same.’ There were tax collectors too who came for baptism, and these said to him, ‘Master, what must we do?’ He said to them, ‘Exact no more than your rate.’ Some soldiers asked him in their turn, ‘What about us? What must we do?’ He said to them, ‘No intimidation! No extortion! Be content with your pay!’
  A feeling of expectancy had grown among the people, who were beginning to think that John might be the Christ, so John declared before them all, ‘I baptise you with water, but someone is coming, someone who is more powerful than I am, and I am not fit to undo the strap of his sandals; he will baptise you with the Holy Spirit and fire. His winnowing-fan is in his hand to clear his threshing-floor and to gather the wheat into his barn; but the chaff he will burn in a fire that will never go out.’ As well as this, there were many other things he said to exhort the people and to announce the Good News to them.

The Word of the Lord.

December 12th : Second ReadingThe Lord is very near.Philippians 4: 4-7

December 12th :  Second Reading

The Lord is very near.

Philippians 4: 4-7 
I want you to be happy, always happy in the Lord; I repeat, what I want is your happiness. Let your tolerance be evident to everyone: the Lord is very near.
  There is no need to worry; but if there is anything you need, pray for it, asking God for it with prayer and thanksgiving, and that peace of God, which is so much greater than we can understand, will guard your hearts and your thoughts, in Christ Jesus.

The Word of the Lord.

Gospel Acclamation Is61:1(Lk4:18)

Alleluia, alleluia!
The spirit of the Lord has been given to me.
He has sent me to bring the good news to the poor.
Alleluia!

December 12th : Responsorial Psalm Isaiah 12 The rejoicing of a redeemed peopleSing and shout for joy for great in your midst is the Holy One of Israel.

December 12th :  Responsorial Psalm 

Isaiah 12 

The rejoicing of a redeemed people

Sing and shout for joy for great in your midst is the Holy One of Israel.
Truly, God is my salvation,
  I trust, I shall not fear.
For the Lord is my strength, my song,
  he became my saviour.
With joy you will draw water
  from the wells of salvation.

Sing and shout for joy for great in your midst is the Holy One of Israel.

Give thanks to the Lord, give praise to his name!
  Make his mighty deeds known to the peoples!
  Declare the greatness of his name.

Sing and shout for joy for great in your midst is the Holy One of Israel.

Sing a psalm to the Lord
  for he has done glorious deeds;
  make them known to all the earth!
People of Zion, sing and shout for joy,
  for great in your midst is the Holy One of Israel.

Sing and shout for joy for great in your midst is the Holy One of Israel.

December 12th : First ReadingThe Lord, the king of Israel, is in your midst.A Reading from the Book of Zephaniah 3: 14-18.

December 12th :  First Reading

The Lord, the king of Israel, is in your midst.

A Reading from the Book of Zephaniah 3: 14-18.
Shout for joy, daughter of Zion,
Israel, shout aloud!
Rejoice, exult with all your heart,
daughter of Jerusalem!
The Lord has repealed your sentence;
he has driven your enemies away.
The Lord, the king of Israel, is in your midst;
you have no more evil to fear.
When that day comes, word will come to Jerusalem:
Zion, have no fear,
do not let your hands fall limp.
The Lord your God is in your midst,
a victorious warrior.
He will exult with joy over you,
he will renew you by his love;
he will dance with shouts of joy for you
as on a day of festival.

The Word of the Lord.