இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 15 டிசம்பர், 2021

டிசம்பர் 16 : முதல் வாசகம்கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோல் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 1-10

டிசம்பர் 16  :  முதல் வாசகம்

கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோல் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 1-10
பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப் பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு; உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு; உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டிவிடு; உன் முளைகளை உறுதிப்படுத்து. வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்; உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக்கொள்வர்; பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.

அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்க மாட்டாய். ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என அவர் அழைக்கப்படுகின்றார்.

ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவிபோலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.

பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றும் உள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.

எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்கமாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 16th : Gospel 'A prophet, and much more than a prophet'A Reading from the Holy Gospel according to St. Luke 7: 24-30

December 16th : Gospel 

'A prophet, and much more than a prophet'

A Reading from the Holy Gospel according to St. Luke 7: 24-30 
When John’s messengers had gone, Jesus began to talk to the people about John. ‘What did you go out into the wilderness to see? A reed swaying in the breeze? No? Then what did you go out to see? A man dressed in fine clothes? Oh no, those who go in for fine clothes and live luxuriously are to be found at court! Then what did you go out to see? A prophet? Yes, I tell you, and much more than a prophet: he is the one of whom scripture says:
See, I am going to send my messenger before you;
he will prepare the way before you.
‘I tell you, of all the children born of women, there is no one greater than John; yet the least in the kingdom of God is greater than he is. All the people who heard him, and the tax collectors too, acknowledged God’s plan by accepting baptism from John; but by refusing baptism from him the Pharisees and the lawyers had thwarted what God had in mind for them.’

The Word of the Lord.

December 16th : Responsorial PsalmPsalm 29(30):2,4-6,11-13 I will praise you, Lord, you have rescued me.

December 16th :   Responsorial Psalm

Psalm 29(30):2,4-6,11-13 

I will praise you, Lord, you have rescued me.
I will praise you, Lord, you have rescued me
  and have not let my enemies rejoice over me.
O Lord, you have raised my soul from the dead,
  restored me to life from those who sink into the grave.

I will praise you, Lord, you have rescued me.

Sing psalms to the Lord, you who love him,
  give thanks to his holy name.
His anger lasts a moment; his favour all through life.
  At night there are tears, but joy comes with dawn.

I will praise you, Lord, you have rescued me.

The Lord listened and had pity.
  The Lord came to my help.
For me you have changed my mourning into dancing:
  O Lord my God, I will thank you for ever.

I will praise you, Lord, you have rescued me.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
The day of the Lord is near;
Look, he comes to save us.
Alleluia!

December 16th : First Reading With great love I will take you back.A reading from the Book of Isaiah 54: 1-10.

December 16th : First Reading 

With great love I will take you back.

A reading from the Book of Isaiah 54: 1-10. 
Shout for joy, you barren women who bore no children!
Break into cries of joy and gladness, you who were never in labour!
For the sons of the forsaken one are more in number
than the sons of the wedded wife, says the Lord.
Widen the space of your tent,
stretch out your hangings freely,
lengthen your ropes, make your pegs firm;
for you will burst out to right and to left.
Your race will take possession of the nations,
and people the abandoned cities.
Do not be afraid, you will not be put to shame,
do not be dismayed, you will not be disgraced;
for you will forget the shame of your youth
and no longer remember the curse of your widowhood.
For now your creator will be your husband,
his name, the Lord of Hosts;
your redeemer will be the Holy One of Israel,
he is called the God of the whole earth.
Yes, like a forsaken wife, distressed in spirit,
the Lord calls you back.
Does a man cast off the wife of his youth?
says your God.
I did forsake you for a brief moment,
but with great love will I take you back.
In excess of anger, for a moment
I hid my face from you.
But with everlasting love I have taken pity on you,
says the Lord, your redeemer.
I am now as I was in the days of Noah
when I swore that Noah’s waters
should never flood the world again.
So now I swear concerning my anger with you
and the threats I made against you;
for the mountains may depart,
the hills be shaken,
but my love for you will never leave you
and my covenant of peace with you will never be shaken,
says the Lord who takes pity on you.

The Word of the Lord.

செவ்வாய், 14 டிசம்பர், 2021

டிசம்பர் 15 : நற்செய்தி வாசகம்நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 19-23

டிசம்பர் 15  :  நற்செய்தி வாசகம்

நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 19-23
அக்காலத்தில்

யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து, “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார். அவர்கள் அவரிடம் வந்து, “ ‘வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள்.

அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 15 : பதிலுரைப் பாடல்திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: எசா 45:8)பல்லவி: வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்

டிசம்பர் 15  :   பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: எசா 45:8)

பல்லவி: வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்.
8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 40: 9-10

அல்லேலூயா, அல்லேலூயா! 

நற்செய்தி அறிவிப்பவரே, உன் குரலை எழுப்பி, இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார் என்று முழங்கிடுவீர். அல்லேலூயா.

டிசம்பர் 15 : முதல் வாசகம்வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 6b-8, 18, 21b-25.

டிசம்பர் 15  :  முதல் வாசகம்

வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 6b-8, 18, 21b-25.
ஆண்டவர் கூறுவதாவது: நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை. நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல்வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே. வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.

ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே: அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.

ஆண்டவர் நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை. மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். ‘ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு’ என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர். இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப்பெற்று அவரைப் போற்றுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 15th : Gospel 'Are you the one who is to come?'A reading from the Holy Gospel according to St. Luke 7 : 19-23.

December 15th :  Gospel 

'Are you the one who is to come?'

A reading from the Holy Gospel according to St. Luke 7 : 19-23. 
John, summoning two of his disciples, sent them to the Lord to ask, ‘Are you the one who is to come, or must we wait for someone else?’ When the men reached Jesus they said, ‘John the Baptist has sent us to you, to ask, “Are you the one who is to come or have we to wait for someone else?”’ It was just then that he cured many people of diseases and afflictions and of evil spirits, and gave the gift of sight to many who were blind. Then he gave the messengers their answer, ‘Go back and tell John what you have seen and heard: the blind see again, the lame walk, lepers are cleansed, and the deaf hear, the dead are raised to life, the Good News is proclaimed to the poor and happy is the man who does not lose faith in me.’

The Word of the Lord.

December 15th : Responsorial PsalmPsalm 84(85):9-14 Send victory like a dew, you heavens, and let the clouds rain it down.

December 15th :  Responsorial Psalm

Psalm 84(85):9-14 

Send victory like a dew, you heavens, and let the clouds rain it down.
I will hear what the Lord God has to say,
  a voice that speaks of peace,
  peace for his people.
His help is near for those who fear him
  and his glory will dwell in our land.

Send victory like a dew, you heavens, and let the clouds rain it down.

Mercy and faithfulness have met;
  justice and peace have embraced.
Faithfulness shall spring from the earth
  and justice look down from heaven.

Send victory like a dew, you heavens, and let the clouds rain it down.

The Lord will make us prosper
  and our earth shall yield its fruit.
Justice shall march before him
  and peace shall follow his steps.

Send victory like a dew, you heavens, and let the clouds rain it down.

Gospel Acclamation Is55:6

Alleluia, alleluia!
Seek the Lord while he is still to be found,
call to him while he is still near.
Alleluia!

December 15th : First ReadingI, the Lord, shall create deliverance.A Reading from the Book of Isaiah 45: 6-8,18, 21-25

December 15th : First Reading

I, the Lord, shall create deliverance.

A Reading from the Book of Isaiah 45: 6-8,18, 21-25 
Apart from me, all is nothing.
I am the Lord, unrivalled,
I form the light and create the dark.
I make good fortune and create calamity,
it is I, the Lord, who do all this.
Send victory like a dew, you heavens,
and let the clouds rain it down.
Let the earth open
for salvation to spring up.
Let deliverance, too, bud forth
which I, the Lord, shall create.
Yes, thus says the Lord,
creator of the heavens,
who is God,
who formed the earth and made it,
who set it firm,
created it no chaos,
but a place to be lived in:
  ‘I am the Lord, unrivalled:
  there is no other god besides me.
  A God of integrity and a saviour:
  there is none apart from me.
  Turn to me and be saved,
  all the ends of the earth,
  for I am God unrivalled.
  ‘By my own self I swear it;
  what comes from my mouth is truth,
  a word irrevocable:
  before me every knee shall bend,
  by me every tongue shall swear,
  saying, “From the Lord alone
  come victory and strength.”
  To him shall come, ashamed,
  all who raged against him.
  Victorious and glorious through the Lord shall be
  all the descendants of Israel.’

The Word of the Lord.