இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 10 ஜனவரி, 2022

January 11th : First Reading The Lord is mindful of Hannah and she gives birth to Samuel.1 Samuel 1: 9-20.

January 11th :  First Reading 

The Lord is mindful of Hannah and she gives birth to Samuel.

1 Samuel 1: 9-20. 
After they had eaten in the hall, Hannah rose and took her stand before the Lord, while Eli the priest was sitting on his seat by the doorpost of the temple of the Lord. In the bitterness of her soul she prayed to the Lord with many tears and made a vow, saying, ‘O Lord of Hosts! If you will take notice of the distress of your servant, and bear me in mind and not forget your servant and give her a man-child, I will give him to the Lord for the whole of his life and no razor shall ever touch his head.’
  While she prayed before the Lord which she did for some time, Eli was watching her mouth, for she was speaking under her breath; her lips were moving but her voice could not be heard. He therefore supposed that she was drunk and said to her, ‘How long are you going to be in this drunken state? Rid yourself of your wine.’ ‘No, my lord,’ Hannah replied ‘I am a woman in great trouble; I have taken neither wine nor strong drink – I was pouring out my soul before the Lord. Do not take your maidservant for a worthless woman; all this time I have been speaking from the depth of my grief and my resentment.’ Then Eli answered her: ‘Go in peace,’ he said ‘and may the God of Israel grant what you have asked of him.’ And she said, ‘May your maidservant find favour in your sight’; and with that the woman went away; she returned to the hall and ate and was dejected no longer.
  They rose early in the morning and worshipped before the Lord and then set out and returned to their home in Ramah. Elkanah had intercourse with Hannah his wife and the Lord was mindful of her. She conceived and gave birth to a son, and called him Samuel ‘since’ she said ‘I asked the Lord for him.’

The Word of the Lord.

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

சனவரி 10 : பதிலுரைப் பாடல்திபா 116: 12-13. 14,17. 18-19 (பல்லவி: 17a)பல்லவி: ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.அல்லது: அல்லேலூயா.

சனவரி 10 :   பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 14,17. 18-19 (பல்லவி: 17a)

பல்லவி: ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.

அல்லது: அல்லேலூயா.
12
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி

14
இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
17
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - பல்லவி

18
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
19
உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! 

காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

சனவரி 10 : முதல் வாசகம்அன்னா மலடியாக இருந்ததால், அவருடைய சக்களத்தி அவரை எள்ளி நகைத்து வந்தார்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 1-8

சனவரி 10 :  முதல் வாசகம்

அன்னா மலடியாக இருந்ததால், அவருடைய சக்களத்தி அவரை எள்ளி நகைத்து வந்தார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 1-8
எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன். அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்; பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை.

எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குப் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஓப்னியும் பினகாசும் இருந்தனர். எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு. அன்னாவின்மீது அவர் அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தார். ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார். ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது; அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார். அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி, “அன்னா, நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரைவிட மேலானவன் அன்றோ?” என்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 10th : Gospel I will make you into fishers of men.A Reading from the Holy Gospel according to St.Mark 1: 14-20.

January 10th :  Gospel 

I will make you into fishers of men.

A Reading from the Holy Gospel according to St.Mark 1: 14-20. 
After John had been arrested, Jesus went into Galilee. There he proclaimed the Good News from God. ‘The time has come’ he said ‘and the kingdom of God is close at hand. Repent, and believe the Good News.’
  As he was walking along by the Sea of Galilee he saw Simon and his brother Andrew casting a net in the lake – for they were fishermen. And Jesus said to them, ‘Follow me and I will make you into fishers of men.’ And at once they left their nets and followed him.
  Going on a little further, he saw James son of Zebedee and his brother John; they too were in their boat, mending their nets. He called them at once and, leaving their father Zebedee in the boat with the men he employed, they went after him.

The Word of the Lord.

January 10th : Responsorial PsalmPsalm 115(116) :12-19 A thanksgiving sacrifice I make to you, O Lord.or Alleluia!

January 10th :  Responsorial Psalm

Psalm 115(116) :12-19 

A thanksgiving sacrifice I make to you, O Lord.
or Alleluia!
How can I repay the Lord
  for his goodness to me?
The cup of salvation I will raise;
  I will call on the Lord’s name.

A thanksgiving sacrifice I make to you, O Lord.
or Alleluia!

My vows to the Lord I will fulfil
  before all his people.
O precious in the eyes of the Lord
  is the death of his faithful.

A thanksgiving sacrifice I make to you, O Lord.
or Alleluia!

Your servant, Lord, your servant am I;
  you have loosened my bonds.
A thanksgiving sacrifice I make;
  I will call on the Lord’s name.

A thanksgiving sacrifice I make to you, O Lord.
or Alleluia!

My vows to the Lord I will fulfil
  before all his people,
in the courts of the house of the Lord,
  in your midst, O Jerusalem.

A thanksgiving sacrifice I make to you, O Lord.
or Alleluia!

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!

Open our heart, O Lord,
to accept the words of your Son.
Alleluia!

January 10th : First Reading Hannah's rival taunts her for being barren.1 Samuel 1 : 1-8

January 10th :  First Reading 

Hannah's rival taunts her for being barren.

1 Samuel 1 : 1-8 
There was a man of Ramathaim, a Zuphite from the highlands of Ephraim whose name was Elkanah son of Jeroham, son of Elihu, son of Tohu, son of Zuph, an Ephraimite. He had two wives, one called Hannah, the other Peninnah; Peninnah had children but Hannah had none. Every year this man used to go up from his town to worship and to sacrifice to the Lord of Hosts in Shiloh. The two sons of Eli, Hophni and Phinehas, were there as priests of the Lord.
  One day Elkanah offered sacrifice. He used to give portions to Peninnah and to all her sons and daughters; to Hannah, however, he would give only one portion, although he loved her more, since the Lord had made her barren. Her rival would taunt her to annoy her, because the Lord had made her barren. And this went on year after year; every time they went up to the temple of the Lord she used to taunt her. And so Hannah wept and would not eat. Then Elkanah her husband said to her, ‘Hannah, why are you crying and why are you not eating? Why so sad? Am I not more to you than ten sons?’

The Word of the Lord.

சனி, 8 ஜனவரி, 2022

சனவரி 9 : நற்செய்தி வாசகம்இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, வானம் திறந்தது.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 15-16, 21-22.

சனவரி 9 :  நற்செய்தி வாசகம்

இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, வானம் திறந்தது.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 15-16, 21-22.
அக்காலத்தில்

மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 9 : இரண்டாம் வாசகம்புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14; 3: 4-7

சனவரி 9 :  இரண்டாம் வாசகம்

புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14; 3: 4-7
அன்பிற்குரியவரே,

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! 

“என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” அல்லேலூயா.

சனவரி 9 : பதிலுரைப் பாடல்திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30 (பல்லவி: 1)பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

சனவரி 9 :  பதிலுரைப் பாடல்

திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30 (பல்லவி: 1)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். - பல்லவி

3
நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!
4
காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். - பல்லவி

24
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
25
இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. - பல்லவி

27
தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன.
28
நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. - பல்லவி

29
நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
30
உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி

முதல் வாசகம்ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11

சனவரி 9 :  ஆண்டவரின் திருமுழுக்கு விழா

முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11
“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.