இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

பிப்ரவரி 23 : முதல் வாசகம்நாளைய வாழ்க்கைபற்றி உங்களுக்குத் தெரியாது.திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17

பிப்ரவரி 23 :  முதல் வாசகம்

நாளைய வாழ்க்கைபற்றி உங்களுக்குத் தெரியாது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17
“இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்” எனச் சொல்லுகிறவர்களே,

சற்றுக் கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடு இருப்போம்; இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை. இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 23rd : Gospel You must not stop anyone from working miracles in my nameA Reading from the Holy Gospel according to St. Mark 9: 38-40

February 23rd : Gospel 

You must not stop anyone from working miracles in my name

A Reading from the Holy Gospel according to St. Mark 9: 38-40 
John said to Jesus, ‘Master, we saw a man who is not one of us casting out devils in your name; and because he was not one of us we tried to stop him.’ But Jesus said, ‘You must not stop him: no one who works a miracle in my name is likely to speak evil of me. Anyone who is not against us is for us.’

The Word of the Lord.

February 23rd : Responsorial PsalmPsalm 48(49):2-3,6-11 How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

February 23rd : Responsorial Psalm

Psalm 48(49):2-3,6-11 

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.
Hear this, all you peoples,
  give heed, all who dwell in the world,
men both low and high,
  rich and poor alike!

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

Why should I fear in evil days
  the malice of the foes who surround me,
men who trust in their wealth,
  and boast of the vastness of their riches?

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

For no man can buy his own ransom,
  or pay a price to God for his life.
The ransom of his soul is beyond him.
  He cannot buy life without end,
  nor avoid coming to the grave.

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

He knows that wise men and fools must both perish
  and leave their wealth to others.

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!
I am the Way, the Truth and the Life, says the Lord;
No one can come to the Father except through me.
Alleluia!

February 23rd : First Reading You cannot know what will happen tomorrowJames 4: 13-17

February 23rd : First Reading 

You cannot know what will happen tomorrow

James 4: 13-17 
Here is the answer for those of you who talk like this: ‘Today or tomorrow, we are off to this or that town; we are going to spend a year there, trading, and make some money.’
  You never know what will happen tomorrow: you are no more than a mist that is here for a little while and then disappears. The most you should ever say is: ‘If it is the Lord’s will, we shall still be alive to do this or that.’ But how proud and sure of yourselves you are now! Pride of this kind is always wicked. Everyone who knows 
what is the right thing to do and doesn’t do it commits a sin.

The Word of the Lord.

திங்கள், 21 பிப்ரவரி, 2022

பிப்ரவரி 22 : நற்செய்தி வாசகம்உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

பிப்ரவரி 22 :  நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 22 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

பிப்ரவரி 22 :  பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். - பல்லவி

4
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா!

 உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

பிப்ரவரி 22 : திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்விழாமுதல் வாசகம்நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

பிப்ரவரி 22 :  திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்
விழா

முதல் வாசகம்

நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4
அன்புக்குரியவர்களே,

கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 22nd : GospelYou are Peter and on this rock I will build my ChurchA Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-19

February 22nd :  Gospel

You are Peter and on this rock I will build my Church

A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-19 
When Jesus came to the region of Caesarea Philippi he put this question to his disciples, ‘Who do people say the Son of Man is?’ And they said, ‘Some say he is John the Baptist, some Elijah, and others Jeremiah or one of the prophets.’ ‘But you,’ he said ‘who do you say I am?’ Then Simon Peter spoke up, ‘You are the Christ,’ he said ‘the Son of the living God.’ Jesus replied, ‘Simon son of Jonah, you are a happy man! Because it was not flesh and blood that revealed this to you but my Father in heaven. So I now say to you: You are Peter and on this rock I will build my Church. And the gates of the underworld can never hold out against it. I will give you the keys of the kingdom of heaven: whatever you bind on earth shall be considered bound in heaven; whatever you loose on earth shall be considered loosed in heaven.’

The Word of the Lord.

February 22nd : Responsorial Psalm Psalm 22(23) ©The Lord is my shepherd: there is nothing I shall want.

February 22nd :  Responsorial Psalm Psalm 22(23) ©

The Lord is my shepherd: there is nothing I shall want.
The Lord is my shepherd;
  there is nothing I shall want.
Fresh and green are the pastures
  where he gives me repose.
Near restful waters he leads me,
  to revive my drooping spirit.

The Lord is my shepherd: there is nothing I shall want.

He guides me along the right path;
  he is true to his name.
If I should walk in the valley of darkness
  no evil would I fear.
You are there with your crook and your staff;
  with these you give me comfort.

The Lord is my shepherd: there is nothing I shall want.

You have prepared a banquet for me
  in the sight of my foes.
My head you have anointed with oil;
  my cup is overflowing.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Surely goodness and kindness shall follow me
  all the days of my life.
In the Lord’s own house shall I dwell
  for ever and ever.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Gospel Acclamation Mt16:18

Alleluia, alleluia!
You are Peter,
and on this rock I will build my Church.
And the gates of the underworld can never hold out against it.
Alleluia!

February 22nd : First Reading Watch over the flock, not simply as a duty but gladly1 Peter 5: 1-4

February 22nd : First Reading 

Watch over the flock, not simply as a duty but gladly

1 Peter 5: 1-4 
Now I have something to tell your elders: I am an elder myself, and a witness to the sufferings of Christ, and with you I have a share in the glory that is to be revealed. Be the shepherds of the flock of God that is entrusted to you: watch over it, not simply as a duty but gladly, because God wants it; not for sordid money, but because you are eager to do it. Never be a dictator over any group that is put in your charge, but be an example that the whole flock can follow. When the chief shepherd appears, you will be given the crown of unfading glory.

The Word of the Lord.