இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 8 மார்ச், 2022

March 9th : Gospel As Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be a signA Reading from the Holy Gospel according to St.Luke 11: 29-32

March 9th : Gospel 

As Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be a sign

A Reading from the Holy Gospel according to St.Luke 11: 29-32 
The crowds got even bigger, and Jesus addressed them:
  ‘This is a wicked generation; it is asking for a sign. The only sign it will be given is the sign of Jonah. For just as Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be to this generation. On Judgement day the Queen of the South will rise up with the men of this generation and condemn them, because she came from the ends of the earth to hear the wisdom of Solomon; and there is something greater than Solomon here. On Judgement day the men of Nineveh will stand up with this generation and condemn it, because when Jonah preached they repented; and there is something greater than Jonah here.’

The Word of the Lord.

March 9th : Responsorial PsalmPsalm 50(51):3-4,12-13,18-19 ©A humbled, contrite heart, O God, you will not spurn.

March 9th :  Responsorial Psalm

Psalm 50(51):3-4,12-13,18-19 ©

A humbled, contrite heart, O God, you will not spurn.
Have mercy on me, God, in your kindness.
  In your compassion blot out my offence.
O wash me more and more from my guilt
  and cleanse me from my sin.

A humbled, contrite heart, O God, you will not spurn.

A pure heart create for me, O God,
  put a steadfast spirit within me.
Do not cast me away from your presence,
  nor deprive me of your holy spirit.

A humbled, contrite heart, O God, you will not spurn.

For in sacrifice you take no delight,
  burnt offering from me you would refuse,
my sacrifice, a contrite spirit.
  A humbled, contrite heart you will not spurn.

A humbled, contrite heart, O God, you will not spurn.

Gospel Acclamation Ezk33:11

Glory and praise to you, O Christ!
I take pleasure, not in the death of a wicked man
– it is the Lord who speaks –
but in the turning back of a wicked man
who changes his ways to win life.
Glory and praise to you, O Christ!

March 9th : First Reading The Ninevites repent, and God spares themA Reading from the Book of Jonah 3: 1-10

March 9th : First Reading 

The Ninevites repent, and God spares them

A Reading from the Book of Jonah 3: 1-10 
The word of the Lord was addressed to Jonah: ‘Up!’ he said ‘Go to Nineveh, the great city, and preach to them as I told you to.’ Jonah set out and went to Nineveh in obedience to the word of the Lord. Now Nineveh was a city great beyond compare: it took three days to cross it. Jonah went on into the city, making a day’s journey. He preached in these words, ‘Only forty days more and Nineveh is going to be destroyed.’ And the people of Nineveh believed in God; they proclaimed a fast and put on sackcloth, from the greatest to the least. The news reached the king of Nineveh, who rose from his throne, took off his robe, put on sackcloth and sat down in ashes. A proclamation was then promulgated throughout Nineveh, by decree of the king and his ministers, as follows: ‘Men and beasts, herds and flocks, are to taste nothing; they must not eat, they must not drink water. All are to put on sackcloth and call on God with all their might; and let everyone renounce his evil behaviour and the wicked things he has done. Who knows if God will not change his mind and relent, if he will not renounce his burning wrath, so that we do not perish?’ God saw their efforts to renounce their evil behaviour, and God relented: he did not inflict on them the disaster which he had threatened.

The Word of the Lord.

திங்கள், 7 மார்ச், 2022

மார்ச் 8 : நற்செய்தி வாசகம்நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

மார்ச் 8 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.”

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 8 : பதிலுரைப் பாடல்திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18 (பல்லவி: 17b)பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.

மார்ச் 8 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18 (பல்லவி: 17b)

பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.
3
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

15
ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16
ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். - பல்லவி

17
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

மார்ச் 8 : முதல் வாசகம்என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

மார்ச் 8 :  முதல் வாசகம்

என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11
ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 8th : Gospel How to prayA Reading from the Holy Gospel according to St.Matthew 6: 7-15

March 8th : Gospel 

How to pray

A Reading from the Holy Gospel according to St.Matthew 6: 7-15 
Jesus said to his disciples: ‘In your prayers do not babble as the pagans do, for they think that by using many words they will make themselves heard. Do not be like them; your Father knows what you need before you ask him. So you should pray like this:
‘Our Father in heaven,
may your name be held holy,
your kingdom come,
your will be done,
on earth as in heaven.
Give us today our daily bread.
And forgive us our debts, as we have forgiven those who are in debt to us.
And do not put us to the test,
but save us from the evil one.
‘Yes, if you forgive others their failings, your heavenly Father will forgive you yours; but if you do not forgive others, your Father will not forgive your failings either.’

The Word of the Lord.

March 8th : Responsorial PsalmPsalm 33(34):4-7,16-19 ©The Lord rescues the just in all their distress.

March 8th : Responsorial Psalm

Psalm 33(34):4-7,16-19 ©

The Lord rescues the just in all their distress.
Glorify the Lord with me.
  Together let us praise his name.
I sought the Lord and he answered me;
  from all my terrors he set me free.

The Lord rescues the just in all their distress.

Look towards him and be radiant;
  let your faces not be abashed.
This poor man called, the Lord heard him
  and rescued him from all his distress.

The Lord rescues the just in all their distress.

The Lord turns his face against the wicked
  to destroy their remembrance from the earth.
The Lord turns his eyes to the just
  and his ears to their appeal.

The Lord rescues the just in all their distress.

They call and the Lord hears
  and rescues them in all their distress.
The Lord is close to the broken-hearted;
  those whose spirit is crushed he will save.

The Lord rescues the just in all their distress.

Gospel Acclamation Mt4:4
Praise and honour to you, Lord Jesus!
Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Praise and honour to you, Lord Jesus!

March 8th : First Reading The word that goes out from my mouth does not return to me emptyA Reading from the Book of Isaiah 55: 10-11

March 8th : First Reading 

The word that goes out from my mouth does not return to me empty

A Reading from the Book of Isaiah 55: 10-11 

Thus says the Lord: ‘As the rain and the snow come down from the heavens and do not return without watering the earth, making it yield and giving growth to provide seed for the sower and bread for the eating, so the word that goes from my mouth does not return to me empty, without carrying out my will and succeeding in what it was sent to do.’

The Word of the Lord.

ஞாயிறு, 6 மார்ச், 2022

மார்ச் 7 : நற்செய்தி வாசகம்மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

மார்ச் 7 :  நற்செய்தி வாசகம்

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள். அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார்.

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.