இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 31 மார்ச், 2022

April 1st : Responsorial PsalmPsalm 33(34):16,18,19-21,23 The Lord is close to the broken-hearted.

April 1st  :  Responsorial Psalm

Psalm 33(34):16,18,19-21,23 

The Lord is close to the broken-hearted.
The Lord turns his face against the wicked
  to destroy their remembrance from the earth.
The just call and the Lord hears
  and rescues them in all their distress.

The Lord is close to the broken-hearted.

The Lord is close to the broken-hearted;
  those whose spirit is crushed he will save.
Many are the trials of the just man
  but from them all the Lord will rescue him.

The Lord is close to the broken-hearted.

He will keep guard over all his bones,
  not one of his bones shall be broken.
The Lord ransoms the souls of his servants.
  Those who hide in him shall not be condemned.

The Lord is close to the broken-hearted.

Gospel Acclamation Joel2:12-13

Praise to you, O Christ, king of eternal glory!
Now, now – it is the Lord who speaks –
come back to me with all your heart,
for I am all tenderness and compassion.
Praise to you, O Christ, king of eternal glory!

April 1st : First ReadingLet us lie in wait for the virtuous man and condemn him to a shameful deathWisdom 2: 1,12-22

April 1st  :  First Reading

Let us lie in wait for the virtuous man and condemn him to a shameful death

Wisdom 2: 1,12-22 
The godless say to themselves, with their misguided reasoning:
‘Our life is short and dreary,
nor is there any relief when man’s end comes,
nor is anyone known who can give release from Hades.
Let us lie in wait for the virtuous man, since he annoys us
and opposes our way of life,
reproaches us for our breaches of the law
and accuses us of playing false to our upbringing.
He claims to have knowledge of God,
and calls himself a son of the Lord.
Before us he stands, a reproof to our way of thinking,
the very sight of him weighs our spirits down;
his way of life is not like other men’s,
the paths he treads are unfamiliar.
In his opinion we are counterfeit;
he holds aloof from our doings as though from filth;
he proclaims the final end of the virtuous as happy
and boasts of having God for his father.
Let us see if what he says is true,
let us observe what kind of end he himself will have.
If the virtuous man is God’s son, God will take his part
and rescue him from the clutches of his enemies.
Let us test him with cruelty and with torture,
and thus explore this gentleness of his
and put his endurance to the proof.
Let us condemn him to a shameful death
since he will be looked after – we have his word for it.’
This is the way they reason, but they are misled,
their malice makes them blind.
They do not know the hidden things of God,
they have no hope that holiness will be rewarded,
they can see no reward for blameless souls.

The Word of the Lord.

புதன், 30 மார்ச், 2022

மார்ச் 31 : நற்செய்தி வாசகம்உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 31-47

மார்ச் 31 : நற்செய்தி வாசகம்

உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 31-47
அக்காலத்தில்

இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றிச் சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று.

நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். “என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்iலை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.

மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார். நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 31 : பதிலுரைப் பாடல்திபா 106: 19-20. 21-22. 23 (பல்லவி: 4a)பல்லவி: ஆண்டவரே! உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூரும்!

மார்ச் 31 :  பதிலுரைப் பாடல்

திபா 106: 19-20. 21-22. 23 (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவரே! உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூரும்!
19
அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
20
தங்கள் ‘மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். - பல்லவி

21
தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;
22
காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். - பல்லவி

23
ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.

மார்ச் 31 : முதல் வாசகம்உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14

மார்ச் 31 :  முதல் வாசகம்

உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14
அந்நாள்களில்

சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியை வார்த்துக்கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, ‘இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ என்று கூறிக்கொள்கிறார்கள்” என்றார். மேலும் ஆண்டவர் மோசேயிடம், “இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார்.

அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, “ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? ‘மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்’ என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். உம் அடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே” என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 31st : Gospel You place your hopes on Moses but Moses will be your accuserA Reading from the Holy Gospel according to St.John 5: 31-47

March 31st : Gospel 

You place your hopes on Moses but Moses will be your accuser

A Reading from the Holy Gospel according to St.John 5: 31-47 
Jesus said to the Jews:
‘Were I to testify on my own behalf,
my testimony would not be valid;
but there is another witness who can speak on my behalf,
and I know that his testimony is valid.
You sent messengers to John,
and he gave his testimony to the truth:
not that I depend on human testimony;
no, it is for your salvation that I speak of this.
John was a lamp alight and shining
and for a time you were content to enjoy the light that he gave.
But my testimony is greater than John’s:
the works my Father has given me to carry out,
these same works of mine testify
that the Father has sent me.
Besides, the Father who sent me
bears witness to me himself.
You have never heard his voice,
you have never seen his shape,
and his word finds no home in you
because you do not believe in the one he has sent.
‘You study the scriptures,
believing that in them you have eternal life;
now these same scriptures testify to me,
and yet you refuse to come to me for life!
As for human approval, this means nothing to me.
Besides, I know you too well: you have no love of God in you.
I have come in the name of my Father
and you refuse to accept me;
if someone else comes in his own name
you will accept him.
How can you believe,
since you look to one another for approval
and are not concerned
with the approval that comes from the one God?
Do not imagine that I am going to accuse you before the Father:
you place your hopes on Moses,
and Moses will be your accuser.
If you really believed him
you would believe me too,
since it was I that he was writing about;
but if you refuse to believe what he wrote,
how can you believe what I say?’

The Word of the Lord.

March 31st : Responsorial PsalmPsalm 105(106):19-23 O Lord, remember me out of the love you have for your people.

March 31st :  Responsorial Psalm

Psalm 105(106):19-23 

O Lord, remember me out of the love you have for your people.
They fashioned a calf at Horeb
  and worshipped an image of metal,
exchanging the God who was their glory
  for the image of a bull that eats grass.

O Lord, remember me out of the love you have for your people.

They forgot the God who was their saviour,
  who had done such great things in Egypt,
such portents in the land of Ham,
  such marvels at the Red Sea.

O Lord, remember me out of the love you have for your people.

For this he said he would destroy them,
  but Moses, the man he had chosen,
stood in the breach before him,
  to turn back his anger from destruction.

O Lord, remember me out of the love you have for your people.

Gospel Acclamation cf.Jn6:63,68

Glory to you, O Christ, you are the Word of God!
Your words are spirit, Lord, and they are life;
you have the message of eternal life.
Glory to you, O Christ, you are the Word of God!

March 31st : First Reading Moses pleads with the Lord his God to spare IsraelA Reading from the Book of Exodus 32: 7-14

March 31st :   First Reading 

Moses pleads with the Lord his God to spare Israel

A Reading from the Book of Exodus 32: 7-14 
The Lord spoke to Moses, ‘Go down now, because your people whom you brought out of Egypt have apostatised. They have been quick to leave the way I marked out for them; they have made themselves a calf of molten metal and have worshipped it and offered it sacrifice. “Here is your God, Israel,” they have cried “who brought you up from the land of Egypt!”’ the Lord said to Moses, ‘I can see how headstrong these people are! Leave me, now, my wrath shall blaze out against them and devour them; of you, however, I will make a great nation.’
  But Moses pleaded with the Lord his God. ‘Lord,’ he said ‘why should your wrath blaze out against this people of yours whom you brought out of the land of Egypt with arm outstretched and mighty hand? Why let the Egyptians say, “Ah, it was in treachery that he brought them out, to do them to death in the mountains and wipe them off the face of the earth”? Leave your burning wrath; relent and do not bring this disaster on your people. Remember Abraham, Isaac and Jacob, your servants to whom by your own self you swore and made this promise: I will make your offspring as many as the stars of heaven, and all this land which I promised I will give to your descendants, and it shall be their heritage for ever.’
  So the Lord relented and did not bring on his people the disaster he had threatened.

The Word of the Lord.

செவ்வாய், 29 மார்ச், 2022

மார்ச் 30 : நற்செய்தி வாசகம்இறந்தோரை தந்தை எழுப்பி, அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-30

மார்ச் 30 :  நற்செய்தி வாசகம்

இறந்தோரை தந்தை எழுப்பி, அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-30
அக்காலத்தில்

இயேசு யூதர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்” என்றார். இவ்வாறு அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள்.

தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.

என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார். அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.

இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர். நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 30 : பதிலுரைப் பாடல்திபா 145: 8-9. 13cd-14. 17-18 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

மார்ச் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 13cd-14. 17-18 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.
8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

13cd
ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.
14
தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். - பல்லவி

17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 11: 25a, 26

‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்,’ என்கிறார் ஆண்டவர்.