இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 20 ஜூன், 2022

ஜூன் 21 : முதல் வாசகம்என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் எருசலேமைப் பாதுகாத்து விடுவிப்பேன்.அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 19: 9-11, 14-21, 31-35, 36

ஜூன் 21 :  முதல் வாசகம்

என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் எருசலேமைப் பாதுகாத்து விடுவிப்பேன்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 19: 9-11, 14-21, 31-35, 36
அந்நாள்களில்

அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படை திரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று, எசேக்கி யாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி, “யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: ‘எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது’ என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்து விடாதே. இதோ! அசீரிய மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?"

எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார். மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: “ கெருபுகள் மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! ஆண்டவரே! நீர் செவிசாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும் சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக! ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்! அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே அவற்றை அழிக்க முடிந்தது. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.”

அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன். அவனுக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள். ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்!

ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்குள் அவன் நுழைய மாட்டான்; அதில் அம்பு எய்ய மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்ப மாட்டான். அவன் வந்த வழியே திரும்பிப் போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர். இந்நகரை நான் பாதுகாப்பேன்; என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்.”

அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர். எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 21st : GospelTreat others as you would like them to treat youA Reading from the Holy Gospel according to St.Matthew 7: 6,12-14

June 21st : Gospel

Treat others as you would like them to treat you

A Reading from the Holy Gospel according to St.Matthew 7: 6,12-14 ©
Jesus said to his disciples: ‘Do not give dogs what is holy; and do not throw your pearls in front of pigs, or they may trample them and then turn on you and tear you to pieces.
  ‘So always treat others as you would like them to treat you; that is the meaning of the Law and the Prophets.
  ‘Enter by the narrow gate, since the road that leads to perdition is wide and spacious, and many take it; but it is a narrow gate and a hard road that leads to life, and only a few find it.’

The Word of the Lord.

June 21st : Responsorial PsalmPsalm 47(48):2-4,10-11 God upholds his city for ever.The Lord is great and worthy to be praised in the city of our God.His holy mountain rises in beauty, the joy of all the earth.

June 21st : Responsorial Psalm

Psalm 47(48):2-4,10-11 

God upholds his city for ever.

The Lord is great and worthy to be praised
  in the city of our God.
His holy mountain rises in beauty,
  the joy of all the earth.
God upholds his city for ever.

Mount Zion, true pole of the earth,
  the Great King’s city!
God, in the midst of its citadels,
  has shown himself its stronghold.

God upholds his city for ever.

O God, we ponder your love
  within your temple.
Your praise, O God, like your name
  reaches the ends of the earth.

God upholds his city for ever.

Gospel Acclamation Mt11:25

Alleluia, alleluia!

Blessed are you, Father,
Lord of heaven and earth,
for revealing the mysteries of the kingdom
to mere children.
Alleluia!

June 21st : First ReadingThe Lord protects Jerusalem from Sennacherib and the Assyrians2 Kings 19:9-11,14-21,31-36

June 21st :  First Reading

The Lord protects Jerusalem from Sennacherib and the Assyrians

2 Kings 19:9-11,14-21,31-36 ©
Sennacherib, King of the Assyrians, sent messengers to Hezekiah saying, ‘Tell this to Hezekiah king of Judah, “Do not let your God on whom you are relying deceive you, when he says: Jerusalem shall not fall into the power of the king of Assyria. You have learnt by now what the kings of Assyria have done to every country, putting them all under the ban. Are you likely to be spared?”’
  Hezekiah took the letter from the hands of the messenger and read it; he then went up to the Temple of the Lord and spread it out before the Lord. Hezekiah said this prayer in the presence of the Lord, ‘O Lord of Hosts, God of Israel, enthroned on the cherubs, you alone are God of all the kingdoms of the earth, you have made heaven and earth.
‘Give ear, Lord, and listen.
Open your eyes, Lord, and see.
Hear the words of Sennacherib
who has sent to insult the living God.
‘It is true, O Lord, that the kings of Assyria have exterminated all the nations, they have thrown their gods on the fire, for these were not gods but the work of men’s hands, wood and stone, and hence they have destroyed them. But now, O Lord our God, save us from his hand, I pray you, and let all the kingdoms of the earth know that you alone are God, Lord.’
  Then Isaiah son of Amoz sent to Hezekiah. ‘The Lord, the God of Israel,’ he said, ‘says this, “I have heard the prayer you have addressed to me about Sennacherib king of Assyria.” Here is the oracle that the Lord has pronounced against him:
‘“She despises you, she scorns you,
the virgin, daughter of Zion;
she tosses her head behind you,
the daughter of Jerusalem.
A remnant shall go out from Jerusalem,
and survivors from Mount Zion.
The jealous love of the Lord of Hosts shall accomplish this.”
‘This, then, is what the Lord says about the king of Assyria:
‘“He will not enter this city,
he will let fly no arrow against it,
confront it with no shield,
throw up no earthwork against it.
By the road that he came on he will return;
he shall not enter this city. It is the Lord who speaks.
I will protect this city and save it
for my own sake and for the sake of my servant David.”’
That same night the angel of the Lord went out and struck down a hundred and eighty-five thousand men in the Assyrian camp. Sennacherib struck camp and left; he returned home and stayed in Nineveh.

The Word of the Lord.

ஞாயிறு, 19 ஜூன், 2022

ஜூன் 20 : நற்செய்தி வாசகம்முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5

ஜூன் 20 :  நற்செய்தி வாசகம்

முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.

உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், ‘உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 20 : பதிலுரைப் பாடல்திபா 60: 1. 2-3. 10-12 (பல்லவி: 5b காண்க)பல்லவி: எங்களுக்குத் துணை செய்யும் ஆண்டவரே, எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!

ஜூன் 20 :  பதிலுரைப் பாடல்

திபா 60: 1. 2-3. 10-12 (பல்லவி: 5b காண்க)

பல்லவி: எங்களுக்குத் துணை செய்யும் ஆண்டவரே, எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!
1
கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்; எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும். - பல்லவி

2
நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது;
3
உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். - பல்லவி

10
கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!
11
எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்.
12
கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!

 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. அல்லேலூயா.

ஜூன் 20 : முதல் வாசகம்ஆண்டவர் இஸ்ரயேலைத் தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 17: 5-8, 13-15, 18

ஜூன் 20 : முதல் வாசகம்

ஆண்டவர் இஸ்ரயேலைத் தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 17: 5-8, 13-15, 18
அந்நாள்களில்

அசீரியா மன்னன், நாடு முழுவதன் மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான். ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.

ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர். மேலும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும், இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின் படியும் நடந்து வந்தனர்.

ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: “உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.” ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்; ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; ‘வேற்றினத் தாரைப் பின்பற்றலாகாது’ என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர்.

எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 20th : Gospel Do not judge, and you will not be judgedA Reading from the Holy Gospel according to St.Matthew 7: 1-5

June 20th : Gospel 

Do not judge, and you will not be judged

A Reading from the Holy Gospel according to St.Matthew 7: 1-5 
Jesus said to his disciples: ‘Do not judge, and you will not be judged; because the judgements you give are the judgements you will get, and the amount you measure out is the amount you will be given. Why do you observe the splinter in your brother’s eye and never notice the plank in your own? How dare you say to your brother, “Let me take the splinter out of your eye,” when all the time there is a plank in your own? Hypocrite! Take the plank out of your own eye first, and then you will see clearly enough to take the splinter out of your brother’s eye.’

The Word of the Lord.

June 20th : Responsorial PsalmPsalm 59(60):3-5,12-13 ©Hear us, O Lord, and help us.O God, you have rejected us and broken us. You have been angry; come back to us.

June 20th : Responsorial Psalm

Psalm 59(60):3-5,12-13 ©

Hear us, O Lord, and help us.

O God, you have rejected us and broken us.
  You have been angry; come back to us.
Hear us, O Lord, and help us.

You have made the earth quake, torn it open.
  Repair what is shattered for it sways.
You have inflicted hardships on your people
  and made us drink a wine that dazed us.

Hear us, O Lord, and help us.

Will you utterly reject us, O God,
  and no longer march with our armies?
Give us help against the foe:
  for the help of man is vain.

Hear us, O Lord, and help us.

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!

Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

June 20th : First ReadingThere was none left, but the tribe of Judah only2 Kings 17 :5-8,13-15,18

June 20th : First Reading

There was none left, but the tribe of Judah only

2 Kings 17 :5-8,13-15,18 
The king of Assyria invaded the whole country and, coming to Samaria, laid siege to it for three years. In the ninth year of Hoshea, the king of Assyria captured Samaria and deported the Israelites to Assyria. He settled them in Halah on the Habor, a river of Gozan, and in the cities of the Medes.
  This happened because the Israelites had sinned against the Lord their God who had brought them out of the land of Egypt, out of the grip of Pharaoh king of Egypt. They worshipped other gods, they followed the practices of the nations that the Lord had dispossessed for them.
  And yet through all the prophets and all the seers, the Lord had given Israel and Judah this warning, ‘Turn from your wicked ways and keep my commandments and my laws in accordance with the entire Law I laid down for your fathers and delivered to them through my servants the prophets.’ But they would not listen, they were more stubborn than their ancestors had been who had no faith in the Lord their God. They despised his laws and the covenant he had made with their ancestors, and the warnings he had given them. They pursued emptiness, and themselves became empty through copying the nations round them although the Lord had ordered them not to act as they did. For this, the Lord was enraged with Israel and thrust them away from him. There was none left but the tribe of Judah only.

The Word of the Lord.