இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 22 ஜூன், 2022

June 23rd : Responsorial PsalmPsalm 78(79):1-5,8-9Rescue us, O Lord, for the glory of your name.

June 23rd : Responsorial Psalm

Psalm 78(79):1-5,8-9

Rescue us, O Lord, for the glory of your name.
O God, the nations have invaded your land,
they have profaned your holy temple.
They have made Jerusalem a heap of ruins.
They have handed over the bodies of your servants
as food to feed the birds of heaven
and the flesh of your faithful to the beasts of the earth.

Rescue us, O Lord, for the glory of your name.

They have poured out blood like water in Jerusalem;
no one is left to bury the dead.
We have become the taunt of our neighbours,
the mockery and scorn of those who surround us.
How long, O Lord? Will you be angry for ever;
how long will your anger burn like fire?

Rescue us, O Lord, for the glory of your name.

Do not hold the guilt of our fathers against us.
Let your compassion hasten to meet us;
we are left in the depths of distress.

Rescue us, O Lord, for the glory of your name.

O God our saviour, come to our help.
Come for the sake of the glory of your name.
O Lord our God, forgive us our sins;
rescue us for the sake of your name.

Rescue us, O Lord, for the glory of your name.

Gospel Acclamation Heb4:12

Alleluia, alleluia!
The word of God is something alive and active:
it can judge secret emotions and thoughts.
Alleluia!

June 23rd : First ReadingThe first deportation into captivity in Babylon.A Reading from the Second Book of Kings 24: 8-17.

June 23rd :  First Reading

The first deportation into captivity in Babylon.

A Reading from the Second Book of Kings 24: 8-17.
Jehoiachin was eighteen years old when he came to the throne, and he reigned for three months in Jerusalem. His mother’s name was Nehushta, daughter of Elnathan, from Jerusalem. He did what is displeasing to the Lord, just as his father had done.
At that time the troops of Nebuchadnezzar king of Babylon marched on Jerusalem, and the city was besieged. Nebuchadnezzar king of Babylon himself came to attack the city while his troops were besieging it. Then Jehoiachin king of Judah surrendered to the king of Babylon, he, his mother, his officers, his nobles and his eunuchs, and the king of Babylon took them prisoner. This was in the eighth year of King Nebuchadnezzar.
The latter carried off all the treasures of the Temple of the Lord and the treasures of the royal palace, and broke up all the golden furnishings that Solomon king of Israel had made for the sanctuary of the Lord, as the Lord had foretold. He carried off all Jerusalem into exile, all the nobles and all the notables, ten thousand of these were exiled, with all the blacksmiths and metalworkers; only the poorest people in the country were left behind. He deported Jehoiachin to Babylon, as also the king’s mother, his eunuchs and the nobility of the country; he made them all leave Jerusalem for exile in Babylon. All the men of distinction, seven thousand of them, the blacksmiths and metalworkers, one thousand of them, all of them men capable of bearing arms, were led into exile in Babylon by the king of Babylon.
The king of Babylon made Mattaniah, Jehoiachin’s uncle, king in succession to him, and changed his name to Zedekiah.

The Word of the Lord

செவ்வாய், 21 ஜூன், 2022

ஜூன் 22 : நற்செய்தி வாசகம்போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

ஜூன் 22 :  நற்செய்தி வாசகம்

போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 22 : பதிலுரைப் பாடல்திபா 119: 33-34. 35-36. 37,40 (பல்லவி: 33a)பல்லவி: ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியைக் கற்றுத்தாரும்.

ஜூன் 22 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 33-34. 35-36. 37,40 (பல்லவி: 33a)

பல்லவி: ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியைக் கற்றுத்தாரும்.
33
ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.
34
உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். - பல்லவி

35
உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
36
உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; தன்னலத்தை நாட விடாதேயும். - பல்லவி

37
வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்; உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும்.
40
உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! 

நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூன் 22 : முதல் வாசகம்ஆண்டவர் திருமுன் அரசர் யோசபாத்து உடன்படிக்கை செய்துகொண்டார்.அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 22: 8-13; 23: 1-3

ஜூன் 22 :  முதல் வாசகம்

ஆண்டவர் திருமுன் அரசர் யோசபாத்து உடன்படிக்கை செய்துகொண்டார்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 22: 8-13; 23: 1-3
அந்நாள்களில்

தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, “ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்” என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, “அரசே! உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின் இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர்” என்று சொன்னான். மேலும் அவன் அரசரிடம், “குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார்” என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான். அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.

பின் குரு இல்க்கியாவையும், சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்கோரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, “அரசர் இட்ட கட்டளை இதுவே: நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது” என்றார்.

அரசரது அழைப்புக்கிணங்கி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம் வந்து குழுமினர். அப்பொழுது அரசரும், யூதா நாட்டினர் அனைவரும், எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தனர். அரசரோ ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் காதில் விழுமாறு வாசித்தார். அரசர் தூணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்கு முறைகளையும், நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 22nd : Gospel You will be able to tell them by their fruitsA Reading from the Holy Gospel according to St.Matthew 7: 15-20

June 22nd :  Gospel 

You will be able to tell them by their fruits

A Reading from the Holy Gospel according to St.Matthew 7: 15-20 
Jesus said to his disciples: ‘Beware of false prophets who come to you disguised as sheep but underneath are ravenous wolves. You will be able to tell them by their fruits. Can people pick grapes from thorns, or figs from thistles? In the same way, a sound tree produces good fruit but a rotten tree bad fruit. A sound tree cannot bear bad fruit, nor a rotten tree bear good fruit. Any tree that does not produce good fruit is cut down and thrown on the fire. I repeat, you will be able to tell them by their fruits.’

The Word of the Lord.

June 22nd : Responsorial PsalmPsalm 118(119):33-37,40 ©Lord, teach me your statutes.

June 22nd :  Responsorial Psalm

Psalm 118(119):33-37,40 ©

Lord, teach me your statutes.
Teach me the demands of your statutes
  and I will keep them to the end.
Train me to observe your law,
  to keep it with my heart.

Lord, teach me your statutes.

Guide me in the path of your commands;
  for there is my delight.
Bend my heart to your will
  and not to love of gain.

Lord, teach me your statutes.

Keep my eyes from what is false;
  by your word, give me life.
See, I long for your precepts;
  then in your justice, give me life.

Lord, teach me your statutes.

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!

June 22nd : First ReadingThe Book of the Law is found in the Temple of the Lord2 Kings 22 : 8-13,23:1-3

June 22nd :  First Reading

The Book of the Law is found in the Temple of the Lord

2 Kings 22 : 8-13,23:1-3 ©
The high priest Hilkiah said to Shaphan the secretary, ‘I have found the Book of the Law in the Temple of the Lord.’’’ And Hilkiah gave the book to Shaphan, who read it. Shaphan the secretary went to the king and reported to him as follows, ‘Your servants’ he said ‘have melted down the silver which was in the Temple and have handed it over to the masters of works attached to the Temple of the Lord.’ Then Shaphan the secretary informed the king, ‘Hilkiah the priest has given me a book’; and Shaphan read it aloud in the king’s presence.
  On hearing the contents of the Book of the Law, the king tore his garments, and gave the following order to Hilkiah the priest, Ahikam son of Shaphan, Achbor son of Micaiah, Shaphan the secretary and Asaiah the king’s minister: ‘Go and consult the Lord, on behalf of me and the people, about the contents of this book that has been found. Great indeed must be the anger of the Lord blazing out against us because our ancestors did not obey what this book says by practising everything written in it.’
  The king then had all the elders of Judah and of Jerusalem summoned to him, and the king went up to the Temple of the Lord with all the men of Judah and all the inhabitants of Jerusalem, priests, prophets and all the people, of high or low degree. In their hearing he read out everything that was said in the book of the covenant found in the Temple of the Lord. The king stood beside the pillar, and in the presence of the Lord he made a covenant to follow the Lord and keep his commandments and decrees and laws with all his heart and soul, in order to enforce the terms of the covenant as written in that book. All the people gave their allegiance to the covenant.

The Word of the Lord.

திங்கள், 20 ஜூன், 2022

ஜூன் 21 : நற்செய்தி வாசகம்பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6, 12-14

ஜூன் 21 : நற்செய்தி வாசகம்

பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6, 12-14
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 21 : பதிலுரைப் பாடல்திபா 48: 1-2a. 2b-3. 9-10 (பல்லவி: 8d)பல்லவி: கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.

ஜூன் 21 :  பதிலுரைப் பாடல்

திபா 48: 1-2a. 2b-3. 9-10 (பல்லவி: 8d)

பல்லவி: கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.
1
ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.
2a
தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. - பல்லவி

2b
மாவேந்தரின் நகரும் அதுவே.
3
அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். - பல்லவி

9
கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.
10
கடவுளே! உமது பெயரைப்போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! 

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.