இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 26 ஜூன், 2022

June 27th : First ReadingBecause of your crimes I will crush you into the groundA Reading from the Book of Amos 2: 6-10,13-16

June 27th :  First Reading

Because of your crimes I will crush you into the ground

A Reading from the Book of Amos 2: 6-10,13-16 
The Lord says this:
For the three crimes, the four crimes, of Israel
I have made my decree and will not relent:
because they have sold the virtuous man for silver
and the poor man for a pair of sandals,
because they trample on the heads of ordinary people
and push the poor out of their path,
because father and son have both resorted to the same girl,
profaning my holy name,
because they stretch themselves out by the side of every altar
on clothes acquired as pledges,
and drink the wine of the people they have fined
in the house of their god...
Yet it was I who overthrew the Amorites when they attacked,
men tall as cedars and strong as oaks,
I who destroyed them,
both fruit above ground
and root below.
It was I who brought you out of the land of Egypt
and for forty years led you through the wilderness
to take possession of the Amorite’s country.
See then how I am going to crush you into the ground
as the threshing-sledge crushes when clogged by straw;
flight will not save even the swift,
the strong man will find his strength useless,
the mighty man will be powerless to save himself.
The bowman will not stand his ground,
the fast runner will not escape,
the horseman will not save himself,
the bravest warriors will run away naked that day.
It is the Lord who speaks.

The Word of the Lord.

சனி, 25 ஜூன், 2022

ஜூன் 26 : நற்செய்தி வாசகம்நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-62

ஜூன் 26 :  நற்செய்தி வாசகம்

நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-62
அக்காலத்தில்

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 26 : இரண்டாம் வாசகம்உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1, 13-18

ஜூன் 26 :  இரண்டாம் வாசகம்

உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1, 13-18
சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். “உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!

எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 சாமு 3: 9; யோவா 6: 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

ஜூன் 26 : பதிலுரைப் பாடல்திபா 16: 1-2a,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 5a)பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

ஜூன் 26 :  பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2a,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2a
நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

9
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். - பல்லவி

11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி

ஜூன் 26 : முதல் வாசகம்எலிசா புறப்பட்டுப் போய், எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16b, 19-21

ஜூன் 26 :  முதல் வாசகம்

எலிசா புறப்பட்டுப் போய், எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16b, 19-21

அந்நாள்களில்
ஆண்டவர் எலியாவை நோக்கி, “ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்” என்றார்.

எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன் பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார். அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார்.

எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 26th : Gospel Jesus sets out for JerusalemA Reading from the Holy Gospel according to St.Luke 9: 51-62

June 26th :  Gospel 

Jesus sets out for Jerusalem

A Reading from the Holy Gospel according to St.Luke 9: 51-62 
As the time drew near for him to be taken up to heaven, Jesus resolutely took the road for Jerusalem and sent messengers ahead of him. These set out, and they went into a Samaritan village to make preparations for him, but the people would not receive him because he was making for Jerusalem. Seeing this, the disciples James and John said, ‘Lord, do you want us to call down fire from heaven to burn them up?’ But he turned and rebuked them, and they went off to another village.
  As they travelled along they met a man on the road who said to him, ‘I will follow you wherever you go.’ Jesus answered, ‘Foxes have holes and the birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head.’
  Another to whom he said, ‘Follow me’, replied, ‘Let me go and bury my father first.’ But he answered, ‘Leave the dead to bury their dead; your duty is to go and spread the news of the kingdom of God.’
  Another said, ‘I will follow you, sir, but first let me go and say goodbye to my people at home.’ Jesus said to him, ‘Once the hand is laid on the plough, no one who looks back is fit for the kingdom of God.’

The Word of the Lord.

June 26th : Second ReadingWhen Christ freed us, he meant us to remain freeGalatians 5:1,13-18

June 26th : Second Reading

When Christ freed us, he meant us to remain free

Galatians 5:1,13-18 
When Christ freed us, he meant us to remain free. Stand firm, therefore, and do not submit again to the yoke of slavery. My brothers, you were called, as you know, to liberty; but be careful, or this liberty will provide an opening for self-indulgence. Serve one another, rather, in works of love, since the whole of the Law is summarised in a single command: Love your neighbour as yourself. If you go snapping at each other and tearing each other to pieces, you had better watch or you will destroy the whole community.
  Let me put it like this: if you are guided by the Spirit you will be in no danger of yielding to self-indulgence, since self-indulgence is the opposite of the Spirit, the Spirit is totally against such a thing, and it is precisely because the two are so opposed that you do not always carry out your good intentions. If you are led by the Spirit, no law can touch you.

The Word of the Lord.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

June 26th : Responsorial PsalmPsalm 15(16):1-2,5,7-11 ©O Lord, it is you who are my portion

June 26th : Responsorial Psalm

Psalm 15(16):1-2,5,7-11 ©

O Lord, it is you who are my portion.
Preserve me, God, I take refuge in you.
  I say to the Lord: ‘You are my God.
O Lord, it is you who are my portion and cup;
  it is you yourself who are my prize.’

O Lord, it is you who are my portion.

I will bless the Lord who gives me counsel,
  who even at night directs my heart.
I keep the Lord ever in my sight:
  since he is at my right hand, I shall stand firm.

O Lord, it is you who are my portion.

And so my heart rejoices, my soul is glad;
  even my body shall rest in safety.
For you will not leave my soul among the dead,
  nor let your beloved know decay.

O Lord, it is you who are my portion.

You will show me the path of life,
  the fullness of joy in your presence,
  at your right hand happiness for ever.
O Lord, it is you who are my portion.

June 26th : First ReadingElisha leaves the plough to follow Elijah1 Kings 19 :16,19-21

June 26th : First Reading

Elisha leaves the plough to follow Elijah

1 Kings 19 :16,19-21 ©
The Lord said to Elijah, ‘Go, you are to anoint Elisha son of Shaphat, of Abel Meholah, as prophet to succeed you.’
  Leaving there, Elijah came on Elisha son of Shaphat as he was ploughing behind twelve yoke of oxen, he himself being with the twelfth. Elijah passed near to him and threw his cloak over him. Elisha left his oxen and ran after Elijah. ‘Let me kiss my father and mother, then I will follow you’ he said. Elijah answered, ‘Go, go back; for have I done anything to you?’ Elisha turned away, took the pair of oxen and slaughtered them. He used the plough for cooking the oxen, then gave to his men, who ate. He then rose, and followed Elijah and became his servant.

The Word of the Lord.

வெள்ளி, 24 ஜூன், 2022

ஜுன் 25 : நற்செய்தி வாசகம்இக்குழந்தையின் பெயர் யோவான்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80

ஜுன் 25  :  நற்செய்தி வாசகம்

இக்குழந்தையின் பெயர் யோவான்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.

ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.

அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.