இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

August 19th : GospelThe commandments of loveA Reading from the Holy Gospel according to St.Matthew 22: 34-40

August 19th : Gospel

The commandments of love

A Reading from the Holy Gospel according to St.Matthew 22: 34-40 
When the Pharisees heard that Jesus had silenced the Sadducees they got together and, to disconcert him, one of them put a question, ‘Master, which is the greatest commandment of the Law?’ Jesus said, ‘You must love the Lord your God with all your heart, with all your soul, and with all your mind. This is the greatest and the first commandment. The second resembles it: You must love your neighbour as yourself. On these two commandments hang the whole Law, and the Prophets also.’

The Word of the Lord.

August 19th : Responsorial PsalmPsalm 106(107): 2-9 O give thanks to the Lord for he is good, for his love has no end.or Alleluia!

August 19th : Responsorial Psalm

Psalm 106(107): 2-9 

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!
Let them say this, the Lord’s redeemed,
  whom he redeemed from the hand of the foe
and gathered from far-off lands,
  from east and west, north and south.

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!

Some wandered in the desert, in the wilderness,
  finding no way to a city they could dwell in.
Hungry they were and thirsty;
  their soul was fainting within them.

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!

Then they cried to the Lord in their need
  and he rescued them from their distress
and he led them along the right way,
  to reach a city they could dwell in.

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!

Let them thank the Lord for his love,
  for the wonders he does for men:
for he satisfies the thirsty soul;
  he fills the hungry with good things.

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!

August 19th : First Reading A vision of Israel's death and resurrectionA Reading from the Book of Ezekiel 37: 1-14

August 19th : First Reading 

A vision of Israel's death and resurrection

A Reading from the Book of Ezekiel 37: 1-14 
The hand of the Lord was laid on me, and he carried me away by the spirit of the Lord and set me down in the middle of a valley, a valley full of bones. He made me walk up and down among them. There were vast quantities of these bones on the ground the whole length of the valley; and they were quite dried up. He said to me, ‘Son of man, can these bones live?’ I said, ‘You know, Lord.’ He said, ‘Prophesy over these bones. Say, “Dry bones, hear the word of the Lord. The Lord says this to these bones: I am now going to make the breath enter you, and you will live. I shall put sinews on you, I shall make flesh grow on you, I shall cover you with skin and give you breath, and you will live; and you will learn that I am the Lord.”’ I prophesied as I had been ordered. While I was prophesying, there was a noise, a sound of clattering; and the bones joined together. I looked, and saw that they were covered with sinews; flesh was growing on them and skin was covering them, but there was no breath in them. He said to me, ‘Prophesy to the breath; prophesy, son of man. Say to the breath, “The Lord says this: Come from the four winds, breath; breathe on these dead; let them live!”’ I prophesied as he had ordered me, and the breath entered them; they came to life again and stood up on their feet, a great, an immense army.
  Then he said, ‘Son of man, these bones are the whole House of Israel. They keep saying, “Our bones are dried up, our hope has gone; we are as good as dead.” So prophesy. Say to them, “The Lord says this: I am now going to open your graves; I mean to raise you from your graves, my people, and lead you back to the soil of Israel. And you will know that I am the Lord, when I open your graves and raise you from your graves, my people. And I shall put my spirit in you, and you will live, and I shall resettle you on your own soil; and you will know that I, the Lord, have said and done this – it is the Lord who speaks.”’

The Word of the Lord.

புதன், 17 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 18 : நற்செய்தி வாசகம்எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

ஆகஸ்ட் 18 :  நற்செய்தி வாசகம்

எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14
அக்காலத்தில்

இயேசு மீண்டும் உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.

அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.

அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார்.

இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 18 : பதிலுரைப் பாடல்திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: எசே 36: 25)பல்லவி: தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் அனைவரும் தூய்மையாவீர்கள்.

ஆகஸ்ட் 18 :  பதிலுரைப் பாடல்

திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: எசே 36: 25)

பல்லவி: தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் அனைவரும் தூய்மையாவீர்கள்.
10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். - பல்லவி

16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா! 

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

ஆகஸ்ட் 18 : முதல் வாசகம்நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 23-28

ஆகஸ்ட் 18 :  முதல் வாசகம்

நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 23-28
இறைவன் கூறுவது:

நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலை வழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 18th : Gospel Invite everyone you can to the weddingA Reading from the Holy Gospel according to St.Matthew 22: 1-14

August 18th : Gospel 

Invite everyone you can to the wedding

A Reading from the Holy Gospel according to St.Matthew 22: 1-14 
Jesus began to speak to the chief priests and elders of the people in parables: ‘The kingdom of heaven may be compared to a king who gave a feast for his son’s wedding. He sent his servants to call those who had been invited, but they would not come. Next he sent some more servants. “Tell those who have been invited” he said “that I have my banquet all prepared, my oxen and fattened cattle have been slaughtered, everything is ready. Come to the wedding.” But they were not interested: one went off to his farm, another to his business, and the rest seized his servants, maltreated them and killed them. The king was furious. He despatched his troops, destroyed those murderers and burnt their town. Then he said to his servants, “The wedding is ready; but as those who were invited proved to be unworthy, go to the crossroads in the town and invite everyone you can find to the wedding.” So these servants went out on to the roads and collected together everyone they could find, bad and good alike; and the wedding hall was filled with guests. When the king came in to look at the guests he noticed one man who was not wearing a wedding garment, and said to him, “How did you get in here, my friend, without a wedding garment?” And the man was silent. Then the king said to the attendants, “Bind him hand and foot and throw him out into the dark, where there will be weeping and grinding of teeth.” For many are called, but few are chosen.’

The Word of the Lord.

August 18th : Responsorial PsalmPsalm 50(51):12-15,18-19 ©I shall pour clean water over you and all your sins will be washed away.

August 18th : Responsorial Psalm

Psalm 50(51):12-15,18-19 ©

I shall pour clean water over you and all your sins will be washed away.
A pure heart create for me, O God,
  put a steadfast spirit within me.
Do not cast me away from your presence,
  nor deprive me of your holy spirit.

I shall pour clean water over you and all your sins will be washed away.

Give me again the joy of your help;
  with a spirit of fervour sustain me,
that I may teach transgressors your ways
  and sinners may return to you.

I shall pour clean water over you and all your sins will be washed away.

For in sacrifice you take no delight,
  burnt offering from me you would refuse,
my sacrifice, a contrite spirit.
  A humbled, contrite heart you will not spurn.

I shall pour clean water over you and all your sins will be washed away.

Gospel Acclamation Ps118:27

Alleluia, alleluia!
Make me grasp the way of your precepts,
and I will muse on your wonders.
Alleluia!

August 18th : First ReadingI will remove the heart of stone from your bodies and give you a heart of fleshA Reading from the Book of Ezekiel 36: 23-28

August 18th : First Reading

I will remove the heart of stone from your bodies and give you a heart of flesh

A Reading from the Book of Ezekiel 36: 23-28 
The word of the Lord was addressed to me as follows: ‘I mean to display the holiness of my great name, which has been profaned among the nations, which you have profaned among them. And the nations will learn that I am the Lord – it is the Lord who speaks – when I display my holiness for your sake before their eyes. Then I am going to take you from among the nations and gather you together from all the foreign countries, and bring you home to your own land. I shall pour clean water over you and you will be cleansed; I shall cleanse you of all your defilement and all your idols. I shall give you a new heart, and put a new spirit in you; I shall remove the heart of stone from your bodies and give you a heart of flesh instead. I shall put my spirit in you, and make you keep my laws and sincerely respect my observances. You will live in the land which I gave your ancestors. You shall be my people and I will be your God.’

The Word of the Lord.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 17 : நற்செய்தி வாசகம்நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

ஆகஸ்ட் 17 :  நற்செய்தி வாசகம்

நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16
அக்காலத்தில்

இயேசு கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.

அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.