இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 31 : முதல் வாசகம்நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9

ஆகஸ்ட் 31 : முதல் வாசகம்

நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9
சகோதரர் சகோதரிகளே,

ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேச முடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன். நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்?

ஏனெனில், ஒருவர் ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’ என்றும் வேறொருவர் ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’ என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப் போக்கில்தானே நடக்கிறீர்கள்? அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டு ஆற்றுகிறார்கள். நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 31st : Gospel He would not allow them to speak because they knew he was the ChristA Reading from the Holy Gospel according to St.Luke 4: 38-44

August 31st :  Gospel 

He would not allow them to speak because they knew he was the Christ

A Reading from the Holy Gospel according to St.Luke 4: 38-44 
Leaving the synagogue, Jesus went to Simon’s house. Now Simon’s mother-in-law was suffering from a high fever and they asked him to do something for her. Leaning over her he rebuked the fever and it left her. And she immediately got up and began to wait on them.
  At sunset all those who had friends suffering from diseases of one kind or another brought them to him, and laying his hands on each he cured them. Devils too came out of many people, howling, ‘You are the Son of God.’ But he rebuked them and would not allow them to speak because they knew that he was the Christ.
  When daylight came he left the house and made his way to a lonely place. The crowds went to look for him, and when they had caught up with him they wanted to prevent him leaving them, but he answered, ‘I must proclaim the Good News of the kingdom of God to the other towns too, because that is what I was sent to do.’ And he continued his preaching in the synagogues of Judaea.

The Word of the Lord.

August 31st : Responsorial PsalmPsalm 32(33): 12-15,20-21 Happy the people the Lord has chosen as his own.

August 31st :  Responsorial Psalm

Psalm 32(33): 12-15,20-21 

Happy the people the Lord has chosen as his own.
They are happy, whose God is the Lord,
  the people he has chosen as his own.
From the heavens the Lord looks forth,
  he sees all the children of men.

Happy the people the Lord has chosen as his own.

From the place where he dwells he gazes
  on all the dwellers on the earth;
he who shapes the hearts of them all;
  and considers all their deeds.

Happy the people the Lord has chosen as his own.

Our soul is waiting for the Lord.
  The Lord is our help and our shield.
In him do our hearts find joy.
  We trust in his holy name.

Happy the people the Lord has chosen as his own.

Gospel Acclamation 1P1:25

Alleluia, alleluia!
The word of the Lord remains for ever:
What is this word?
It is the Good News that has been brought to you.
Alleluia!

August 31st : First ReadingNeither the planter nor the waterer matters, only God, who makes things growA Reading from the First Letter of St.Paul to the Corinthians 3: 1-9

August 31st : First Reading

Neither the planter nor the waterer matters, only God, who makes things grow

A Reading from the First Letter of  St.Paul to the Corinthians 3: 1-9 
Brothers, I myself was unable to speak to you as people of the Spirit: I treated you as sensual men, still infants in Christ. What I fed you with was milk, not solid food, for you were not ready for it; and indeed, you are still not ready for it since you are still unspiritual. Isn’t that obvious from all the jealousy and wrangling that there is among you, from the way that you go on behaving like ordinary people? What could be more unspiritual than your slogans, ‘I am for Paul’ and ‘I am for Apollos’?
  After all, what is Apollos and what is Paul? They are servants who brought the faith to you. Even the different ways in which they brought it were assigned to them by the Lord. I did the planting, Apollos did the watering, but God made things grow. Neither the planter nor the waterer matters: only God, who makes things grow. It is all one who does the planting and who does the watering, and each will duly be paid according to his share in the work. We are fellow workers with God; you are God’s farm, God’s building.

The Word of the Lord.

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 30 : நற்செய்தி வாசகம்நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

ஆகஸ்ட் 30 :  நற்செய்தி வாசகம்

நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37
அக்காலத்தில்

இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது.

“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று.

எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 30 : பதிலுரைப் பாடல்திபா 145: 8-9. 10-11. 12-13ab. 13cd-14 (பல்லவி: 17a)பல்லவி: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்.

ஆகஸ்ட் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 10-11. 12-13ab. 13cd-14 (பல்லவி: 17a)

பல்லவி: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்.
8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

13cd
ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.
14
தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 30 : முதல் வாசகம்மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10b-16

ஆகஸ்ட் 30 :  முதல் வாசகம்

மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10b-16
சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார். ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்கு உரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம்.

மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. “ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?” நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 30th : Gospel 'I know who you are: the Holy One of God'A Reading from the Holy Gospel according to St. Luke 4: 31-37

August 30th : Gospel 

'I know who you are: the Holy One of God'

A Reading from the Holy Gospel according to St. Luke 4: 31-37 
Jesus went down to Capernaum, a town in Galilee, and taught them on the sabbath. And his teaching made a deep impression on them because he spoke with authority.
  In the synagogue there was a man who was possessed by the spirit of an unclean devil, and it shouted at the top of its voice, ‘Ha! What do you want with us, Jesus of Nazareth? Have you come to destroy us? I know who you are: the Holy One of God.’ But Jesus said sharply, ‘Be quiet! Come out of him!’ And the devil, throwing the man down in front of everyone, went out of him without hurting him at all. Astonishment seized them and they were all saying to one another, ‘What teaching! He gives orders to unclean spirits with authority and power and they come out.’ And reports of him went all through the surrounding countryside.

The Word of the Lord.

August 30th : Responsorial PsalmPsalm 144(145):8-14 The Lord is just in all his ways.The Lord is kind and full of compassion, slow to anger, abounding in love.How good is the Lord to all,

August 30th : Responsorial Psalm

Psalm 144(145):8-14 

The Lord is just in all his ways.

The Lord is kind and full of compassion,
  slow to anger, abounding in love.
How good is the Lord to all,
  compassionate to all his creatures.
The Lord is just in all his ways.

All your creatures shall thank you, O Lord,
  and your friends shall repeat their blessing.
They shall speak of the glory of your reign
  and declare your might, O God,
to make known to men your mighty deeds
  and the glorious splendour of your reign.

The Lord is just in all his ways.

Yours is an everlasting kingdom;
  your rule lasts from age to age.
The Lord is faithful in all his words
  and loving in all his deeds.
The Lord supports all who fall
  and raises all who are bowed down.

The Lord is just in all his ways.

Gospel Acclamation Heb4:12

Alleluia, alleluia!
The word of God is something alive and active:
it can judge secret emotions and thoughts.
Alleluia!

August 30th : First ReadingThe Spirit reaches even the depths of GodA Reading from the First Letter of St.Paul to the Corinthians 2:10-16

August 30th : First Reading

The Spirit reaches even the depths of God

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 2:10-16 
The Spirit reaches the depths of everything, even the depths of God. After all, the depths of a man can only be known by his own spirit, not by any other man, and in the same way the depths of God can only be known by the Spirit of God. Now instead of the spirit of the world, we have received the Spirit that comes from God, to teach us to understand the gifts that he has given us. Therefore we teach, not in the way in which philosophy is taught, but in the way that the Spirit teaches us: we teach spiritual things spiritually. An unspiritual person is one who does not accept anything of the Spirit of God: he sees it all as nonsense; it is beyond his understanding because it can only be understood by means of the Spirit. A spiritual man, on the other hand, is able to judge the value of everything, and his own value is not to be judged by other men. As scripture says: Who can know the mind of the Lord, so who can teach him? But we are those who have the mind of Christ.

The Word of the Lord.