இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 15 செப்டம்பர், 2022

September 16th : Responsorial PsalmPsalm 16(17):1,6-8,15 I shall be filled, when I awake, with the sight of your glory, O Lord.

September 16th :  Responsorial Psalm

Psalm 16(17):1,6-8,15 

I shall be filled, when I awake, with the sight of your glory, O Lord.
Lord, hear a cause that is just,
  pay heed to my cry.
Turn your ear to my prayer:
  no deceit is on my lips.

I shall be filled, when I awake, with the sight of your glory, O Lord.

I am here and I call, you will hear me, O God.
  Turn your ear to me; hear my words.
Display your great love, you whose right hand saves
  your friends from those who rebel against them.

I shall be filled, when I awake, with the sight of your glory, O Lord.

Guard me as the apple of your eye.
  Hide me in the shadow of your wings
As for me, in my justice I shall see your face
  and be filled, when I awake, with the sight of your glory.

I shall be filled, when I awake, with the sight of your glory, O Lord.

Gospel Acclamation Ps94:8

Alleluia, alleluia!
Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Alleluia!

September 16th : First ReadingIf Christ has not been raised, your belief is uselessA Reading from the First Letter of St.Paul to the Corinthians 15: 12-20

September 16th :  First Reading

If Christ has not been raised, your belief is useless

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 15: 12-20 
Now if Christ raised from the dead is what has been preached, how can some of you be saying that there is no resurrection of the dead? If there is no resurrection of the dead, Christ himself cannot have been raised, and if Christ has not been raised then our preaching is useless and your believing it is useless; indeed, we are shown up as witnesses who have committed perjury before God, because we swore in evidence before God that he had raised Christ to life. For if the dead are not raised, Christ has not been raised, and if Christ has not been raised, you are still in your sins. And what is more serious, all who have died in Christ have perished. If our hope in Christ has been for this life only, we are the most unfortunate of all people.
  But Christ has in fact been raised from the dead, the first-fruits of all who have fallen asleep.

The Word of the Lord.

புதன், 14 செப்டம்பர், 2022

செப்டம்பர் 15 : நற்செய்தி வாசகம்திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

செப்டம்பர் 15 : நற்செய்தி வாசகம்

திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27
அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 15 : பதிலுரைப் பாடல்திபா 31: 1-2ab. 2c-3. 4-5. 14-15. 19 (பல்லவி: 16a)பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.

செப்டம்பர் 15 : பதிலுரைப் பாடல்

திபா 31: 1-2ab. 2c-3. 4-5. 14-15. 19 (பல்லவி: 16a)

பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.
1
ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
2ab
உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும். - பல்லவி

2c
எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். - பல்லவி

4
அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.
5
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். - பல்லவி

14
ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.
15
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். - பல்லவி

19
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! - பல்லவி

தொடர்பாடல்

இப்பாடலை முழுமையாகவோ அல்லது சுருக்கமாகவோ (எண் 11. தூய நல்தாயே... முதல்) தேவைக்கேற்ப பாடலாம் அல்லது சொல்லலாம்.
திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில்,
கண்ணீர் பெருகிடத் துயருடன் அந்தோ!
நின்றார் வியாகுலத் தாய்மரி.
பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத்
துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ!
ஊடுருவிற்றே கூர்வாள், காணீர்.
தேவ சுதனின் அன்பால் அன்னை,
பேரரும் ஆசி பெற்றவர், அன்று
எத்துணைத் துயரும் வருத்தமும் கொண்டார்.
அன்புத் தாயவர் மாண்புறு மகனின்
துன்பம் அனைத்தும் நோக்கிய போது
கொண்ட துயரமும் வருத்தமும் என்னே!
இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும்
கிறிஸ்துவின் அன்னையைக் காணும் போதில்
எவரும் வருந்தாதிருந்திடுவாரோ!
தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும்
கிறிஸ்துவின் அன்னையை நோக்கிடும் போதில்
உளம் உருகாமல் நிற்பவர் யாரோ!
தம்முடைய மக்களின் பாவம் நீங்க
தாங்கரும் வேதனை, கசையடி ஏற்ற
தம் திருமகனாம் இயேசுவைக் கண்டார்.
தேனினுமினிய தேவனின் மைந்தன்
அனைவரும் கைவிட ஆறுதலின்றித்
தனிமையில் தமது உயிர்விடக் கண்டார்
அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா,
அடியேன் உம்முடன் அழுது வருந்த,
உமதுள்ளத் துயரை உணர்ந்திடச் செய்வீர்.
இறைவனாம் கிறிஸ்துவுக் கன்பு செய்து
என்றும் அவருக் குகந்தவராக,
என்னுளம் அன்பால் எரிந்திடச் செய்வீர்.
தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்:
துயருறும் சிலுவை நாதரின் காயம்
ஆழமாய் நெஞ்சில் அழுந்திடச் செய்வீர்.
அடியேனுக்காய்க் காயமும் துன்பமும்
ஏற்கத் திருவுளம் கொண்ட உம் மகனின்
துயரில் எனக்கொரு பங்கு தருவீர்.
சிலுவை நாதருடன் துயருறவும்,
பக்தியால் உம்முடன் புலம்பவும்,
என்றன் உயிருள்ளளவும் அருள் புரிவீரே.
சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும்
கண்ணீர் அழுகையில் நானும் சேர்ந்து
பங்குற விரும்புகின்றேனே.
கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே,
கனிவுடன் என்னைக் கடைக்கண் நோக்கி
உம்மோடழுதிட அருள் செய், அம்மா.
கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும்
பாடுகள் யாவிலும் பங்கு கொள்ளவும்
காயம் நினைத்து இரங்கவும் செய்யும்.
நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும்
அவரது சிலுவையும், சிந்திய இரத்தமும்
என் மனம் நிரப்ப அருள் செய்வீரே.
என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில்
வீழ்ந்து அவதியுறாமல் கன்னியே,
என்னைக் காத்திடுவீரே.
கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே
வந்திடும் வேளை வெற்றிக் குருத்தைத்
தாங்க நும் அன்னை வழியாய் அருள்வீர்.
என்னுடல் மரித்து அழியும் போதில்
என்றன் ஆன்மா பரகதி மகிமை
எய்திடும் வரத்தை வேண்டி நின்றேன். ஆமென்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.

செப்டம்பர் 15 : முதல் வாசகம்கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

செப்டம்பர் 15 : முதல் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9
சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 15th : Gospel 'Woman, this is your son'A Reading from the Holy Gospel according to St.John 19: 25-27

September 15th : Gospel 

'Woman, this is your son'

A Reading from the Holy Gospel according to St.John 19: 25-27 
Near the cross of Jesus stood his mother and his mother’s sister, Mary the wife of Clopas, and Mary of Magdala. Seeing his mother and the disciple he loved standing near her, Jesus said to his mother, ‘Woman, this is your son.’ Then to the disciple he said, ‘This is your mother.’ And from that moment the disciple made a place for her in his home.

The Word of the Lord.

September 15th : Responsorial PsalmPsalms 31:2-6, 15-16, 20Response : Let your face shine on your servant

September 15th : Responsorial Psalm

Psalms 31:2-6, 15-16, 20

Response : Let your face shine on your servant
In thee, O LORD, do I seek refuge; let me never be put to shame; in thy righteousness deliver me! Incline thy ear to me, rescue me speedily!

Response : Let your face shine on your servant

Be thou a rock of refuge for me, a strong fortress to save me! Yea, thou art my rock and my fortress; for thy name's sake lead me and guide me,

Response : Let your face shine on your servant

Take me out of the net which is hidden for me, for thou art my refuge. Into thy hand I commit my spirit; thou hast redeemed me,

Response : Let your face shine on your servant

O LORD, faithful God. But I trust in thee, O LORD, I say, "Thou art my God." 15My times are in thy hand; deliver me from the hand of my enemies and persecutors! 19O how abundant is thy goodness, which thou hast laid up for those who fear thee, and wrought for those who take refuge in thee, in the sight of the sons of men!

Response : Let your face shine on your servant

Acclamation : Alleluia , alleluia. Happy is the Blessed Virgin Mary who, without dying, won the palm of martyrdom beneath the cross of the Lord.
Alleluia.

September 15th : First Reading He learned to obey and he became the source of eternal salvationHebrews 5: 7-9

September 15th : First Reading 

He learned to obey and he became the source of eternal salvation

Hebrews 5: 7-9 
During his life on earth, Christ offered up prayer and entreaty, aloud and in silent tears, to the one who had the power to save him out of death, and he submitted so humbly that his prayer was heard. Although he was Son, he learnt to obey through suffering; but having been made perfect, he became for all who obey him the source of eternal salvation.

The Word of the Lord.

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

செப்டம்பர் 14 : நற்செய்தி வாசகம்மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

செப்டம்பர் 14 :  நற்செய்தி வாசகம்

மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17
அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

செப்டம்பர் 14 : பதிலுரைப் பாடல்திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.

செப்டம்பர் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)

பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.
1
என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள்.
2
நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். - பல்லவி

34
அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.
35
கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். - பல்லவி

36
ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.
37
அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. - பல்லவி

38
அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா.