இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 19 டிசம்பர், 2022

டிசம்பர் 20 : பதிலுரைப் பாடல்திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c,10b காண்க)பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

டிசம்பர் 20 :  பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c,10b காண்க)

பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.
1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

வானக அரசின் வாயிலைத் திறக்கும் தாவீதின் திறவுகோல் நீரே. இருளிலே இருக்கும் கைதிகள் தளையைக் களைந்திட எழுந்தருள்வீரே. அல்லேலூயா.

டிசம்பர் 20 : முதல் வாசகம்இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14

டிசம்பர் 20 :  முதல் வாசகம்

இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14
அந்நாள்களில்

ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்கமாட்டேன்” என்றார். அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 20th : Gospel 'I am the handmaid of the Lord'A Reading from the Holy Gospel according to St.Luke 1:26-38

December 20th :  Gospel 

'I am the handmaid of the Lord'

A Reading from the Holy Gospel according to St.Luke 1:26-38 
The angel Gabriel was sent by God to a town in Galilee called Nazareth, to a virgin betrothed to a man named Joseph, of the House of David; and the virgin’s name was Mary. He went in and said to her, ‘Rejoice, so highly favoured! The Lord is with you.’ She was deeply disturbed by these words and asked herself what this greeting could mean, but the angel said to her, ‘Mary, do not be afraid; you have won God’s favour. Listen! You are to conceive and bear a son, and you must name him Jesus. He will be great and will be called Son of the Most High. The Lord God will give him the throne of his ancestor David; he will rule over the House of Jacob for ever and his reign will have no end.’ Mary said to the angel, ‘But how can this come about, since I am a virgin?’ ‘The Holy Spirit will come upon you’ the angel answered ‘and the power of the Most High will cover you with its shadow. And so the child will be holy and will be called Son of God. Know this too: your kinswoman Elizabeth has, in her old age, herself conceived a son, and she whom people called barren is now in her sixth month, for nothing is impossible to God.’ ‘I am the handmaid of the Lord,’ said Mary ‘let what you have said be done to me.’ And the angel left her.

The Word of the Lord.

December 20th : Responsorial PsalmPsalm 23(24):1-6 Let the Lord enter! He is the king of glory.

December 20th :  Responsorial Psalm

Psalm 23(24):1-6 

Let the Lord enter! He is the king of glory.
The Lord’s is the earth and its fullness,
  the world and all its peoples.
It is he who set it on the seas;
  on the waters he made it firm.

Let the Lord enter! He is the king of glory.

Who shall climb the mountain of the Lord?
  Who shall stand in his holy place?
The man with clean hands and pure heart,
  who desires not worthless things.

Let the Lord enter! He is the king of glory.

He shall receive blessings from the Lord
  and reward from the God who saves him.
Such are the men who seek him,
  seek the face of the God of Jacob.

Let the Lord enter! He is the king of glory.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
Emmanuel,
our king and lawgiver,
come and save us,
Lord our God.
Alleluia!

December 20th : First Reading The maiden is with childA Reading from the Book of Isaiah 7:10-14

December 20th :  First Reading 

The maiden is with child

A Reading from the Book of Isaiah 7:10-14 
The Lord spoke to Ahaz and said, ‘Ask the Lord your God for a sign for yourself coming either from the depths of Sheol or from the heights above.’ ‘No,’ Ahaz answered ‘I will not put the Lord to the test.’
  Then Isaiah said:
‘Listen now, House of David:
are you not satisfied with trying the patience of men
without trying the patience of my God, too?
The Lord himself, therefore,
will give you a sign.
It is this: the maiden is with child
and will soon give birth to a son
whom she will call Immanuel,
a name which means “God-is-with-us.”’

The Word of the Lord.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

டிசம்பர் 19 : நற்செய்தி வாசகம்திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25

டிசம்பர் 19 :  நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” என்றார்.

செக்கரியா வானதூதரிடம், “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” என்றார். அதற்கு வானதூதர் அவரிடம், “நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது” என்றார்.

மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.

அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். “மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 19 : பதிலுரைப் பாடல்திபா 71: 3-4a. 5-6ab. 16-17 (பல்லவி: 8ab காண்க)பல்லவி: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

டிசம்பர் 19 :  பதிலுரைப் பாடல்

திபா 71: 3-4a. 5-6ab. 16-17 (பல்லவி: 8ab காண்க)

பல்லவி: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.
3
என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4a
என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். - பல்லவி

5
என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
6ab
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். - பல்லவி

16
தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
17
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஈசாயின் குலக்கொழுந்தே, மக்களுக்கு ஓர் அருஞ் சின்னமே, எமை மீட்க எழுந்தருளும். தாமதம் செய்யாதேயும். அல்லேலூயா.

டிசம்பர் 19 : முதல் வாசகம்சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25

டிசம்பர் 19 :  முதல் வாசகம்

சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25
அந்நாள்களில்

சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை. ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், “நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென ‘நாசீர்’ ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்” என்றார். அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: “கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை. அவர் என்னிடம். ‘இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்’ என்றார்.”

அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போதுதான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 19th : Gospel 'Your wife Elizabeth will bear a son'A Reading from the Holy Gospel according to St.Luke 1:5-25

December 19th :  Gospel 

'Your wife Elizabeth will bear a son'

A Reading from the Holy Gospel according to St.Luke 1:5-25 
In the days of King Herod of Judaea there lived a priest called Zechariah who belonged to the Abijah section of the priesthood, and he had a wife, Elizabeth by name, who was a descendant of Aaron. Both were worthy in the sight of God, and scrupulously observed all the commandments and observances of the Lord. But they were childless: Elizabeth was barren and they were both getting on in years.
  Now it was the turn of Zechariah’s section to serve, and he was exercising his priestly office before God when it fell to him by lot, as the ritual custom was, to enter the Lord’s sanctuary and burn incense there. And at the hour of incense the whole congregation was outside, praying.
  Then there appeared to him the angel of the Lord, standing on the right of the altar of incense. The sight disturbed Zechariah and he was overcome with fear. But the angel said to him, ‘Zechariah, do not be afraid, your prayer has been heard. Your wife Elizabeth is to bear you a son and you must name him John. He will be your joy and delight and many will rejoice at his birth, for he will be great in the sight of the Lord; he must drink no wine, no strong drink. Even from his mother’s womb he will be filled with the Holy Spirit, and he will bring back many of the sons of Israel to the Lord their God. With the spirit and power of Elijah, he will go before him to turn the hearts of fathers towards their children and the disobedient back to the wisdom that the virtuous have, preparing for the Lord a people fit for him.’
  Zechariah said to the angel, ‘How can I be sure of this? I am an old man and my wife is getting on in years.’ The angel replied, ‘I am Gabriel who stand in God’s presence, and I have been sent to speak to you and bring you this good news. Listen! Since you have not believed my words, which will come true at their appointed time, you will be silenced and have no power of speech until this has happened.’ Meanwhile the people were waiting for Zechariah and were surprised that he stayed in the sanctuary so long. When he came out he could not speak to them, and they realised that he had received a vision in the sanctuary. But he could only make signs to them, and remained dumb.
  When his time of service came to an end he returned home. Some time later his wife Elizabeth conceived, and for five months she kept to herself. ‘The Lord has done this for me’ she said ‘now that it has pleased him to take away the humiliation I suffered among men.’

The Word of the Lord.

December 19th : Responsorial PsalmPsalm 70(71):3-6,16-17 My lips are filled with your praise, with your glory all the day long.

December 19th :  Responsorial Psalm

Psalm 70(71):3-6,16-17 

My lips are filled with your praise, with your glory all the day long.
Be a rock where I can take refuge,
  a mighty stronghold to save me;
  for you are my rock, my stronghold.
Free me from the hand of the wicked.

My lips are filled with your praise, with your glory all the day long.

It is you, O Lord, who are my hope,
  my trust, O Lord, since my youth.
On you I have leaned from my birth,
  from my mother’s womb you have been my help.

My lips are filled with your praise, with your glory all the day long.

I will declare the Lord’s mighty deeds
  proclaiming your justice, yours alone.
O God, you have taught me from my youth
  and I proclaim your wonders still.

My lips are filled with your praise, with your glory all the day long.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
Root of Jesse, set up as a sign to the peoples,
come to save us,
and delay no more.
Alleluia!