இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

February 11th : First Reading The expulsion from the Garden of EdenA Reading from the Book of Genesis 3:9-24

February 11th :  First Reading 

The expulsion from the Garden of Eden

A Reading from the Book of Genesis 3:9-24 
The Lord God called to the man. ‘Where are you?’ he asked.
  ‘I heard the sound of you in the garden;’ he replied ‘I was afraid because I was naked, so I hid.’
  ‘Who told you that you were naked?’ he asked ‘Have you been eating of the tree I forbade you to eat?’
  The man replied, ‘It was the woman you put with me; she gave me the fruit, and I ate it.’
  Then the Lord God asked the woman, ‘What is this you have done?’
  The woman replied, ‘The serpent tempted me and I ate.’
  Then the Lord God said to the serpent, ‘Because you have done this,
‘Be accursed beyond all cattle,
all wild beasts.
You shall crawl on your belly and eat dust
every day of your life.
I will make you enemies of each other:
you and the woman,
your offspring and her offspring.
It will crush your head
and you will strike its heel.’
To the woman he said:
‘I will multiply your pains in childbearing,
you shall give birth to your children in pain.
Your yearning shall be for your husband,
yet he will lord it over you.’
To the man he said, ‘Because you listened to the voice of your wife and ate from the tree of which I had forbidden you to eat,
‘Accursed be the soil because of you.
With suffering shall you get your food from it
every day of your life.
It shall yield you brambles and thistles,
and you shall eat wild plants.
With sweat on your brow
shall you eat your bread,
until you return to the soil,
as you were taken from it.
For dust you are
and to dust you shall return.’
The man named his wife ‘Eve’ because she was the mother of all those who live. The Lord God made clothes out of skins for the man and his wife, and they put them on. Then the Lord God said, ‘See, the man has become like one of us, with his knowledge of good and evil. He must not be allowed to stretch his hand out next and pick from the tree of life also, and eat some and live for ever.’ So the Lord God expelled him from the garden of Eden, to till the soil from which he had been taken. He banished the man, and in front of the garden of Eden he posted the cherubs, and the flame of a flashing sword, to guard the way to the tree of life.

The Word of the Lord.

வியாழன், 9 பிப்ரவரி, 2023

பிப்ரவரி 10 : நற்செய்தி வாசகம்காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

பிப்ரவரி 10 :  நற்செய்தி வாசகம்

காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37
இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, “எப்பத்தா” அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 10 : பதிலுரைப் பாடல்திபா 32: 1-2. 5. 6. 7 (பல்லவி: 1 காண்க)பல்லவி: எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றவர்.

பிப்ரவரி 10 :  பதிலுரைப் பாடல்

திபா 32: 1-2. 5. 6. 7 (பல்லவி: 1 காண்க)

பல்லவி: எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றவர்.
1
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.
2
ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். - பல்லவி

5
‘என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். - பல்லவி

6
ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. - பல்லவி

7
நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா!

உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

பிப்ரவரி 10 : முதல் வாசகம்நீங்களும் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 1-8அந்நாள்களில்

பிப்ரவரி 10 :  முதல் வாசகம்

நீங்களும் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 1-8

அந்நாள்களில்
ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது.

பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது; அதைத் தொடவும் கூடாது, மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார்” என்றாள். பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.

அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடன் இருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.

அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 10th : Gospel 'He makes the deaf hear and the dumb speak'A Reading from the Holy Gospel according to St.Mark 7: 31-37

February 10th :  Gospel 

'He makes the deaf hear and the dumb speak'

A Reading from the Holy Gospel according to St.Mark 7: 31-37 
Returning from the district of Tyre, Jesus went by way of Sidon towards the Sea of Galilee, right through the Decapolis region. And they brought him a deaf man who had an impediment in his speech; and they asked him to lay his hand on him. He took him aside in private, away from the crowd, put his fingers into the man’s ears and touched his tongue with spittle. Then looking up to heaven he sighed; and he said to him, ‘Ephphatha’, that is, ‘Be opened.’ And his ears were opened, and the ligament of his tongue was loosened and he spoke clearly. And Jesus ordered them to tell no one about it, but the more he insisted, the more widely they published it. Their admiration was unbounded. ‘He has done all things well,’ they said ‘he makes the deaf hear and the dumb speak.’

The Word of the Lord.

February 10th : Responsorial PsalmPsalm 31(32):1-2,5-7 Happy the man whose offence is forgiven.

February 10th :  Responsorial Psalm

Psalm 31(32):1-2,5-7 

Happy the man whose offence is forgiven.
Happy the man whose offence is forgiven,
  whose sin is remitted.
O happy the man to whom the Lord
  imputes no guilt,
  in whose spirit is no guile.

Happy the man whose offence is forgiven.

But now I have acknowledged my sins;
  my guilt I did not hide.
I said: ‘I will confess
  my offence to the Lord.’
And you, Lord, have forgiven
  the guilt of my sin.

Happy the man whose offence is forgiven.

So let every good man pray to you
  in the time of need.
The floods of water may reach high
  but him they shall not reach.

Happy the man whose offence is forgiven.

You are my hiding place, O Lord;
  you save me from distress.
You surround me with cries of deliverance.

Happy the man whose offence is forgiven.

Gospel Acclamation cf.Jn6:63,68

Alleluia, alleluia!

Your words are spirit, Lord, and they are life;
you have the message of eternal life.
Alleluia!

February 10th : First Reading The fall of manA Reading from the Book of Genesis 3:1-8

February 10th :  First Reading 

The fall of man

A Reading from the Book of Genesis 3:1-8 
The serpent was the most subtle of all the wild beasts that the Lord God had made. It asked the woman, ‘Did God really say you were not to eat from any of the trees in the garden?’ The woman answered the serpent, ‘We may eat the fruit of the trees in the garden. But of the fruit of the tree in the middle of the garden God said, “You must not eat it, nor touch it, under pain of death.”’ Then the serpent said to the woman, ‘No! You will not die! God knows in fact that on the day you eat it your eyes will be opened and you will be like gods, knowing good and evil.’ The woman saw that the tree was good to eat and pleasing to the eye, and that it was desirable for the knowledge that it could give. So she took some of its fruit and ate it. She gave some also to her husband who was with her, and he ate it. Then the eyes of both of them were opened and they realised that they were naked. So they sewed fig-leaves together to make themselves loin-cloths.
  The man and his wife heard the sound of the Lord God walking in the garden in the cool of the day, and they hid from the Lord God among the trees of the garden.

The Word of the Lord.

பிப்ரவரி 9 : நற்செய்தி வாசகம்சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே!✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

பிப்ரவரி 9 :  நற்செய்தி வாசகம்

சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே!

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30
அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். இயேசு அவரைப் பார்த்து, “முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். அதற்கு அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று” என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

புதன், 8 பிப்ரவரி, 2023

பிப்ரவரி 9 : பதிலுரைப் பாடல்திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!

பிப்ரவரி 9 :  பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!
1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 21
அல்லேலூயா, அல்லேலூயா! 

உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.

பிப்ரவரி 9 : முதல் வாசகம்இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-25

பிப்ரவரி  9 :  முதல் வாசகம்

இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-25
அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.

ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.

ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான்.

இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.