இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 19 மார்ச், 2023

மார்ச் 20 : புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழாமுதல் வாசகம்உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன்.சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a, 12-14a, 16

மார்ச் 20 :  புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா

முதல் வாசகம்

உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a, 12-14a, 16
அந்நாள்களில்

ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்.

என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாய் இருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 20th : GospelHow Jesus Christ came to be bornA Reading from the Holy Gospel according to St.Matthew 1:16,18-21,24

March 20th :  Gospel

How Jesus Christ came to be born

A Reading from the Holy Gospel according to St.Matthew 1:16,18-21,24 
Jacob was the father of Joseph the husband of Mary; of her was born Jesus who is called Christ.
  This is how Jesus Christ came to be born. His mother Mary was betrothed to Joseph; but before they came to live together she was found to be with child through the Holy Spirit. Her husband Joseph; being a man of honour and wanting to spare her publicity, decided to divorce her informally. He had made up his mind to do this when the angel of the Lord appeared to him in a dream and said, ‘Joseph son of David, do not be afraid to take Mary home as your wife, because she has conceived what is in her by the Holy Spirit. She will give birth to a son and you must name him Jesus, because he is the one who is to save his people from their sins.’ When Joseph woke up he did what the angel of the Lord had told him to do.

The Word of the Lord.

March 20th : Second ReadingAbraham hoped, and he believedA Reading from the Letter of St.Paul to the Romans 4:13,16-18,22

March 20th :  Second Reading

Abraham hoped, and he believed

A Reading from the Letter of St.Paul to the Romans 4:13,16-18,22 
The promise of inheriting the world was not made to Abraham and his descendants on account of any law but on account of the righteousness which consists in faith. That is why what fulfils the promise depends on faith, so that it may be a free gift and be available to all of Abraham’s descendants, not only those who belong to the Law but also those who belong to the faith of Abraham who is the father of all of us. As scripture says: I have made you the ancestor of many nations – Abraham is our father in the eyes of God, in whom he put his faith, and who brings the dead to life and calls into being what does not exist.
  Though it seemed Abraham’s hope could not be fulfilled, he hoped and he believed, and through doing so he did become the father of many nations exactly as he had been promised: Your descendants will be as many as the stars. This is the faith that was ‘considered as justifying him.’

The Word of the Lord.

Gospel Acclamation Ps83:5

Glory and praise to you, O Christ.
They are happy who dwell in your house, O Lord,
for ever singing your praise.
Glory and praise to you, O Christ.

March 20th : Responsorial PsalmPsalm 88(89):2-5,27,29 His dynasty shall last for ever.

March 20th :  Responsorial Psalm

Psalm 88(89):2-5,27,29 

His dynasty shall last for ever.
I will sing for ever of your love, O Lord;
  through all ages my mouth will proclaim your truth.
Of this I am sure, that your love lasts for ever,
  that your truth is firmly established as the heavens.

His dynasty shall last for ever.

‘I have made a covenant with my chosen one;
  I have sworn to David my servant:
I will establish your dynasty for ever
  and set up your throne through all ages.

His dynasty shall last for ever.

‘He will say to me: “You are my father,
  my God, the rock who saves me.”
I will keep my love for him always;
  with him my covenant shall last.’

His dynasty shall last for ever.

March 20th : First ReadingThe Lord will give him the throne of his ancestor David2 Samuel 7:4-5,12-14,16

March 20th :  First Reading

The Lord will give him the throne of his ancestor David

2 Samuel 7:4-5,12-14,16 
The word of the Lord came to Nathan:
  ‘Go and tell my servant David, Thus the Lord speaks: “When your days are ended and you are laid to rest with your ancestors, I will preserve the offspring of your body after you and make his sovereignty secure. (It is he who shall build a house for my name, and I will make his royal throne secure for ever.) I will be a father to him and he a son to me. Your House and your sovereignty will always stand secure before me and your throne be established for ever.”’

The Word of the Lord.

சனி, 18 மார்ச், 2023

மார்ச் 19 : நற்செய்தி வாசகம்அவர் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-41

மார்ச் 19 :  நற்செய்தி வாசகம்

அவர் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-41
அக்காலத்தில்

இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்யவேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி” என்றார்.

இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, “நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள். அவரும் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.

அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், “இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?” என்று பேசிக்கொண்டனர். சிலர், “அவரே” என்றனர்; வேறு சிலர், “அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்” என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், “நான்தான் அவன்” என்றார். அவர்கள், “உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவரிடம் கேட்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, ‘சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்’ என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது” என்றார். “அவர் எங்கே?” என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், “எனக்குத் தெரியாது” என்றார்.

முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டி வந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள். எனவே, “எப்படிப் பார்வை பெற்றாய்?” என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், “இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்றார். பரிசேயருள் சிலர். “ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், “பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?” எனக் கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், “உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் கேட்டனர். “அவர் ஓர் இறைவாக்கினர்” என்றார் பார்வை பெற்றவர்.

அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை. “பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?” என்று கேட்டார்கள். அவருடைய பெற்றோர் மறுமொழியாக, “இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவியிலேயே பார்வையற்றவன்தான். ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன்தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்” என்றனர்.

யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவருடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.

பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், “உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்” என்றனர். பார்வை பெற்றவர் மறுமொழியாக, “அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்: நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்” என்றார். அவர்கள் அவரிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒருவேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டார். அவர்கள் அவரைப் பழித்து, “நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது” என்றார்கள். அதற்கு அவர், “இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்று உடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவிசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?” என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.

யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.

அப்போது இயேசு, “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

மார்ச் 19 : இரண்டாம் வாசகம்‘இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்'.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 8-14

மார்ச் 19 :  இரண்டாம் வாசகம்

‘இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்'.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 8-14
சகோதரர் சகோதரிகளே,

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது. அவ்வாறு தெளிவாக்கப்படுவது எல்லாம் ஒளி மயமாகிறது.

ஆதலால், ‘தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 8: 12b
“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்,” என்கிறார் ஆண்டவர்.

மார்ச் 19 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

மார்ச் 19 :  பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; - பல்லவி

3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

மார்ச் 19 : முதல் வாசகம்இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7, 10-13aஅந்நாள்களில்

மார்ச் 19 :  முதல் வாசகம்

இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7, 10-13a

அந்நாள்களில்
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, ‘‘உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டுபோ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார்.

ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது, அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ‘‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார்.

இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். ‘‘இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை” என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, ‘‘உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, ‘‘இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், ‘‘ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார்.

உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 19th : Gospel The blind man went off and washed himself, and came away with his sight restored.A Reading from the Holy Gospel according to St.John 9:1-41

March 19th : Gospel 

The blind man went off and washed himself, and came away with his sight restored.

A Reading from the Holy Gospel according to St.John 9:1-41 
As Jesus went along, he saw a man who had been blind from birth. His disciples asked him, ‘Rabbi, who sinned, this man or his parents, for him to have been born blind?’ ‘Neither he nor his parents sinned,’ Jesus answered ‘he was born blind so that the works of God might be displayed in him.
‘As long as the day lasts
I must carry out the work of the one who sent me;
the night will soon be here when no one can work.
As long as I am in the world
I am the light of the world.’
Having said this, he spat on the ground, made a paste with the spittle, put this over the eyes of the blind man, and said to him, ‘Go and wash in the Pool of Siloam’ (a name that means ‘sent’). So the blind man went off and washed himself, and came away with his sight restored.
  His neighbours and people who earlier had seen him begging said, ‘Isn’t this the man who used to sit and beg?’ Some said, ‘Yes, it is the same one.’ Others said, ‘No, he only looks like him.’ The man himself said, ‘I am the man.’ So they said to him, ‘Then how do your eyes come to be open?’ ‘The man called Jesus’ he answered ‘made a paste, daubed my eyes with it and said to me, “Go and wash at Siloam”; so I went, and when I washed I could see.’ They asked, ‘Where is he?’ ‘I don’t know’ he answered.
  They brought the man who had been blind to the Pharisees. It had been a sabbath day when Jesus made the paste and opened the man’s eyes, so when the Pharisees asked him how he had come to see, he said, ‘He put a paste on my eyes, and I washed, and I can see.’ Then some of the Pharisees said, ‘This man cannot be from God: he does not keep the sabbath.’ Others said, ‘How could a sinner produce signs like this?’ And there was disagreement among them. So they spoke to the blind man again, ‘What have you to say about him yourself, now that he has opened your eyes?’ ‘He is a prophet’ replied the man. However, the Jews would not believe that the man had been blind and had gained his sight, without first sending for his parents and asking them, ‘Is this man really your son who you say was born blind? If so, how is it that he is now able to see?’ His parents answered, ‘We know he is our son and we know he was born blind, but we do not know how it is that he can see now, or who opened his eyes. He is old enough: let him speak for himself.’ His parents spoke like this out of fear of the Jews, who had already agreed to expel from the synagogue anyone who should acknowledge Jesus as the Christ. This was why his parents said, ‘He is old enough; ask him.’
  So the Jews again sent for the man and said to him, ‘Give glory to God! For our part, we know that this man is a sinner.’ The man answered, ‘I don’t know if he is a sinner; I only know that I was blind and now I can see.’ They said to him, ‘What did he do to you? How did he open your eyes?’ He replied, ‘I have told you once and you wouldn’t listen. Why do you want to hear it all again? Do you want to become his disciples too?’ At this they hurled abuse at him: ‘You can be his disciple,’ they said ‘we are disciples of Moses: we know that God spoke to Moses, but as for this man, we do not know where he comes from.’ The man replied, ‘Now here is an astonishing thing! He has opened my eyes, and you don’t know where he comes from! We know that God doesn’t listen to sinners, but God does listen to men who are devout and do his will. Ever since the world began it is unheard of for anyone to open the eyes of a man who was born blind; if this man were not from God, he couldn’t do a thing.’ ‘Are you trying to teach us,’ they replied ‘and you a sinner through and through, since you were born!’ And they drove him away.
  Jesus heard they had driven him away, and when he found him he said to him, ‘Do you believe in the Son of Man?’ ‘Sir,’ the man replied ‘tell me who he is so that I may believe in him.’ Jesus said, ‘You are looking at him; he is speaking to you.’ The man said, ‘Lord, I believe’, and worshipped him.
  Jesus said:
‘It is for judgement
that I have come into this world,
so that those without sight may see
and those with sight turn blind.’
Hearing this, some Pharisees who were present said to him, ‘We are not blind, surely?’ Jesus replied:
‘Blind? If you were,
you would not be guilty,
but since you say, “We see,”
your guilt remains.’

The Word of the Lord.