இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 23 மே, 2023

மே 24 : முதல் வாசகம்வளர்ச்சியையும் உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்ல கடவுளிடம் ஒப்படைக்கிறேன்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 28-38

மே 24 :  முதல் வாசகம்

வளர்ச்சியையும் உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்ல கடவுளிடம் ஒப்படைக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 28-38
அந்நாள்களில்

பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியது: “தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.

எனவே விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தர வல்லது.

எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்கவேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள் என்றும் கூறினேன்."

இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு, அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். ‘இனிமேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை’ என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பிவைத்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 24th : Gospel Father, keep those you have given me true to your nameA Reading from the Holy Gospel according to St.John 17:11-19

May 24th :  Gospel 

Father, keep those you have given me true to your name

A Reading from the Holy Gospel according to St.John 17:11-19 
Jesus raised his eyes to heaven and said:
‘Holy Father,
keep those you have given me true to your name,
so that they may be one like us.
While I was with them,
I kept those you had given me true to your name.
I have watched over them
and not one is lost
except the one who chose to be lost,
and this was to fulfil the scriptures.
But now I am coming to you
and while still in the world I say these things
to share my joy with them to the full.
I passed your word on to them,
and the world hated them,
because they belong to the world
no more than I belong to the world.
I am not asking you to remove them from the world,
but to protect them from the evil one.
They do not belong to the world
any more than I belong to the world.
Consecrate them in the truth;
your word is truth.
As you sent me into the world,
I have sent them into the world,
and for their sake I consecrate myself
so that they too may be consecrated in truth.’

The Word of the Lord.

May 24th : Responsorial PsalmPsalm 67(68):29-30,33-36 Kingdoms of the earth, sing to God.orAlleluia!

May 24th :  Responsorial Psalm

Psalm 67(68):29-30,33-36 

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!
Show forth, O God, show forth your might,
  your might, O God, which you have shown for us.
For the sake of your temple high in Jerusalem
  may kings come to you bringing their tribute.

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!

Kingdoms of the earth, sing to God, praise the Lord
  who rides on the heavens, the ancient heavens.
He thunders his voice, his mighty voice.
  Come, acknowledge the power of God.

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!

His glory is on Israel; his might is in the skies.
  God is to be feared in his holy place.
He is the Lord, Israel’s God.
  He gives strength and power to his people.
Blessed be God!

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!

Gospel Acclamation Mt28:19,20

Alleluia, alleluia!

Go, make disciples of all the nations.
I am with you always; yes, to the end of time.
Alleluia!

May 24th : First Reading I commend you to God and to the word of his grace, and its powerA Reading from the Acts of Apostles 20:28-38

May 24th :  First Reading 

I commend you to God and to the word of his grace, and its power

A Reading from the Acts of Apostles 20:28-38 
Paul addressed these words to the elders of the church of Ephesus:
  ‘Be on your guard for yourselves and for all the flock of which the Holy Spirit has made you the overseers, to feed the Church of God which he bought with his own blood. I know quite well that when I have gone fierce wolves will invade you and will have no mercy on the flock. Even from your own ranks there will be men coming forward with a travesty of the truth on their lips to induce the disciples to follow them. So be on your guard, remembering how night and day for three years I never failed to keep you right, shedding tears over each one of you. And now I commend you to God, and to the word of his grace that has power to build you up and to give you your inheritance among all the sanctified.
  ‘I have never asked anyone for money or clothes; you know for yourselves that the work I did earned enough to meet my needs and those of my companions. I did this to show you that this is how we must exert ourselves to support the weak, remembering the words of the Lord Jesus, who himself said, “There is more happiness in giving than in receiving.”’
  When he had finished speaking he knelt down with them all and prayed. By now they were all in tears; they put their arms round Paul’s neck and kissed him; what saddened them most was his saying they would never see his face again. Then they escorted him to the ship.

The Word of the Lord.

திங்கள், 22 மே, 2023

மே 23 : நற்செய்தி வாசகம்தந்தையே, நீர் உம் மகனை மாட்சிப்படுத்தும்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-11a

மே 23 :  நற்செய்தி வாசகம்

தந்தையே, நீர் உம் மகனை மாட்சிப்படுத்தும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-11a
அக்காலத்தில்

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.

நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.

நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.

அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.

என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன். இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

மே 23 : பதிலுரைப் பாடல்திபா 68: 9-10. 19-20 (பல்லவி: 32a)பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.அல்லது: அல்லேலூயா.

மே 23 :  பதிலுரைப் பாடல்

திபா 68: 9-10. 19-20 (பல்லவி: 32a)

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.

அல்லது: அல்லேலூயா.
9
கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.
10
உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். - பல்லவி

19
ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக்கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு.
20
நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 16
அல்லேலூயா, அல்லேலூயா!

 உங்களோடு என்றும் இருக்கும்படி தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.

மே 23 : முதல் வாசகம்ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிக்கிறேன்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 17-27

மே 23 :  முதல் வாசகம்

ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 17-27
அந்நாள்களில்

பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது:

“நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்துகொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன். நன்மை பயக்கும் ஒன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை; பொது இடங்களிலும் வீடு வீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். நம் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன்.

இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடும் என்பது தெரியாது. சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்.

இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்றினேன். ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன். உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று இன்று நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 23rd : Gospel Father, it is time for you to glorify meA Reading from the Holy Gospel according to St.John 17:1-11

May 23rd :  Gospel 

Father, it is time for you to glorify me

A Reading from the Holy Gospel according to St.John 17:1-11
Jesus raised his eyes to heaven and said:
‘Father, the hour has come:
glorify your Son
so that your Son may glorify you;
and, through the power over all mankind that you have given him,
let him give eternal life to all those you have entrusted to him.
And eternal life is this:
to know you,
the only true God,
and Jesus Christ whom you have sent.
I have glorified you on earth
and finished the work that you gave me to do.
Now, Father, it is time for you to glorify me
with that glory I had with you
before ever the world was.
I have made your name known
to the men you took from the world to give me.
They were yours and you gave them to me,
and they have kept your word.
Now at last they know
that all you have given me comes indeed from you;
for I have given them the teaching you gave to me,
and they have truly accepted this, that I came from you,
and have believed that it was you who sent me.
I pray for them;
I am not praying for the world
but for those you have given me,
because they belong to you:
all I have is yours
and all you have is mine,
and in them I am glorified.
I am not in the world any longer,
but they are in the world,
and I am coming to you.’

The Word of the Lord.

May 23rd : Responsorial PsalmPsalm 67(68):10-11,20-21 Kingdoms of the earth, sing to God.orAlleluia!

May 23rd :  Responsorial Psalm

Psalm 67(68):10-11,20-21 

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!
You poured down, O God, a generous rain:
  when your people were starved you gave them new life.
It was there that your people found a home,
  prepared in your goodness, O God, for the poor.

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!

May the Lord be blessed day after day.
  He bears our burdens, God our saviour.
This God of ours is a God who saves.
  The Lord our God holds the keys of death.

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!

Gospel Acclamation cf.Jn14:18

Alleluia, alleluia!

I will not leave you orphans, says the Lord;
I go, but I will come back to you,
and your hearts will be full of joy.
Alleluia!

May 23rd : First Reading I have without faltering put before you the whole of God's purposeA Reading from the Acts of Apostles 20: 17-27

May 23rd :   First Reading 

I have without faltering put before you the whole of God's purpose

A Reading from the Acts of Apostles 20: 17-27
From Miletus Paul sent for the elders of the church of Ephesus. When they arrived he addressed these words to them:
  ‘You know what my way of life has been ever since the first day I set foot among you in Asia, how I have served the Lord in all humility, with all the sorrows and trials that came to me through the plots of the Jews. I have not hesitated to do anything that would be helpful to you; I have preached to you, and instructed you both in public and in your homes, urging both Jews and Greeks to turn to God and to believe in our Lord Jesus.
  ‘And now you see me a prisoner already in spirit; I am on my way to Jerusalem, but have no idea what will happen to me there, except that the Holy Spirit, in town after town, has made it clear enough that imprisonment and persecution await me. But life to me is not a thing to waste words on, provided that when I finish my race I have carried out the mission the Lord Jesus gave me – and that was to bear witness to the Good News of God’s grace.
  ‘I now feel sure that none of you among whom I have gone about proclaiming the kingdom will ever see my face again. And so here and now I swear that my conscience is clear as far as all of you are concerned, for I have without faltering put before you the whole of God’s purpose.’

The Word of the Lord.