இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 15 ஜூன், 2023

June 16th : Responsorial PsalmPsalm 102(103):1-4,6-8,10 The love of the Lord is everlasting upon those who hold him in fear.

June 16th :  Responsorial Psalm

Psalm 102(103):1-4,6-8,10 

The love of the Lord is everlasting upon those who hold him in fear.
My soul, give thanks to the Lord
  all my being, bless his holy name.
My soul, give thanks to the Lord
  and never forget all his blessings.

The love of the Lord is everlasting upon those who hold him in fear.

It is he who forgives all your guilt,
  who heals every one of your ills,
who redeems your life from the grave,
  who crowns you with love and compassion,

The love of the Lord is everlasting upon those who hold him in fear.

The Lord does deeds of justice,
  gives judgement for all who are oppressed.
He made known his ways to Moses
  and his deeds to Israel’s sons.

The love of the Lord is everlasting upon those who hold him in fear.

The Lord is compassion and love,
  slow to anger and rich in mercy.
He does not treat us according to our sins
  nor repay us according to our faults.

The love of the Lord is everlasting upon those who hold him in fear.

June 16th : First ReadingThe Lord set his heart on you and chose youA Reading from the Book of Deuteronomy 7:6-11

June 16th :  First Reading

The Lord set his heart on you and chose you

A Reading from the Book of Deuteronomy 7:6-11 
Moses said to the people: ‘You are a people consecrated to the Lord your God; it is you that the Lord our God has chosen to be his very own people out of all the peoples on the earth.
  ‘If the Lord set his heart on you and chose you, it was not because you outnumbered other peoples: you were the least of all peoples. It was for love of you and to keep the oath he swore to your fathers that the Lord brought you out with his mighty hand and redeemed you from the house of slavery, from the power of Pharaoh king of Egypt. Know then that the Lord your God is God indeed, the faithful God who is true to his covenant and his graciousness for a thousand generations towards those who love him and keep his commandments, but who punishes in their own persons those that hate him. He is not slow to destroy the man who hates him; he makes him work out his punishment in person. You are therefore to keep and observe the commandments and statutes and ordinances that I lay down for you today.’

The Word of the Lord.

புதன், 14 ஜூன், 2023

ஜூன் 15 : நற்செய்தி வாசகம்தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

ஜூன் 15 :  நற்செய்தி வாசகம்

தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 15 : பதிலுரைப் பாடல்திபா 85: 8ab-9,10-11. 12-13 (பல்லவி: 9b)பல்லவி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.

ஜூன் 15 :  பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9,10-11. 12-13 (பல்லவி: 9b)

பல்லவி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.
8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்.
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! 

புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூன் 15 : முதல் வாசகம்கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15- 4: 1, 3-6

ஜூன் 15 :  முதல் வாசகம்

கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15- 4: 1, 3-6
சகோதரர் சகோதரிகளே,

இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும் போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது. ஆனால் ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும். இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக் குறிக்கிறது. ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு. இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சி பெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே.

கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம். நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது. எனவே அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காண முடிவதில்லை.

நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. “இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 15th : Gospel Anyone who is angry with his brother will answer for itA Reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26

June 15th :  Gospel 

Anyone who is angry with his brother will answer for it

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26 
Jesus said to his disciples: ‘If your virtue goes no deeper than that of the scribes and Pharisees, you will never get into the kingdom of heaven.
  ‘You have learnt how it was said to our ancestors: You must not kill; and if anyone does kill he must answer for it before the court. But I say this to you: anyone who is angry with his brother will answer for it before the court; if a man calls his brother “Fool” he will answer for it before the Sanhedrin; and if a man calls him “Renegade” he will answer for it in hell fire. So then, if you are bringing your offering to the altar and there remember that your brother has something against you, leave your offering there before the altar, go and be reconciled with your brother first, and then come back and present your offering. Come to terms with your opponent in good time while you are still on the way to the court with him, or he may hand you over to the judge and the judge to the officer, and you will be thrown into prison. I tell you solemnly, you will not get out till you have paid the last penny.’

The Word of the Lord.

June 15th : Responsorial PsalmPsalm 84(85):9-14 The glory of the Lord will dwell in our land.

June 15th :  Responsorial Psalm

Psalm 84(85):9-14 

The glory of the Lord will dwell in our land.
I will hear what the Lord God has to say,
  a voice that speaks of peace.
His help is near for those who fear him
  and his glory will dwell in our land.

The glory of the Lord will dwell in our land.

Mercy and faithfulness have met;
  justice and peace have embraced.
Faithfulness shall spring from the earth
  and justice look down from heaven.

The glory of the Lord will dwell in our land.

The Lord will make us prosper
  and our earth shall yield its fruit.
Justice shall march before him
  and peace shall follow his steps.

The glory of the Lord will dwell in our land.

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!

Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

June 15th : First ReadingThe veil over their eyes will not be removed until they turn to the LordA Reading from the Second letter of St.Paul to the Corinthians 3:15-4:1,3-6

June 15th :  First Reading

The veil over their eyes will not be removed until they turn to the Lord

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 3:15-4:1,3-6 
Even today, whenever Moses is read, the veil is over their minds. It will not be removed until they turn to the Lord. Now this Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom. And we, with our unveiled faces reflecting like mirrors the brightness of the Lord, all grow brighter and brighter as we are turned into the image that we reflect; this is the work of the Lord who is Spirit.
  Since we have by an act of mercy been entrusted with this work of administration, there is no weakening on our part. If our gospel does not penetrate the veil, then the veil is on those who are not on the way to salvation; the unbelievers whose minds the god of this world has blinded, to stop them seeing the light shed by the Good News of the glory of Christ, who is the image of God. For it is not ourselves that we are preaching, but Christ Jesus as the Lord, and ourselves as your servants for Jesus’ sake. It is the same God that said, ‘Let there be light shining out of darkness’, who has shone in our minds to radiate the light of the knowledge of God’s glory, the glory on the face of Christ.

The Word of the Lord.

செவ்வாய், 13 ஜூன், 2023

ஜூன் 14 : நற்செய்தி வாசகம்அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

ஜூன் 14 :  நற்செய்தி வாசகம்

அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 14 : பதிலுரைப் பாடல்திபா 99: 5. 6. 7. 8. 9 (பல்லவி: 9c)பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.

ஜூன் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 99: 5. 6. 7. 8. 9 (பல்லவி: 9c)

பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.
5
நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்! - பல்லவி

6
மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். - பல்லவி

7
மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். - பல்லவி

8
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்; மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்; ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர். - பல்லவி

9
நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 25: 4c, 5a
அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.