இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 27 ஜூன், 2023

ஜூன் 28 : முதல் வாசகம்ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12, 17-18

ஜூன் 28 :  முதல் வாசகம்

ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12, 17-18
அந்நாள்களில்

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.” அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்” என்றார்.

அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?” என்றார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.

கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 28th : Gospel You will be able to tell them by their fruitsA Reading from the Holy Gospel according to St.Matthew 7:15-20

June 28th :  Gospel 

You will be able to tell them by their fruits

A Reading from the Holy Gospel according to St.Matthew 7:15-20 
Jesus said to his disciples: ‘Beware of false prophets who come to you disguised as sheep but underneath are ravenous wolves. You will be able to tell them by their fruits. Can people pick grapes from thorns, or figs from thistles? In the same way, a sound tree produces good fruit but a rotten tree bad fruit. A sound tree cannot bear bad fruit, nor a rotten tree bear good fruit. Any tree that does not produce good fruit is cut down and thrown on the fire. I repeat, you will be able to tell them by their fruits.’

The Word of the Lord.

June 28th : Responsorial PsalmPsalm 104(105):1-4,6-9 The Lord remembers his covenant for ever.orAlleluia!

June 28th :  Responsorial Psalm

Psalm 104(105):1-4,6-9 

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!
Give thanks to the Lord, tell his name,
  make known his deeds among the peoples.
O sing to him, sing his praise;
  tell all his wonderful works!

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

Be proud of his holy name,
  let the hearts that seek the Lord rejoice.
Consider the Lord and his strength;
  constantly seek his face.

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

O children of Abraham, his servant,
  O sons of the Jacob he chose.
He, the Lord, is our God:
  his judgements prevail in all the earth.

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

He remembers his covenant for ever,
  his promise for a thousand generations,
the covenant he made with Abraham,
  the oath he swore to Isaac.

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!

June 28th : First ReadingCount the stars: such shall be your descendantsA Reading from the Book of Genesis 15:1-12,17-18

June 28th : First Reading

Count the stars: such shall be your descendants

A Reading from the Book of Genesis 15:1-12,17-18 
It happened that the word of the Lord was spoken to Abram in a vision, ‘Have no fear, Abram, I am your shield; your reward will be very great.’
  ‘My Lord,’ Abram replied ‘what do you intend to give me? I go childless…’. Then Abram said, ‘See, you have given me no descendants; some man of my household will be my heir.’ And then this word of the Lord was spoken to him, ‘He shall not be your heir; your heir shall be of your own flesh and blood.’ Then taking him outside he said, ‘Look up to heaven and count the stars if you can. Such will be your descendants’ he told him. Abram put his faith in the Lord, who counted this as making him justified.
  ‘I am the Lord’ he said to him ‘who brought you out of Ur of the Chaldaeans to make you heir to this land.’ ‘My Lord,’ Abram replied ‘how am I to know that I shall inherit it?’ He said to him, ‘Get me a three-year-old heifer, a three-year-old goat, a three-year-old ram, a turtledove and a young pigeon.’ He brought him all these, cut them in half and put half on one side and half facing it on the other; but the birds he did not cut in half. Birds of prey came down on the carcases but Abram drove them off.
  Now as the sun was setting Abram fell into a deep sleep, and terror seized him. When the sun had set and darkness had fallen, there appeared a smoking furnace and a firebrand that went between the halves. That day the Lord made a Covenant with Abram in these terms:
‘To your descendants I give this land,
from the wadi of Egypt to the Great River,
the river Euphrates.’

The Word of the Lord.

திங்கள், 26 ஜூன், 2023

ஜூன் 27 : நற்செய்தி வாசகம்பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6, 12-14

ஜூன் 27 :  நற்செய்தி வாசகம்

பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6, 12-14
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 27 : பதிலுரைப் பாடல்திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

ஜூன் 27 :  பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
2
மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;
3a
தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி

3bc
தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4ab
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். - பல்லவி

5
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா! 

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

ஜூன் 27 : முதல் வாசகம்எனக்கும் உனக்கும் இடையே பூசல் வேண்டாம்; ஏனெனில் நாம் உறவினர்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 13: 2, 5-18

ஜூன் 27 :  முதல் வாசகம்

எனக்கும் உனக்கும் இடையே பூசல் வேண்டாம்; ஏனெனில் நாம் உறவினர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 13: 2, 5-18
அந்நாள்களில்

ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஆபிராம் லோத்தை நோக்கி, “எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்பட வேண்டாம். ஏனெனில் நாம் உறவினர். நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்” என்றார்.

லோத்து கண்களை உயர்த்தி, எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறு இருந்தது. லோத்து யோர்தான் சுற்றுப் பகுதி முழுவதையும் தேர்ந்து கொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடமிருந்து பிரிந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்து வந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக் கொண்டார். ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக் கொடிய பாவிகளாக இருந்தனர்.

லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப் போகிறேன். உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம். நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்” என்றார்.

ஆகவே ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனில் இருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பு அருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 27th : GospelTreat others as you would like them to treat youA Reading from the Holy Gospel according to St.Matthew 7:6, 12-14

June 27th : Gospel

Treat others as you would like them to treat you

A Reading from the Holy Gospel according to St.Matthew 7:6, 12-14
Jesus said to his disciples: ‘Do not give dogs what is holy; and do not throw your pearls in front of pigs, or they may trample them and then turn on you and tear you to pieces.
  ‘So always treat others as you would like them to treat you; that is the meaning of the Law and the Prophets.
  ‘Enter by the narrow gate, since the road that leads to perdition is wide and spacious, and many take it; but it is a narrow gate and a hard road that leads to life, and only a few find it.’

The Word of the Lord.

June 27th : Responsorial PsalmPsalm 14(15):2-5 The just will live in the presence of the Lord.

June 27th :   Responsorial Psalm

Psalm 14(15):2-5 

The just will live in the presence of the Lord.
Lord, who shall dwell on your holy mountain?
He who walks without fault;
he who acts with justice
and speaks the truth from his heart;
he who does not slander with his tongue.

The just will live in the presence of the Lord.

He who does no wrong to his brother,
who casts no slur on his neighbour,
who holds the godless in disdain,
but honours those who fear the Lord.

The just will live in the presence of the Lord.

He who keeps his pledge, come what may;
who takes no interest on a loan
and accepts no bribes against the innocent.
Such a man will stand firm for ever.

The just will live in the presence of the Lord.

Gospel Acclamation Mt11:25

Alleluia, alleluia!

Blessed are you, Father,
Lord of heaven and earth,
for revealing the mysteries of the kingdom
to mere children.
Alleluia!

June 27th : First ReadingAbram settles in the land of Canaan and builds an altar to the LordA Reading from the Book of Genesis 13:2,5-18

June 27th :  First Reading

Abram settles in the land of Canaan and builds an altar to the Lord

A Reading from the Book of Genesis 13:2,5-18
Abram was a very rich man, with livestock, silver and gold. Lot, who was travelling with Abram, had flocks and cattle of his own, and tents too. The land was not sufficient to accommodate them both at once, for they had too many possessions to be able to live together. Dispute broke out between the herdsmen of Abram’s livestock and those of Lot’s. (The Canaanites and the Perizzites were then living in the land.) Accordingly Abram said to Lot, ‘Let there be no dispute between me and you, nor between my herdsmen and yours, for we are brothers. Is not the whole land open before you? Part company with me: if you take the left, I will go right; if you take the right, I will go left.’
  Looking round, Lot saw all the Jordan plain, irrigated everywhere – this was before the Lord destroyed Sodom and Gomorrah – like the garden of the Lord or the land of Egypt, as far as Zoar. So Lot chose all the Jordan plain for himself and moved off eastwards. Thus they parted company: Abram settled in the land of Canaan; Lot settled among the towns of the plain, pitching his tents on the outskirts of Sodom. Now the people of Sodom were vicious men, great sinners against the Lord.
  The Lord said to Abram after Lot had parted company with him, ‘Look all round from where you are towards the north and the south, towards the east and the west. All the land within sight I will give to you and your descendants for ever. I will make your descendants like the dust on the ground: when men succeed in counting the specks of dust on the ground, then they will be able to count your descendants! Come, travel through the length and breadth of the land, for I mean to give it to you.’
  So Abram went with his tents to settle at the Oak of Mamre, at Hebron, and there he built an altar to the Lord.

The Word of the Lord.