இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 30 ஜூன், 2023

ஜூலை 1 : முதல் வாசகம்ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15

ஜூலை 1 :  முதல் வாசகம்

ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15

அந்நாள்களில்
ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார்.

அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்க கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள் முன் தரை மட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.

அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, “விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு” என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.

பின்பு அவர்கள் அவரை நோக்கி, “ உன் மனைவி சாரா எங்கே?” என்று கேட்க, அவர், “அதோ கூடாரத்தில் இருக்கிறாள்” என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார்.

அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. எனவே, சாரா தமக்குள் சிரித்து, “நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?” என்றாள்.

அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “ ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா’ என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்று சொன்னார்.

சாராவோ, “நான் சிரிக்கவில்லை” என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், “இல்லை, நீ சிரித்தாய்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 1st : Gospel 'I am not worthy to have you under my roof: give the word, and my servant will be healed'A Reading from the Holy Gospel according to St.Matthew 8:5-17

July 1st :  Gospel 

'I am not worthy to have you under my roof: give the word, and my servant will be healed'

A Reading from the Holy Gospel according to St.Matthew 8:5-17 
When Jesus went into Capernaum a centurion came up and pleaded with him. ‘Sir,’ he said ‘my servant is lying at home paralysed, and in great pain.’ ‘I will come myself and cure him’ said Jesus. The centurion replied, ‘Sir, I am not worthy to have you under my roof; just give the word and my servant will be cured. For I am under authority myself, and have soldiers under me; and I say to one man: Go, and he goes; to another: Come here, and he comes; to my servant: Do this, and he does it.’ When Jesus heard this he was astonished and said to those following him, ‘I tell you solemnly, nowhere in Israel have I found faith like this. And I tell you that many will come from east and west to take their places with Abraham and Isaac and Jacob at the feast in the kingdom of heaven; but the subjects of the kingdom will be turned out into the dark, where there will be weeping and grinding of teeth.’ And to the centurion Jesus said, ‘Go back, then; you have believed, so let this be done for you.’ And the servant was cured at that moment.
  And going into Peter’s house Jesus found Peter’s mother-in-law in bed with fever. He touched her hand and the fever left her, and she got up and began to wait on him.
  That evening they brought him many who were possessed by devils. He cast out the spirits with a word and cured all who were sick. This was to fulfil the prophecy of Isaiah:
He took our sicknesses away and carried our diseases for us.

The Word of the Lord.

July 1st : Responsorial PsalmLuke 1:46-50,53-55 The Lord remembered his mercy.My soul glorifies the Lord, my spirit rejoices in God, my Saviour

July 1st :  Responsorial Psalm

Luke 1:46-50,53-55 

The Lord remembered his mercy.

My soul glorifies the Lord,
  my spirit rejoices in God, my Saviour.
The Lord remembered his mercy.

He looks on his servant in her nothingness;
  henceforth all ages will call me blessed.
The Almighty works marvels for me.
  Holy his name!

The Lord remembered his mercy.

His mercy is from age to age,
  on those who fear him.
He fills the starving with good things,
  sends the rich away empty.

The Lord remembered his mercy.

He protects Israel, his servant,
  remembering his mercy,
the mercy promised to our fathers,
  to Abraham and his sons for ever.

The Lord remembered his mercy.

Gospel Acclamation cf.2Tim1:10

Alleluia, alleluia!

Our Saviour Jesus Christ abolished death
and he has proclaimed life through the Good News.
Alleluia!

July 1st : First Reading 'Next year your wife Sarah will have a son'A Reading from the book of Genesis 18: 1-15

July 1st :  First Reading 

'Next year your wife Sarah will have a son'

A Reading from the book of Genesis 18: 1-15
The Lord appeared to Abraham at the Oak of Mamre while he was sitting by the entrance of the tent during the hottest part of the day. He looked up, and there he saw three men standing near him. As soon as he saw them he ran from the entrance of the tent to meet them, and bowed to the ground. ‘My lord,’ he said ‘I beg you, if I find favour with you, kindly do not pass your servant by. A little water shall be brought; you shall wash your feet and lie down under the tree. Let me fetch a little bread and you shall refresh yourselves before going further. That is why you have come in your servant’s direction.’ They replied, ‘Do as you say.’
  Abraham hastened to the tent to find Sarah.’ ‘Hurry,’ he said ‘knead three bushels of flour and make loaves.’ Then running to the cattle Abraham took a fine and tender calf and gave it to the servant, who hurried to prepare it. Then taking cream, milk and the calf he had prepared, he laid all before them, and they ate while he remained standing near them under the tree.
  ‘Where is your wife Sarah?’ they asked him. ‘She is in the tent’ he replied. Then his guest said, ‘I shall visit you again next year without fail, and your wife will then have a son.’ Sarah was listening at the entrance of the tent behind him. Now Abraham and Sarah were old, well on in years, and Sarah had ceased to have her monthly periods. So Sarah laughed to herself, thinking, ‘Now that I am past the age of child-bearing, and my husband is an old man, is pleasure to come my way again!’ But the Lord asked Abraham, ‘Why did Sarah laugh and say, “Am I really going to have a child now that I am old?” Is anything too wonderful for the Lord? At the same time next year I shall visit you again and Sarah will have a son.’ ‘I did not laugh’ Sarah said, lying because she was afraid. But he replied, ‘Oh yes, you did laugh.’

The Word of the Lord.

வியாழன், 29 ஜூன், 2023

ஜூன் 30 : நற்செய்தி வாசகம்நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4

ஜூன் 30 :  நற்செய்தி வாசகம்

நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4
அக்காலத்தில்

இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார். இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 30 : பதிலுரைப் பாடல்திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 4)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.

ஜூன் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 4)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.
1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

ஜூன் 30 : முதல் வாசகம்உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22

ஜூன் 30 :  முதல் வாசகம்

உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22
ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு” என்றார்.

மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்” என்றார்.

பின்பு கடவுள் ஆபிரகாமிடம், “உன் மனைவியைச் ‘சாராய்’ என அழைக்காதே. இனிச் ‘சாரா’ என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்” என்றார்.

ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, “நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். ஆபிரகாம் கடவுளிடம், “உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்” என்றார்.

கடவுள் அவரிடம், “அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ‘ஈசாக்கு’ எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப் பின்வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர் களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும். ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்” என்றார்.

அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 30th : Gospel 'If you want to, you can cure me'A Reading from the Holy Gospel according to St.Matthew 8:1-4

June 30th :  Gospel 

'If you want to, you can cure me'

A Reading from the Holy Gospel according to St.Matthew 8:1-4
After Jesus had come down from the mountain large crowds followed him. A leper now came up and bowed low in front of him. ‘Sir,’ he said ‘if you want to, you can cure me.’ Jesus stretched out his hand, touched him and said, ‘Of course I want to! Be cured!’ And his leprosy was cured at once. Then Jesus said to him, ‘Mind you do not tell anyone, but go and show yourself to the priest and make the offering prescribed by Moses, as evidence for them.’

The Word of the Lord.

June 30th : Responsorial PsalmPsalm 127(128):1-5 Indeed the man shall be blessed, the man who fears the Lord.

June 30th :  Responsorial Psalm

Psalm 127(128):1-5 

Indeed the man shall be blessed, the man who fears the Lord.
O blessed are those who fear the Lord
  and walk in his ways!
By the labour of your hands you shall eat.
  You will be happy and prosper.

Indeed the man shall be blessed, the man who fears the Lord.

Your wife will be like a fruitful vine
  in the heart of your house;
your children like shoots of the olive,
  around your table.

Indeed the man shall be blessed, the man who fears the Lord.

Indeed thus shall be blessed
  the man who fears the Lord.
May the Lord bless you from Zion
  all the days of your life!

Indeed the man shall be blessed, the man who fears the Lord.

Gospel Acclamation Ps144:13

Alleluia, alleluia!

The Lord is faithful in all his words
and loving in all his deeds.
Alleluia!

June 30th : First ReadingThe Lord make a covenant and gives Abram and Sarai new namesA Reading from the Book of Genesis 17:1,9-10,15-22

June 30th :  First Reading

The Lord make a covenant and gives Abram and Sarai new names

A Reading from the Book of Genesis 17:1,9-10,15-22 
When Abram was ninety-nine years old the Lord appeared to him and said, ‘I am El Shaddai. Bear yourself blameless in my presence, and I will make a Covenant between myself and you. You on your part shall maintain my Covenant, yourself and your descendants after you, generation after generation. Now this is my Covenant which you are to maintain between myself and you, and your descendants after you: all your males must be circumcised.’
  God said to Abraham, ‘As for Sarai your wife, you shall not call her Sarai, but Sarah. I will bless her and moreover give you a son by her. I will bless her and nations shall come out of her; kings of peoples shall descend from her.’ Abraham bowed to the ground, and he laughed, thinking to himself, ‘Is a child to be born to a man one hundred years old, and will Sarah have a child at the age of ninety?’ Abraham said to God, ‘Oh, let Ishmael live in your presence!’ But God replied, ‘No, but your wife Sarah shall bear you a son whom you are to name Isaac. With him I will establish my Covenant, a Covenant in perpetuity, to be his God and the God of his descendants after him. For Ishmael too I grant you your request: I bless him and I will make him fruitful and greatly increased in numbers. He shall be the father of twelve princes, and I will make him into a great nation. But my Covenant I will establish with Isaac, whom Sarah will bear you at this time next year.’ When he had finished speaking to Abraham God went up from him.

The Word of the Lord.