இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 2 செப்டம்பர், 2023

September 3rd : Responsorial PsalmPsalm 62(63):2-6,8-9 For you my soul is thirsting, O Lord my God.

September 3rd :  Responsorial Psalm

Psalm 62(63):2-6,8-9 

For you my soul is thirsting, O Lord my God.
O God, you are my God, for you I long;
  for you my soul is thirsting.
My body pines for you
  like a dry, weary land without water.

For you my soul is thirsting, O Lord my God.

So I gaze on you in the sanctuary
  to see your strength and your glory.
For your love is better than life,
  my lips will speak your praise.

For you my soul is thirsting, O Lord my God.

So I will bless you all my life,
  in your name I will lift up my hands.
My soul shall be filled as with a banquet,
  my mouth shall praise you with joy.

For you my soul is thirsting, O Lord my God.

For you have been my help;
  in the shadow of your wings I rejoice.
My soul clings to you;
  your right hand holds me fast.

For you my soul is thirsting, O Lord my God.

September 3rd : First reading The word of the Lord has meant insult for meA reading from the book of Jeremiah 20: 7-9

September 3rd :  First reading 

The word of the Lord has meant insult for me

A reading from the book of Jeremiah 20: 7-9 
You have seduced me, Lord, and I have let myself be seduced;
you have overpowered me: you were the stronger.
I am a daily laughing-stock,
everybody’s butt.
Each time I speak the word, I have to howl
and proclaim: ‘Violence and ruin!’
The word of the Lord has meant for me
insult, derision, all day long.
I used to say, ‘I will not think about him,
I will not speak in his name any more.’
Then there seemed to be a fire burning in my heart,
imprisoned in my bones.
The effort to restrain it wearied me,
I could not bear it.

The Word of the Lord.

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

செப்டம்பர் 2 : நற்செய்தி வாசகம்சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

செப்டம்பர் 2 :  நற்செய்தி வாசகம்

சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30
அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார். ‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 2 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 7-8. 9 (பல்லவி: 9b)பல்லவி: ஆண்டவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்

செப்டம்பர் 2 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 7-8. 9 (பல்லவி: 9b)

பல்லவி: ஆண்டவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி

9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! 

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

செப்டம்பர் 2 : முதல் வாசகம்ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-11

செப்டம்பர் 2 :  முதல் வாசகம்

ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-11
சகோதரர் சகோதரிகளே,

சகோதர அன்பைப்பற்றி உங்களுக்கு எழுதவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் மாசிதோனியாவிலுள்ள சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் அன்பு செலுத்தி வருகிறீர்கள். அன்பர்களே! இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டது போல, உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 2nd : Responsorial PsalmPsalm 97(98):1,7-9 The Lord comes to rule the people with fairness.

September 2nd :  Responsorial Psalm

Psalm 97(98):1,7-9 

The Lord comes to rule the people with fairness.
Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

The Lord comes to rule the people with fairness.

Let the sea and all within it, thunder;
  the world, and all its peoples.
Let the rivers clap their hands
  and the hills ring out their joy

The Lord comes to rule the people with fairness.

at the presence of the Lord: for he comes,
  he comes to rule the earth.
He will rule the world with justice
  and the peoples with fairness.

The Lord comes to rule the people with fairness.

Gospel Acclamation Ph2:15-16

Alleluia, alleluia!

You will shine in the world like bright stars
because you are offering it the word of life.
Alleluia!

September 2nd : First readingYou have learnt from God how to love one anotherA reading from the first letter of St.Paul to the Thessalonians 4: 9-11

September 2nd :  First reading

You have learnt from God how to love one another

A reading from the first letter of St.Paul to the  Thessalonians 4: 9-11 
As for loving our brothers, there is no need for anyone to write to you about that, since you have learnt from God yourselves to love one another, and in fact this is what you are doing with all the brothers throughout the whole of Macedonia. However, we do urge you, brothers, to go on making even greater progress and to make a point of living quietly, attending to your own business and earning your living, just as we told you to.

The Word of the Lord.

September 2nd : GospelYou have been faithful in small things: come and join in your master's happinessA reading from the Holy Gospel according to St.Matthew 25: 14-30.

September 2nd :  Gospel

You have been faithful in small things: come and join in your master's happiness

A reading from the Holy Gospel according to St.Matthew 25: 14-30.
Jesus spoke this parable to his disciples: ‘The kingdom of Heaven is like a man on his way abroad who summoned his servants and entrusted his property to them. To one he gave five talents, to another two, to a third one; each in proportion to his ability. Then he set out.
  ‘The man who had received the five talents promptly went and traded with them and made five more. The man who had received two made two more in the same way. But the man who had received one went off and dug a hole in the ground and hid his master’s money.
  ‘Now a long time after, the master of those servants came back and went through his accounts with them. The man who had received the five talents came forward bringing five more. “Sir,” he said “you entrusted me with five talents; here are five more that I have made.”
  ‘His master said to him, “Well done, good and faithful servant; you have shown you can be faithful in small things, I will trust you with greater; come and join in your master’s happiness.”
  ‘Next the man with the two talents came forward. “Sir,” he said “you entrusted me with two talents; here are two more that I have made.” His master said to him, “Well done, good and faithful servant; you have shown you can be faithful in small things, I will trust you with greater; come and join in your master’s happiness.”
  ‘Last came forward the man who had the one talent. “Sir,” said he “I had heard you were a hard man, reaping where you have not sown and gathering where you have not scattered; so I was afraid, and I went off and hid your talent in the ground. Here it is; it was yours, you have it back.” But his master answered him, “You wicked and lazy servant! So you knew that I reap where I have not sown and gather where I have not scattered? Well then, you should have deposited my money with the bankers, and on my return I would have recovered my capital with interest. So now, take the talent from him and give it to the man who has the five talents. For to everyone who has will be given more, and he will have more than enough; but from the man who has not, even what he has will be taken away. As for this good-for-nothing servant, throw him out into the dark, where there will be weeping and grinding of teeth.”’

The Word of the Lord.

September 2nd : GospelYou have been faithful in small things: come and join in your master's happinessA reading from the Holy Gospel according to St.Matthew 25: 14-30.

September 2nd :  Gospel

You have been faithful in small things: come and join in your master's happiness

A reading from the Holy Gospel according to St.Matthew 25: 14-30.
Jesus spoke this parable to his disciples: ‘The kingdom of Heaven is like a man on his way abroad who summoned his servants and entrusted his property to them. To one he gave five talents, to another two, to a third one; each in proportion to his ability. Then he set out.
  ‘The man who had received the five talents promptly went and traded with them and made five more. The man who had received two made two more in the same way. But the man who had received one went off and dug a hole in the ground and hid his master’s money.
  ‘Now a long time after, the master of those servants came back and went through his accounts with them. The man who had received the five talents came forward bringing five more. “Sir,” he said “you entrusted me with five talents; here are five more that I have made.”
  ‘His master said to him, “Well done, good and faithful servant; you have shown you can be faithful in small things, I will trust you with greater; come and join in your master’s happiness.”
  ‘Next the man with the two talents came forward. “Sir,” he said “you entrusted me with two talents; here are two more that I have made.” His master said to him, “Well done, good and faithful servant; you have shown you can be faithful in small things, I will trust you with greater; come and join in your master’s happiness.”
  ‘Last came forward the man who had the one talent. “Sir,” said he “I had heard you were a hard man, reaping where you have not sown and gathering where you have not scattered; so I was afraid, and I went off and hid your talent in the ground. Here it is; it was yours, you have it back.” But his master answered him, “You wicked and lazy servant! So you knew that I reap where I have not sown and gather where I have not scattered? Well then, you should have deposited my money with the bankers, and on my return I would have recovered my capital with interest. So now, take the talent from him and give it to the man who has the five talents. For to everyone who has will be given more, and he will have more than enough; but from the man who has not, even what he has will be taken away. As for this good-for-nothing servant, throw him out into the dark, where there will be weeping and grinding of teeth.”’

The Word of the Lord.

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

செப்டம்பர் 1 : நற்செய்தி வாசகம்இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

செப்டம்பர் 1 :  நற்செய்தி வாசகம்

இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள கன்னித் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.