இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

செப்டம்பர் 4 : முதல் வாசகம்இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17

செப்டம்பர் 4 :  முதல் வாசகம்

இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17
சகோதரர் சகோதரிகளே,

இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிடமாட்டோம். கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 4th : Gospel 'This text is being fulfilled today, even as you listen'A reading from the Holy Gospel according to St.Luke 4:16-30

September 4th :  Gospel 

'This text is being fulfilled today, even as you listen'

A reading from the Holy Gospel according to St.Luke 4:16-30 
Jesus came to Nazara, where he had been brought up, and went into the synagogue on the sabbath day as he usually did. He stood up to read and they handed him the scroll of the prophet Isaiah. Unrolling the scroll he found the place where it is written:
The spirit of the Lord has been given to me,
for he has anointed me.
He has sent me to bring the good news to the poor,
to proclaim liberty to captives
and to the blind new sight,
to set the downtrodden free,
to proclaim the Lord’s year of favour.
He then rolled up the scroll, gave it back to the assistant and sat down. And all eyes in the synagogue were fixed on him. Then he began to speak to them, ‘This text is being fulfilled today even as you listen.’ And he won the approval of all, and they were astonished by the gracious words that came from his lips. They said, ‘This is Joseph’s son, surely?’
  But he replied, ‘No doubt you will quote me the saying, “Physician, heal yourself” and tell me, “We have heard all that happened in Capernaum, do the same here in your own countryside.”’
  And he went on, ‘I tell you solemnly, no prophet is ever accepted in his own country.
  ‘There were many widows in Israel, I can assure you, in Elijah’s day, when heaven remained shut for three years and six months and a great famine raged throughout the land, but Elijah was not sent to any one of these: he was sent to a widow at Zarephath, a Sidonian town. And in the prophet Elisha’s time there were many lepers in Israel, but none of these was cured, except the Syrian, Naaman.’
  When they heard this everyone in the synagogue was enraged. They sprang to their feet and hustled him out of the town; and they took him up to the brow of the hill their town was built on, intending to throw him down the cliff, but he slipped through the crowd and walked away.

The Word of the Lord.

September 4th : Responsorial PsalmPsalm 95(96):1,3-5,11-13 The Lord comes to rule the earth.

September 4th :  Responsorial Psalm

Psalm 95(96):1,3-5,11-13 

The Lord comes to rule the earth.
O sing a new song to the Lord,
  sing to the Lord all the earth.
Tell among the nations his glory
  and his wonders among all the peoples.

The Lord comes to rule the earth.

The Lord is great and worthy of praise,
  to be feared above all gods;
the gods of the heathens are naught.
  It was the Lord who made the heavens,

The Lord comes to rule the earth.

Let the heavens rejoice and earth be glad,
  let the sea and all within it thunder praise,
let the land and all it bears rejoice,
  all the trees of the wood shout for joy
at the presence of the Lord for he comes,
  he comes to rule the earth.

The Lord comes to rule the earth.

With justice he will rule the world,
  he will judge the peoples with his truth.

The Lord comes to rule the earth.

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!
I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

September 4th : First readingDo not grieve about those who have died in JesusA reading from the first letter of St.Paul to the Thessalonians 4:13-18

September 4th :  First reading

Do not grieve about those who have died in Jesus

A reading from the first letter of St.Paul to the Thessalonians 4:13-18 
We want you to be quite certain, brothers, about those who have died, to make sure that you do not grieve about them, like the other people who have no hope. We believe that Jesus died and rose again, and that it will be the same for those who have died in Jesus: God will bring them with him. We can tell you this from the Lord’s own teaching, that any of us who are left alive until the Lord’s coming will not have any advantage over those who have died. At the trumpet of God, the voice of the archangel will call out the command and the Lord himself will come down from heaven; those who have died in Christ will be the first to rise, and then those of us who are still alive will be taken up in the clouds, together with them; to meet the Lord in the air. So we shall stay with the Lord for ever. With such thoughts as these you should comfort one another.

The Word of the Lord.

சனி, 2 செப்டம்பர், 2023

செப்டம்பர் 3 : நற்செய்தி வாசகம்என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21-27

செப்டம்பர் 3 :  நற்செய்தி வாசகம்

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21-27
அக்காலத்தில்

இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றார்.

பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 3 : இரண்டாம் வாசகம்தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-2

செப்டம்பர் 3 :  இரண்டாம் வாசகம்

தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-2
சகோதரர் சகோதரிகளே,

கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 18 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா!

 கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

செப்டம்பர் 3 : பதிலுரைப் பாடல்திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1b)பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

செப்டம்பர் 3 :  பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1b)

பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
1
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி

2
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
3
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. - பல்லவி

4
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5
அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி

7
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.
8
நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. - பல்லவி

செப்டம்பர் 3 : முதல் வாசகம்ஆண்டவரின் வாக்கு என்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 7-9

செப்டம்பர் 3 :  முதல் வாசகம்

ஆண்டவரின் வாக்கு என்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 7-9
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் ‘வன்முறை அழிவு’ என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

“அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 3rd : Gospel'Get behind me, Satan!'A reading from the Holy Gospel according to St.Matthew 16: 21-27

September 3rd :  Gospel

'Get behind me, Satan!'

A reading from the Holy Gospel according to St.Matthew 16: 21-27 
Jesus began to make it clear to his disciples that he was destined to go to Jerusalem and suffer grievously at the hands of the elders and chief priests and scribes, to be put to death and to be raised up on the third day. Then, taking him aside, Peter started to remonstrate with him. ‘Heaven preserve you, Lord;’ he said ‘this must not happen to you.’ But he turned and said to Peter, ‘Get behind me, Satan! You are an obstacle in my path, because the way you think is not God’s way but man’s.’
  Then Jesus said to his disciples, ‘If anyone wants to be a follower of mine, let him renounce himself and take up his cross and follow me. For anyone who wants to save his life will lose it; but anyone who loses his life for my sake will find it. What, then, will a man gain if he wins the whole world and ruins his life? Or what has a man to offer in exchange for his life?
  ‘For the Son of Man is going to come in the glory of his Father with his angels, and, when he does, he will reward each one according to his behaviour.’

The Word of the Lord.

September 3rd : Second readingOffer your bodies as a living sacrificeA reading from the letter of St.Paul to the Romans 12:1-2

September 3rd :  Second reading

Offer your bodies as a living sacrifice

A reading from the letter of St.Paul to the Romans 12:1-2 
Think of God’s mercy, my brothers, and worship him, I beg you, in a way that is worthy of thinking beings, by offering your living bodies as a holy sacrifice, truly pleasing to God. Do not model yourselves on the behaviour of the world around you, but let your behaviour change, modelled by your new mind. This is the only way to discover the will of God and know what is good, what it is that God wants, what is the perfect thing to do.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!

May the Father of our Lord Jesus Christ
enlighten the eyes of our mind,
so that we can see what hope his call holds for us.
Alleluia!