இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 13 செப்டம்பர், 2023

செப்டம்பர் 14 : பதிலுரைப் பாடல்திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.

செப்டம்பர் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)

பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.
1
என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள்.
2
நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். - பல்லவி

34
அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.
35
கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். - பல்லவி

36
ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.
37
அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. - பல்லவி

38
அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. - பல்லவி

செப்டம்பர் 14 : முதல் வாசகம்கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

செப்டம்பர் 14 :  முதல் வாசகம்

கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9
அந்நாள்களில்

ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.

உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர்.

அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 14th : Gospel God sent his Son so that through him the world might be savedA Reading from the Holy Gospel according to St.John 3: 13-17

September 14th :  Gospel 

God sent his Son so that through him the world might be saved

A Reading from the Holy Gospel according to St.John 3: 13-17 
Jesus said to Nicodemus:
‘No one has gone up to heaven
except the one who came down from heaven,
the Son of Man who is in heaven;
and the Son of Man must be lifted up
as Moses lifted up the serpent in the desert,
so that everyone who believes may have eternal life in him.
Yes, God loved the world so much that he gave his only Son,
so that everyone who believes in him may not be lost
but may have eternal life.
For God sent his Son into the world
not to condemn the world,
but so that through him the world might be saved.’

The Word of the Lord.

September 14th : Second ReadingChrist humbled himself but God raised him highA Reading from the Letter of St.Paul to the Philippians 2: 6-11

September 14th :  Second Reading

Christ humbled himself but God raised him high

A Reading from the Letter of St.Paul to the Philippians 2: 6-11
His state was divine, yet Christ Jesus did not cling
to his equality with God but emptied himself to assume the condition of a slave and became as men are; and being as all men are, he was humbler yet, even to accepting death,
death on a cross. But God raised him high and gave him the name which is above all other names so that all beings
in the heavens, on earth and in the underworld, should bend the knee at the name of Jesus and that every tongue should acclaim
Jesus Christ as Lord, to the glory of God the Father.

The Word of the Lord.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

We adore you, O Christ,
and we bless you;
because by your cross
you have redeemed the world.
Alleluia!

September 14th : Responsorial PsalmPsalm 77(78):1-2,34-38 Never forget the deeds of the Lord.

September 14th :  Responsorial Psalm

Psalm 77(78):1-2,34-38 

Never forget the deeds of the Lord.
Give heed, my people, to my teaching;
  turn your ear to the words of my mouth.
I will open my mouth in a parable
  and reveal hidden lessons of the past.

Never forget the deeds of the Lord.

When he slew them then they would seek him,
  return and seek him in earnest.
They would remember that God was their rock,
  God the Most High their redeemer.

Never forget the deeds of the Lord.

But the words they spoke were mere flattery;
  they lied to him with their lips.
For their hearts were not truly with him;
  they were not faithful to his covenant.

Never forget the deeds of the Lord.

Yet he who is full of compassion
  forgave them their sin and spared them.
So often he held back his anger
  when he might have stirred up his rage.

Never forget the deeds of the Lord.

September 14th : First reading If anyone was bitten by a serpent, he looked up at the bronze serpent and livedA reading from the book of Numbers 21: 4-9

September 14th :  First reading 

If anyone was bitten by a serpent, he looked up at the bronze serpent and lived
A reading from the book of Numbers 21: 4-9 

On the way through the wilderness the people lost patience. They spoke against God and against Moses, ‘Why did you bring us out of Egypt to die in this wilderness? For there is neither bread nor water here; we are sick of this unsatisfying food.’
  At this God sent fiery serpents among the people; their bite brought death to many in Israel. The people came and said to Moses, ‘We have sinned by speaking against the Lord and against you. Intercede for us with the Lord to save us from these serpents.’ Moses interceded for the people, and the Lord answered him, ‘Make a fiery serpent and put it on a standard. If anyone is bitten and looks at it, he shall live.’ So Moses fashioned a bronze serpent which he put on a standard, and if anyone was bitten by a serpent, he looked at the bronze serpent and lived.

The Word of the Lord.

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

செப்டம்பர் 13 : நற்செய்தி வாசகம்ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26

செப்டம்பர் 13 :  நற்செய்தி வாசகம்

ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26
அக்காலத்தில்

இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.

ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 13th : Gospel Happy are you who are poor, who are hungry, who weepA reading from the Holy Gospel according to St.Luke 6: 20-26

September 13th :  Gospel 

Happy are you who are poor, who are hungry, who weep

A reading from the Holy Gospel according to St.Luke 6: 20-26 
Fixing his eyes on his disciples Jesus said:
‘How happy are you who are poor: yours is the kingdom of God.
Happy you who are hungry now: you shall be satisfied.
Happy you who weep now: you shall laugh.
Happy are you when people hate you, drive you out, abuse you, denounce your name as criminal, on account of the Son of Man. Rejoice when that day comes and dance for joy, for then your reward will be great in heaven. This was the way their ancestors treated the prophets.
‘But alas for you who are rich: you are having your consolation now.
Alas for you who have your fill now: you shall go hungry.
Alas for you who laugh now: you shall mourn and weep.
‘Alas for you when the world speaks well of you! This was the way their ancestors treated the false prophets.’

The Word of the Lord.

September 13th : Responsorial PsalmPsalm 144(145):2-3,10-13a How good is the Lord to all.

September 13th :  Responsorial Psalm

Psalm 144(145):2-3,10-13a 

How good is the Lord to all.

I will bless you day after day
  and praise your name for ever.
The Lord is great, highly to be praised,
  his greatness cannot be measured.
How good is the Lord to all.

All your creatures shall thank you, O Lord,
  and your friends shall repeat their blessing.
They shall speak of the glory of your reign
  and declare your might, O God.

How good is the Lord to all.

To make known to men your mighty deeds
  and the glorious splendour of your reign.
Yours is an everlasting kingdom;
  your rule lasts from age to age.

How good is the Lord to all.

Gospel Acclamation 1Jn2:5

Alleluia, alleluia!

Whenever anyone obeys what Christ has said,
God’s love comes to perfection in him.
Alleluia!

செப்டம்பர் 13 : பதிலுரைப் பாடல்திபா 145: 2-3. 10-11. 12-13ab (பல்லவி: 9a)பல்லவி: ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்.

செப்டம்பர் 13 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 10-11. 12-13ab (பல்லவி: 9a)

பல்லவி: ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்.
2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி

10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 6: 23ab
அல்லேலூயா, அல்லேலூயா! 

துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.