இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 23 நவம்பர், 2023

நவம்பர் 24 : முதல் வாசகம்புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59

நவம்பர் 24 :  முதல் வாசகம்

புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59
அந்நாள்களில்

யூதாவும் அவருடைய சகோதரர்களும், “நம் பகைவர்கள் முறியடிக்கப் பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்” என்றார்கள். எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச் சென்றார்கள்.

நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின.

எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்; பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணி செய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.

மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள் வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 24th : Gospel You have turned God's house into a robbers' denA reading from the Holy Gospel according to St.Luke 19:45-48

November 24th :  Gospel 

You have turned God's house into a robbers' den

A reading from the Holy Gospel according to St.Luke 19:45-48 
Jesus went into the Temple and began driving out those who were selling. ‘According to scripture,’ he said ‘my house will be a house of prayer. But you have turned it into a robbers’ den.’
  He taught in the Temple every day. The chief priests and the scribes, with the support of the leading citizens, tried to do away with him, but they did not see how they could carry this out because the people as a whole hung on his words.

The Word of the Lord.

November 24th : Responsorial Psalm1 Chronicles 29:10-12 We praise your glorious name, O Lord.

November 24th :  Responsorial Psalm

1 Chronicles 29:10-12 

We praise your glorious name, O Lord.
Blessed are you, O Lord,
  the God of Israel our father,
  for ever, for ages unending.

We praise your glorious name, O Lord.

Yours, Lord, are greatness and power,
  and splendour and triumph and glory.
  All is yours, in heaven and on earth.

We praise your glorious name, O Lord.

Yours, O Lord, is the kingdom,
  you are supreme over all.
  Both honour and riches come from you.

We praise your glorious name, O Lord.

You are the ruler of all,
  from your hand come strength and power,
  from your hand come greatness and might.

We praise your glorious name, O Lord.

Gospel Acclamation cf.2Tim1:10

Alleluia, alleluia!

Our Saviour Jesus Christ abolished death
and he has proclaimed life through the Good News.
Alleluia!

November 24th : First readingJudas and his brothers purify the sanctuary and dedicate it.1 Maccabees 4:36-37,52-59

November 24th :  First reading

Judas and his brothers purify the sanctuary and dedicate it.

1 Maccabees 4:36-37,52-59 
Judas and his brothers said, ‘Now that our enemies have been defeated, let us go up to purify the sanctuary and dedicate it.’ So they marshalled the whole army, and went up to Mount Zion.
  On the twenty-fifth of the ninth month, Chislev, in the year one hundred and forty-eight, they rose at dawn and offered a lawful sacrifice on the new altar of holocausts which they had made. The altar was dedicated, to the sound of zithers, harps and cymbals, at the same time of year and on the same day on which the pagans had originally profaned it. The whole people fell prostrate in adoration, praising to the skies him who had made them so successful. For eight days they celebrated the dedication of the altar, joyfully offering holocausts, communion sacrifices and thanksgivings. They ornamented the front of the Temple with crowns and bosses of gold, repaired the gates and the storerooms and fitted them with doors. There was no end to the rejoicing among the people, and the reproach of the pagans was lifted from them. Judas, with his brothers and the whole assembly of Israel, made it a law that the days of the dedication of the altar should be celebrated yearly at the proper season, for eight days beginning on the twenty-fifth of the month Chislev, with rejoicing and gladness.

The Word of the Lord.

புதன், 22 நவம்பர், 2023

நவம்பர் 23 : நற்செய்தி வாசகம்அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44

நவம்பர் 23 :  நற்செய்தி வாசகம்

அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44
அக்காலத்தில்

இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 23 : பதிலுரைப் பாடல்திபா 50: 1-2. 5-6. 14-15 (பல்லவி: 23b)பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

நவம்பர் 23 :  பதிலுரைப் பாடல்

திபா 50: 1-2. 5-6. 14-15 (பல்லவி: 23b)

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.
1
தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.
2
எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். - பல்லவி

5
‘பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.'
6
வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! - பல்லவி

14
கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.
15
துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா!

 உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நவம்பர் 23 : முதல் வாசகம்எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 15-29

நவம்பர் 23 :  முதல் வாசகம்

எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 15-29
அந்நாள்களில்

கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள். இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள்.

மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, “நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு. ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளிமற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், “மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும், நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம். திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டுவிடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக! மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழ மாட்டோம்” என்று கூறினார்.

மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான். மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாகச் சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார். அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார். இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல், திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார்.

பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, “திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கை மீது பற்றுறுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்” என்று உரத்த குரலில் கத்தினார். அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.

அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கி வாழச் சென்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 23rd : Gospel Jesus sheds tears over the coming fate of JerusalemA reading from the Holy Gospel according to St.Luke 19:41-44

November 23rd :  Gospel 

Jesus sheds tears over the coming fate of Jerusalem

A reading from the Holy Gospel according to St.Luke 19:41-44 
As Jesus drew near Jerusalem and came in sight of the city he shed tears over it and said, ‘If you in your turn had only understood on this day the message of peace! But, alas, it is hidden from your eyes! Yes, a time is coming when your enemies will raise fortifications all round you, when they will encircle you and hem you in on every side; they will dash you and the children inside your walls to the ground; they will leave not one stone standing on another within you – and all because you did not recognise your opportunity when God offered it!’

The Word of the Lord.

November 23rd : Responsorial PsalmPsalm 49(50):1-2,5-6,14-15 I will show God’s salvation to the upright.

November 23rd :  Responsorial Psalm

Psalm 49(50):1-2,5-6,14-15 

I will show God’s salvation to the upright.
The God of gods, the Lord,
  has spoken and summoned the earth,
from the rising of the sun to its setting.
  Out of Zion’s perfect beauty he shines.

I will show God’s salvation to the upright.

‘Summon before me my people
  who made covenant with me by sacrifice.’
The heavens proclaim his justice,
  for he, God, is the judge.

I will show God’s salvation to the upright.

Pay your sacrifice of thanksgiving to God
  and render him your votive offerings.
Call on me in the day of distress.
  I will free you and you shall honour me.’

I will show God’s salvation to the upright.

Gospel Acclamation Ps118:135

Alleluia, alleluia!

Let your face shine on your servant,
and teach me your decrees.
Alleluia!

November 23rd : First reading'Heaven preserve us from forsaking the Law and its ordinances'1 Maccabees 2:15-29

November 23rd : First reading

'Heaven preserve us from forsaking the Law and its ordinances'

1 Maccabees 2:15-29 
The commissioners of King Antiochus who were enforcing the apostasy came to the town of Modein to make them sacrifice. Many Israelites gathered round them, but Mattathias and his sons drew apart. The king’s commissioners then addressed Mattathias as follows, ‘You are a respected leader, a great man in this town; you have sons and brothers to support you. Be the first to step forward and conform to the king’s decree, as all the nations have done, and the leaders of Judah and the survivors in Jerusalem; you and your sons shall be reckoned among the Friends of the King, you and your sons shall be honoured with gold and silver and many presents.’ Raising his voice, Mattathias retorted, ‘Even if every nation living in the king’s dominions obeys him, each forsaking its ancestral religion to conform to his decrees, I, my sons and my brothers will still follow the covenant of our ancestors. Heaven preserve us from forsaking the Law and its observances. As for the king’s orders, we will not follow them: we will not swerve from our own religion either to right or to left.’ As he finished speaking, a Jew came forward in the sight of all to offer sacrifice on the altar in Modein as the royal edict required. When Mattathias saw this, he was fired with zeal; stirred to the depth of his being, he gave vent to his legitimate anger, threw himself on the man and slaughtered him on the altar. At the same time he killed the king’s commissioner who was there to enforce the sacrifice, and tore down the altar. In his zeal for the Law he acted as Phinehas did against Zimri son of Salu. Then Mattathias went through the town, shouting at the top of his voice, ‘Let everyone who has a fervour for the Law and takes his stand on the covenant come out and follow me.’ Then he fled with his sons into the hills, leaving all their possessions behind in the town.
  At this, many who were concerned for virtue and justice went down to the desert and stayed there.

The Word of the Lord.