இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 26 டிசம்பர், 2023

December 27th : Gospel The other disciple saw, and he believedA reading from the Holy Gospel according to St.John 20:2-8

December 27th :  Gospel 

The other disciple saw, and he believed

A reading from the Holy Gospel according to St.John 20:2-8 
On the first day of the week Mary of Magdala came running to Simon Peter and the other disciple, the one Jesus loved. ‘They have taken the Lord out of the tomb’ she said ‘and we don’t know where they have put him.’
  So Peter set out with the other disciple to go to the tomb. They ran together, but the other disciple, running faster than Peter, reached the tomb first; he bent down and saw the linen cloths lying on the ground, but did not go in. Simon Peter who was following now came up, went right into the tomb, saw the linen cloths on the ground, and also the cloth that had been over his head; this was not with the linen cloths but rolled up in a place by itself. Then the other disciple who had reached the tomb first also went in; he saw and he believed.

The Word of the Lord.

December 27th : Responsorial PsalmPsalm 96(97):1-2,5-6,11-12 Rejoice, you just, in the Lord.

December 27th :  Responsorial Psalm

Psalm 96(97):1-2,5-6,11-12 

Rejoice, you just, in the Lord.
The Lord is king, let earth rejoice,
  let all the coastlands be glad.
Cloud and darkness are his raiment;
  his throne, justice and right.

Rejoice, you just, in the Lord.

The mountains melt like wax
  before the Lord of all the earth.
The skies proclaim his justice;
  all peoples see his glory.

Rejoice, you just, in the Lord.

Light shines forth for the just
  and joy for the upright of heart.
Rejoice, you just, in the Lord;
  give glory to his holy name.

Rejoice, you just, in the Lord.

Gospel Acclamation cf.Te Deum

Alleluia, alleluia!

We praise you, O God,
we acknowledge you to be the Lord.
The glorious company of the apostles praise you, O Lord.
Alleluia!

December 27th : First reading The Word, who is life - this is our subject1 John 1:1-4

December 27th :  First reading 

The Word, who is life - this is our subject

1 John 1:1-4 
Something which has existed since the beginning,
that we have heard,
and we have seen with our own eyes;
that we have watched
and touched with our hands:
the Word, who is life –
this is our subject.
That life was made visible:
we saw it and we are giving our testimony,
telling you of the eternal life
which was with the Father and has been made visible to us.
What we have seen and heard
we are telling you
so that you too may be in union with us,
as we are in union
with the Father
and with his Son Jesus Christ.
We are writing this to you to make our own joy complete.

The Word of the Lord.

திங்கள், 25 டிசம்பர், 2023

டிசம்பர் 26 : நற்செய்தி வாசகம்ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22

டிசம்பர் 26 :  நற்செய்தி வாசகம்

ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22
அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும், தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 26 : பதிலுரைப் பாடல்திபா 31: 2cd-3. 5,7ab. 15b-16 (பல்லவி: 5a)பல்லவி: ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

டிசம்பர் 26 :  பதிலுரைப் பாடல்

திபா 31: 2cd-3. 5,7ab. 15b-16 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
2cd
எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். - பல்லவி

5
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர்.
7ab
உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். - பல்லவி

15b
என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.
16
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 26a, 27a
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். அல்லேலூயா.

டிசம்பர் 26 : புனித ஸ்தேவான் - முதல் மறைச்சாட்சி விழாமுதல் வாசகம்இதோ, வானம் திறந்திருப்பதைக் காண்கிறேன்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-10; 7: 54-60

டிசம்பர் 26 :  புனித ஸ்தேவான் - முதல் மறைச்சாட்சி விழா

முதல் வாசகம்

இதோ, வானம் திறந்திருப்பதைக் காண்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-10; 7: 54-60
அந்நாள்களில்

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.

அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ, வானம் திறந்து இருப்பதையும், மானிடமகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார்.

ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல் எறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.

அவர்கள் ஸ்தேவான் மீது கல் எறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 26th : GospelThe Spirit of your Father will be speaking in youA reading from the Holy Gospel according to St.Matthew 10:17-22.

December 26th :  Gospel

The Spirit of your Father will be speaking in you

A reading from the Holy Gospel according to St.Matthew 10:17-22.
Jesus said to his disciples: ‘Beware of men: they will hand you over to sanhedrins and scourge you in their synagogues. You will be dragged before governors and kings for my sake, to bear witness before them and the pagans. But when they hand you over, do not worry about how to speak or what to say; what you are to say will be given to you when the time comes; because it is not you who will be speaking; the Spirit of your Father will be speaking in you.
  ‘Brother will betray brother to death, and the father his child; children will rise against their parents and have them put to death. You will be hated by all men on account of my name; but the man who stands firm to the end will be saved.’

The Word of the Lord.

December 26th : Responsorial PsalmPsalm 30(31):3-4,6,8,16-17 Into your hands, O Lord, I commend my spirit.

December 26th :  Responsorial Psalm

Psalm 30(31):3-4,6,8,16-17 

Into your hands, O Lord, I commend my spirit.
Be a rock of refuge for me,
  a mighty stronghold to save me,
for you are my rock, my stronghold.
  For your name’s sake, lead me and guide me.

Into your hands, O Lord, I commend my spirit.

Into your hands I commend my spirit.
  It is you who will redeem me, Lord.
As for me, I trust in the Lord:
  let me be glad and rejoice in your love.

Into your hands, O Lord, I commend my spirit.

My life is in your hands, deliver me
  from the hands of those who hate me.
Let your face shine on your servant.
  Save me in your love.

Into your hands, O Lord, I commend my spirit.

Gospel Acclamation Ps117:26,27

Alleluia, alleluia!

Blessed is he who comes in the name of the Lord:
the Lord God is our light.
Alleluia!

December 26th : First readingThe martyrdom of StephenA reading from the Acts of Apostles 6:8-10,7:54-59

December 26th :  First reading

The martyrdom of Stephen

A reading from the Acts of Apostles 6:8-10,7:54-59 
Stephen was filled with grace and power and began to work miracles and great signs among the people. But then certain people came forward to debate with Stephen, some from Cyrene and Alexandria who were members of the synagogue called the Synagogue of Freedmen, and others from Cilicia and Asia. They found they could not get the better of him because of his wisdom, and because it was the Spirit that prompted what he said. They were infuriated when they heard this, and ground their teeth at him.
  But Stephen, filled with the Holy Spirit, gazed into heaven and saw the glory of God, and Jesus standing at God’s right hand. ‘I can see heaven thrown open’ he said ‘and the Son of Man standing at the right hand of God.’ At this all the members of the council shouted out and stopped their ears with their hands; then they all rushed at him, sent him out of the city and stoned him. The witnesses put down their clothes at the feet of a young man called Saul. As they were stoning him, Stephen said in invocation, ‘Lord Jesus, receive my spirit.’

The Word of the Lord.

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

டிசம்பர் 25 : நற்செய்தி வாசகம்இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14

டிசம்பர் 25 :  நற்செய்தி வாசகம்

இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14
அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.

உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.