இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

February 19th : Responsorial PsalmPsalm 18(19):8-10,15

February 19th :  Responsorial Psalm

Psalm 18(19):8-10,15 
Your words are spirit, Lord, and they are life.

The law of the Lord is perfect,
  it revives the soul.
The rule of the Lord is to be trusted,
  it gives wisdom to the simple.

Your words are spirit, Lord, and they are life.

The precepts of the Lord are right,
  they gladden the heart.
The command of the Lord is clear,
  it gives light to the eyes.

Your words are spirit, Lord, and they are life.

The fear of the Lord is holy,
  abiding for ever.
The decrees of the Lord are truth
  and all of them just.

Your words are spirit, Lord, and they are life.

May the spoken words of my mouth,
  the thoughts of my heart,
win favour in your sight, O Lord,
  my rescuer, my rock!

Your words are spirit, Lord, and they are life.

Gospel Acclamation Ezk18:31

Praise to you, O Christ, king of eternal glory!
Shake off all your sins – it is the Lord who speaks –
and make yourselves a new heart and a new spirit.
Praise to you, O Christ, king of eternal glory!

February 19th : First readingOnly pass judgement on your neighbour according to justiceA reading from the book of Leviticus 19: 1-2,11-18

February 19th :  First reading

Only pass judgement on your neighbour according to justice

A reading from the book of Leviticus 19: 1-2,11-18 
The Lord spoke to Moses; he said: ‘Speak to the whole community of the sons of Israel and say to them:
  ‘“Be holy, for I, the Lord your God, am holy.
  ‘“You must not steal nor deal deceitfully or fraudulently with your neighbour. You must not swear falsely by my name, profaning the name of your God. I am the Lord. You must not exploit or rob your neighbour. You must not keep back the labourer’s wage until next morning. You must not curse the dumb, nor put an obstacle in the blind man’s way, but you must fear your God. I am the Lord.
  ‘“You must not be guilty of unjust verdicts. You must neither be partial to the little man nor overawed by the great; you must pass judgement on your neighbour according to justice. You must not slander your own people, and you must not jeopardise your neighbour’s life. I am the Lord. You must not bear hatred for your brother in your heart. You must openly tell him, your neighbour, of his offence; this way you will not take a sin upon yourself. You must not exact vengeance, nor must you bear a grudge against the children of your people. You must love your neighbour as yourself. I am the Lord.”’

The Word of the Lord.

சனி, 17 பிப்ரவரி, 2024

பிப்ரவரி 18 : நற்செய்தி வாசகம்இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15

பிப்ரவரி 18 :  நற்செய்தி வாசகம்

இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15
அக்காலத்தில்

தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 18 : இரண்டாம் வாசகம்இப்போது உங்களை மீட்கும் திருழுழுக்கிற்கு இந்த நீர் முன்னடையாளமாயிருக்கிறது.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-22

பிப்ரவரி 18 : இரண்டாம் வாசகம்

இப்போது உங்களை மீட்கும் திருழுழுக்கிற்கு இந்த நீர் முன்னடையாளமாயிருக்கிறது.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-22
அன்பிற்குரியவர்களே,

கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். நோவா பேழையைச் செய்துகொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், அதாவது எட்டுப் பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர்.

அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பு அளிக்கிறது. அவர் வானதூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

பிப்ரவரி 18 : பதிலுரைப் பாடல்திபா 25: 4-5ab. 6-7bc. 8-9 (பல்லவி: 10)பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.

பிப்ரவரி 18 :  பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5ab. 6-7bc. 8-9 (பல்லவி: 10)

பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.
4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். - பல்லவி

6
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7bc
உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

பிப்ரவரி 18 : முதல் வாசகம்வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை.தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15

பிப்ரவரி 18 :  முதல் வாசகம்

வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15
கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: “இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.”

அப்பொழுது கடவுள், “எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். மண்ணுலகின்மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 18th : Gospel Jesus was tempted by Satan, and the angels looked after himA reading from the Holy Gospel according to St.Mark 1:12-15

February 18th :  Gospel 

Jesus was tempted by Satan, and the angels looked after him

A reading from the Holy Gospel according to St.Mark 1:12-15 
The Spirit drove Jesus out into the wilderness and he remained there for forty days, and was tempted by Satan. He was with the wild beasts, and the angels looked after him.
  After John had been arrested, Jesus went into Galilee. There he proclaimed the Good News from God. ‘The time has come’ he said ‘and the kingdom of God is close at hand. Repent, and believe the Good News.’

The Word of the Lord.

February 18th : Second reading The water on which the Ark floated is a type of the baptism which saves you now1 Peter 3:18-22

February 18th :  Second reading  

The water on which the Ark floated is a type of the baptism which saves you now

1 Peter 3:18-22
Christ himself, innocent though he was, died once for sins, died for the guilty, to lead us to God. In the body he was put to death, in the spirit he was raised to life, and, in the spirit, he went to preach to the spirits in prison. Now it was long ago, when Noah was still building that ark which saved only a small group of eight people ‘by water’, and when God was still waiting patiently, that these spirits refused to believe. That water is a type of the baptism which saves you now, and which is not the washing off of physical dirt but a pledge made to God from a good conscience, through the resurrection of Jesus Christ, who has entered heaven and is at God’s right hand, now that he has made the angels and Dominations and Powers his subjects.

The Word of the Lord.

Gospel Acclamation Mt4:4

Praise to you, O Christ, king of eternal glory!
Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Praise to you, O Christ, king of eternal glory!

February 18th : Responsorial PsalmPsalm 24(25):4-6,7b-9

February 18th :  Responsorial Psalm

Psalm 24(25):4-6,7b-9 

Your ways, Lord, are faithfulness and love for those who keep your covenant.
Lord, make me know your ways.
  Lord, teach me your paths.
Make me walk in your truth, and teach me:
  for you are God my saviour.

Your ways, Lord, are faithfulness and love for those who keep your covenant.

Remember your mercy, Lord,
  and the love you have shown from of old.
In your love remember me,
  because of your goodness, O Lord.

Your ways, Lord, are faithfulness and love for those who keep your covenant.

The Lord is good and upright.
  He shows the path to those who stray,
He guides the humble in the right path,
  He teaches his way to the poor.

Your ways, Lord, are faithfulness and love for those who keep your covenant.

February 18th : First reading 'There shall be no flood to destroy the earth again'A reading from the book of Genesis 9: 8-15

February 18th :  First reading  

'There shall be no flood to destroy the earth again'

A reading from the book of Genesis 9: 8-15
God spoke to Noah and his sons, ‘See, I establish my Covenant with you, and with your descendants after you; also with every living creature to be found with you, birds, cattle and every wild beast with you: everything that came out of the ark, everything that lives on the earth. I establish my Covenant with you: no thing of flesh shall be swept away again by the waters of the flood. There shall be no flood to destroy the earth again.’
  God said, ‘Here is the sign of the Covenant I make between myself and you and every living creature with you for all generations: I set my bow in the clouds and it shall be a sign of the Covenant between me and the earth. When I gather the clouds over the earth and the bow appears in the clouds, I will recall the Covenant between myself and you and every living creature of every kind. And so the waters shall never again become a flood to destroy all things of flesh.’

The Word of the Lord.