இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 29 பிப்ரவரி, 2024

மார்ச் 1 : முதல் வாசகம்இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13a, 17b-28

மார்ச் 1 :  முதல் வாசகம்

இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13a, 17b-28
இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும்விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார். அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.

அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர். இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி; “உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறார்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப்போகிறேன்” என்றார். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.

தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, “இதோ வருகிறான் கனவின் மன்னன்! நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்றுவிட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்” என்றனர்.

ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, “நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்” என்றார். ரூபன் அவர்களை நோக்கி, “அவன் இரத்தத்தைச் சிந்தாதீர்கள். அவனைப் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளிவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்” என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.

யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு, அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி.

பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும், வெள்ளைப் போளத்தையும் அவர்கள் ஒட்டகங்களின்மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, “நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்? வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கை வைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்” என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.

ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 1st : GospelThis is the landlord's heir: come, let us kill himA reading from the Holy Gospel according to St.Matthew 21:33-43,45-46

March 1st : Gospel

This is the landlord's heir: come, let us kill him

A reading from the Holy Gospel according to St.Matthew 21:33-43,45-46 
Jesus said to the chief priests and the elders of the people, ‘Listen to another parable. There was a man, a landowner, who planted a vineyard; he fenced it round, dug a winepress in it and built a tower; then he leased it to tenants and went abroad. When vintage time drew near he sent his servants to the tenants to collect his produce. But the tenants seized his servants, thrashed one, killed another and stoned a third. Next he sent some more servants, this time a larger number, and they dealt with them in the same way. Finally he sent his son to them. “They will respect my son” he said. But when the tenants saw the son, they said to each other, “This is the heir. Come on, let us kill him and take over his inheritance.” So they seized him and threw him out of the vineyard and killed him. Now when the owner of the vineyard comes, what will he do to those tenants?’ They answered, ‘He will bring those wretches to a wretched end and lease the vineyard to other tenants who will deliver the produce to him when the season arrives.’ Jesus said to them, ‘Have you never read in the scriptures:
It was the stone rejected by the builders
that became the keystone.
This was the Lord’s doing
and it is wonderful to see?
‘I tell you, then, that the kingdom of God will be taken from you and given to a people who will produce its fruit.’
  When they heard his parables, the chief priests and the scribes realised he was speaking about them, but though they would have liked to arrest him they were afraid of the crowds, who looked on him as a prophet.

The Word of the Lord.

March 1st : Responsorial PsalmPsalm 104(105):16-21

March 1st :   Responsorial Psalm

Psalm 104(105):16-21 
Remember the wonders the Lord has done.

The Lord called down a famine on the land;
  he broke the staff that supported them.
He had sent a man before them,
  Joseph, sold as a slave.

Remember the wonders the Lord has done.

His feet were put in chains,
  his neck was bound with iron,
until what he said came to pass
  and the word of the Lord proved him true.

Remember the wonders the Lord has done.

Then the king sent and released him
  the ruler of the people set him free,
making him master of his house
  and ruler of all he possessed.

Remember the wonders the Lord has done.

Gospel Acclamation Jn3:16

Praise and honour to you, Lord Jesus!
God loved the world so much that he gave his only Son:
everyone who believes in him has eternal life.
Praise and honour to you, Lord Jesus!

March 1st : First readingLet us kill him: then we shall see what becomes of his dreamsA reading from the book of Genesis 37:3-4,12-13,17-28

March 1st :  First reading

Let us kill him: then we shall see what becomes of his dreams

A reading from the book of Genesis 37:3-4,12-13,17-28 
Israel loved Joseph more than all his other sons, for he was the son of his old age, and he had a coat with long sleeves made for him. But his brothers, seeing how his father loved him more than all his other sons, came to hate him so much that they could not say a civil word to him.
  His brothers went to pasture their father’s flock at Shechem. Then Israel said to Joseph, ‘Are not your brothers with the flock at Shechem? Come, I am going to send you to them.’ So Joseph went after his brothers and found them at Dothan.
  They saw him in the distance, and before he reached them they made a plot among themselves to put him to death. ‘Here comes the man of dreams’ they said to one another. ‘Come on, let us kill him and throw him into some well; we can say that a wild beast devoured him. Then we shall see what becomes of his dreams.’
  But Reuben heard, and he saved him from their violence. ‘We must not take his life’ he said. ‘Shed no blood,’ said Reuben to them ‘throw him into this well in the wilderness, but do not lay violent hands on him’ – intending to save him from them and to restore him to his father. So, when Joseph reached his brothers, they pulled off his coat, the coat with long sleeves that he was wearing, and catching hold of him they threw him into the well, an empty well with no water in it. They then sat down to eat.
  Looking up they saw a group of Ishmaelites who were coming from Gilead, their camels laden with gum, tragacanth, balsam and resin, which they were taking down into Egypt. Then Judah said to his brothers, ‘What do we gain by killing our brother and covering up his blood? Come, let us sell him to the Ishmaelites, but let us not do any harm to him. After all, he is our brother, and our own flesh.’ His brothers agreed.
  Now some Midianite merchants were passing, and they drew Joseph up out of the well. They sold Joseph to the Ishmaelites for twenty silver pieces, and these men took Joseph to Egypt.

The Word of the Lord.

புதன், 28 பிப்ரவரி, 2024

பிப்ரவரி 29 : நற்செய்தி வாசகம்இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

பிப்ரவரி 29 :  நற்செய்தி வாசகம்

இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31
அக்காலத்தில்

இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: “செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.

அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்.

அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார். அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார். அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார். ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 29 : பதிலுரைப் பாடல்திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: 40:4a)பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

பிப்ரவரி 29 :  பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: 40:4a)

பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
1
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3
அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனி தந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

4
ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

லூக் 8: 15

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.

பிப்ரவரி 29 : முதல் வாசகம்மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-10

பிப்ரவரி 29 :  முதல் வாசகம்

மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-10
ஆண்டவர் கூறுவது இதுவே:

மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச் செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர்.

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்.

இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது; அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்? ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்; உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 29th : Gospel Dives and LazarusA reading from the Holy Gospel according to St.Luke 16:19-31

February 29th :  Gospel  

Dives and Lazarus

A reading from the Holy Gospel according to St.Luke 16:19-31
Jesus said to the Pharisees: ‘There was a rich man who used to dress in purple and fine linen and feast magnificently every day. And at his gate there lay a poor man called Lazarus, covered with sores, who longed to fill himself with the scraps that fell from the rich man’s table. Dogs even came and licked his sores. Now the poor man died and was carried away by the angels to the bosom of Abraham. The rich man also died and was buried.
  ‘In his torment in Hades he looked up and saw Abraham a long way off with Lazarus in his bosom. So he cried out, “Father Abraham, pity me and send Lazarus to dip the tip of his finger in water and cool my tongue, for I am in agony in these flames.” “My son,” Abraham replied “remember that during your life good things came your way, just as bad things came the way of Lazarus. Now he is being comforted here while you are in agony. But that is not all: between us and you a great gulf has been fixed, to stop anyone, if he wanted to, crossing from our side to yours, and to stop any crossing from your side to ours.”
  ‘The rich man replied, “Father, I beg you then to send Lazarus to my father’s house, since I have five brothers, to give them warning so that they do not come to this place of torment too.” “They have Moses and the prophets,” said Abraham “let them listen to them.” “Ah no, father Abraham,” said the rich man “but if someone comes to them from the dead, they will repent.” Then Abraham said to him, “If they will not listen either to Moses or to the prophets, they will not be convinced even if someone should rise from the dead.”’

The Word of the Lord.

February 29th : Responsorial Psalm Psalm 1:1-4,6 Happy the man who has placed his trust in the Lord.

February 29th :  Responsorial Psalm 

Psalm 1:1-4,6 

Happy the man who has placed his trust in the Lord.
Happy indeed is the man
  who follows not the counsel of the wicked;
nor lingers in the way of sinners
  nor sits in the company of scorners,
but whose delight is the law of the Lord
  and who ponders his law day and night.

Happy the man who has placed his trust in the Lord.

He is like a tree that is planted
  beside the flowing waters,
that yields its fruit in due season
  and whose leaves shall never fade;
  and all that he does shall prosper.

Happy the man who has placed his trust in the Lord.

Not so are the wicked, not so!
For they like winnowed chaff
  shall be driven away by the wind:
for the Lord guards the way of the just
  but the way of the wicked leads to doom.

Happy the man who has placed his trust in the Lord.

Gospel Acclamation Lk15:18

Praise to you, O Christ, king of eternal glory!
I will leave this place and go to my father and say:
‘Father, I have sinned against heaven and against you.’
Praise to you, O Christ, king of eternal glory!

February 29th : First reading A curse on the man who puts his trust in man and turns from the LordA reading from the book of Jeremiah 17:5-10

February 29th :   First reading 

A curse on the man who puts his trust in man and turns from the Lord

A reading from the book of Jeremiah 17:5-10
The Lord says this:
‘A curse on the man who puts his trust in man,
who relies on things of flesh,
whose heart turns from the Lord.
He is like dry scrub in the wastelands:
if good comes, he has no eyes for it,
he settles in the parched places of the wilderness,
a salt land, uninhabited.
‘A blessing on the man who puts his trust in the Lord,
with the Lord for his hope.
He is like a tree by the waterside
that thrusts its roots to the stream:
when the heat comes it feels no alarm,
its foliage stays green;
it has no worries in a year of drought,
and never ceases to bear fruit.
‘The heart is more devious than any other thing,
perverse too: who can pierce its secrets?
I, the Lord, search to the heart,
I probe the loins,
to give each man what his conduct
and his actions deserve.’

The Word of the Lord.