இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 12 மார்ச், 2024

மார்ச் 13 : முதல் வாசகம்மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15

மார்ச் 13 :  முதல் வாசகம்

மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15
ஆண்டவர் கூறியது:

தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன். சிறைப்பட்டோரிடம் ‘புறப்படுங்கள்’ என்றும், இருளில் இருப்போரிடம் ‘வெளிப்படுங்கள்’ என்றும் சொல்வீர்கள்.

பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்; வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர். அவர்கள் பசியடையார்; தாகமுறார்; வெப்பக் காற்றோ, வெயிலோ, அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில் அவர்கள்மேல் கருணைகாட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்; அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார். என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்; என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.

இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்; சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள். வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; மண்ணுலகே, களிகூரு; மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.

சீயோனோ, ‘ஆண்டவர் என்னைக் கை நெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்துவிட்டார்’ என்கிறாள். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 13th : Gospel The dead will hear the voice of the Son of God, and all who hear it will liveA reading from the Holy Gospel according to St.John 5: 17-30

March 13th :  Gospel 

The dead will hear the voice of the Son of God, and all who hear it will live

A reading from the Holy Gospel according to St.John 5: 17-30 
Jesus said to the Jews, ‘My Father goes on working, and so do I.’ But that only made them even more intent on killing him, because, not content with breaking the sabbath, he spoke of God as his own Father, and so made himself God’s equal.
  To this accusation Jesus replied:
‘I tell you most solemnly,
the Son can do nothing by himself;
he can do only what he sees the Father doing:
and whatever the Father does the Son does too.
For the Father loves the Son
and shows him everything he does himself,
and he will show him even greater things than these,
works that will astonish you.
Thus, as the Father raises the dead and gives them life,
so the Son gives life to anyone he chooses;
for the Father judges no one;
he has entrusted all judgement to the Son,
so that all may honour the Son
as they honour the Father.
Whoever refuses honour to the Son
refuses honour to the Father who sent him.
I tell you most solemnly,
whoever listens to my words,
and believes in the one who sent me,
has eternal life;
without being brought to judgement
he has passed from death to life.
I tell you most solemnly,
the hour will come – in fact it is here already –
when the dead will hear the voice of the Son of God,
and all who hear it will live.
For the Father, who is the source of life,
has made the Son the source of life;
and, because he is the Son of Man,
has appointed him supreme judge.
Do not be surprised at this,
for the hour is coming when the dead will leave their graves
at the sound of his voice:
those who did good will rise again to life;
and those who did evil, to condemnation.
I can do nothing by myself;
I can only judge as I am told to judge,
and my judging is just,
because my aim is to do not my own will,
but the will of him who sent me.’

The Word of the Lord.

March 13th : Responsorial PsalmPsalm 144(145):8-9,13b-14,17-18 The Lord is kind and full of compassion.

March 13th :  Responsorial Psalm

Psalm 144(145):8-9,13b-14,17-18 

The Lord is kind and full of compassion.
The Lord is kind and full of compassion,
  slow to anger, abounding in love.
How good is the Lord to all,
  compassionate to all his creatures.

The Lord is kind and full of compassion.

The Lord is faithful in all his words
  and loving in all his deeds.
The Lord supports all who fall
  and raises all who are bowed down.

The Lord is kind and full of compassion.

The Lord is just in all his ways
  and loving in all his deeds.
He is close to all who call him,
  who call on him from their hearts.

The Lord is kind and full of compassion.

Gospel Acclamation Jn3:16

Glory and praise to you, O Christ!
God loved the world so much that he gave his only Son:
everyone who believes in him has eternal life.
Glory and praise to you, O Christ!

March 13th : First reading On the day of salvation I will help youA reading fom the book of Isaiah 49: 8-15

March 13th :  First reading 

On the day of salvation I will help you

A reading fom the book of Isaiah 49: 8-15 
Thus says the Lord:
At the favourable time I will answer you,
on the day of salvation I will help you.
(I have formed you and have appointed you
as covenant of the people.)
I will restore the land
and assign you the estates that lie waste.
I will say to the prisoners, ‘Come out’,
to those who are in darkness, ‘Show yourselves.’
On every roadway they will graze,
and each bare height shall be their pasture.
They will never hunger or thirst,
scorching wind and sun shall never plague them;
for he who pities them will lead them
and guide them to springs of water.
I will make a highway of all the mountains,
and the high roads shall be banked up.
Some are on their way from afar,
others from the north and the west,
others from the land of Sinim.
Shout for joy, you heavens; exult, you earth!
You mountains, break into happy cries!
For the Lord consoles his people
and takes pity on those who are afflicted.
For Zion was saying, ‘The Lord has abandoned me,
the Lord has forgotten me.’
Does a woman forget her baby at the breast,
or fail to cherish the son of her womb?
Yet even if these forget,
I will never forget you.

The Word of the Lord.

திங்கள், 11 மார்ச், 2024

மார்ச் 12 : நற்செய்தி வாசகம்உடனே அம்மனிதர் நலமடைந்தார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a, 5-16

மார்ச் 12 :  நற்செய்தி வாசகம்

உடனே அம்மனிதர் நலமடைந்தார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a, 5-16
யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர்.

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்.

அன்று ஓய்வுநாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “என்னை நலமாக்கியவரே ‘உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று என்னிடம் கூறினார்” என்றார். “ ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.

பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 12 : பதிலுரைப் பாடல்திபா 46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7)பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.

மார்ச் 12 :  பதிலுரைப் பாடல்

திபா 46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7)

பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.
1
கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.
2
ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. - பல்லவி

4
ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
5
அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. - பல்லவி

7
படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.
8
வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 51: 10a, 12a

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

மார்ச் 12 : முதல் வாசகம்கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12

மார்ச் 12 :  முதல் வாசகம்

கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12
அந்நாள்களில்

வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது.

அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது. அவர் என்னிடம், ‘மானிடா! இதைப் பார்த்தாயா?’ என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: “இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 12th : Gospel The healing at the pool of BethesdaA reading from the Holy Gospel according to St.John 5:1-3,5-16

March 12th :  Gospel  

The healing at the pool of Bethesda

A reading from the Holy Gospel according to St.John 5:1-3,5-16
There was a Jewish festival, and Jesus went up to Jerusalem. Now at the Sheep Pool in Jerusalem there is a building, called Bethzatha in Hebrew, consisting of five porticos; and under these were crowds of sick people – blind, lame, paralysed – waiting for the water to move. One man there had an illness which had lasted thirty-eight years, and when Jesus saw him lying there and knew he had been in this condition for a long time, he said, ‘Do you want to be well again?’ ‘Sir,’ replied the sick man ‘I have no one to put me into the pool when the water is disturbed; and while I am still on the way, someone else gets there before me.’ Jesus said, ‘Get up, pick up your sleeping-mat and walk.’ The man was cured at once, and he picked up his mat and walked away.
  Now that day happened to be the sabbath, so the Jews said to the man who had been cured, ‘It is the sabbath; you are not allowed to carry your sleeping-mat.’ He replied, ‘But the man who cured me told me, “Pick up your mat and walk.”’ They asked, ‘Who is the man who said to you, “Pick up your mat and walk”?’ The man had no idea who it was, since Jesus had disappeared into the crowd that filled the place. After a while Jesus met him in the Temple and said, ‘Now you are well again, be sure not to sin any more, or something worse may happen to you.’ The man went back and told the Jews that it was Jesus who had cured him. It was because he did things like this on the sabbath that the Jews began to persecute Jesus.

The Word of the Lord.

March 12th : Responsorial PsalmPsalm 45(46):2-3,5-6,8-9ab The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

March 12th :  Responsorial Psalm

Psalm 45(46):2-3,5-6,8-9ab 

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.
God is for us a refuge and strength,
  a helper close at hand, in time of distress,
so we shall not fear though the earth should rock,
  though the mountains fall into the depths of the sea.

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

The waters of a river give joy to God’s city,
  the holy place where the Most High dwells.
God is within, it cannot be shaken;
  God will help it at the dawning of the day.

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

The Lord of hosts is with us:
  the God of Jacob is our stronghold.
Come, consider the works of the Lord,
  the redoubtable deeds he has done on the earth.

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

Gospel Acclamation Ps50:12,14

Praise and honour to you, Lord Jesus!
A pure heart create for me, O God,
and give me again the joy of your help.
Praise and honour to you, Lord Jesus!

March 12th : First reading Wherever the water flows, it will bring life and healthA reading from the book of Ezekiel 47: 1-9,12

March 12th :  First reading 

Wherever the water flows, it will bring life and health

A reading from the book of Ezekiel 47: 1-9,12
The angel brought me to the entrance of the Temple, where a stream came out from under the Temple threshold and flowed eastwards, since the Temple faced east. The water flowed from under the right side of the Temple, south of the altar. He took me out by the north gate and led me right round outside as far as the outer east gate where the water flowed out on the right-hand side. The man went to the east holding his measuring line and measured off a thousand cubits; he then made me wade across the stream; the water reached my ankles. He measured off another thousand and made me wade across the stream again; the water reached my knees. He measured off another thousand and made me wade across again; the water reached my waist. He measured off another thousand; it was now a river which I could not cross; the stream had swollen and was now deep water, a river impossible to cross. He then said, ‘Do you see, son of man?’ He took me further, then brought me back to the bank of the river. When I got back, there were many trees on each bank of the river. He said, ‘This water flows east down to the Arabah and to the sea; and flowing into the sea it makes its waters wholesome. Wherever the river flows, all living creatures teeming in it will live. Fish will be very plentiful, for wherever the water goes it brings health, and life teems wherever the river flows. Along the river, on either bank, will grow every kind of fruit tree with leaves that never wither and fruit that never fails; they will bear new fruit every month, because this water comes from the sanctuary. And their fruit will be good to eat and the leaves medicinal.’

The Word of the Lord.