இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 2 மே, 2024

மே 3 : புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழாமுதல் வாசகம்யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.

மே 3 :  புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழா

முதல் வாசகம்

யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

சகோதரர் சகோதரிகளே,

உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 3rd : Gospel To have seen me is to have seen the fatherA Reading from the Holy Gospel according to St.John 14: 6-14

May 3rd :  Gospel 

To have seen me is to have seen the father

A Reading from the Holy Gospel according to St.John 14: 6-14
Jesus said to Thomas:
‘I am the Way, the Truth and the Life.
No one can come to the Father except through me.
If you know me, you know my Father too.
From this moment you know him and have seen him.’
Philip said, ‘Lord, let us see the Father and then we shall be satisfied.’
  ‘Have I been with you all this time, Philip,’ said Jesus to him ‘and you still do not know me?
‘To have seen me is to have seen the Father,
so how can you say, “Let us see the Father”?
Do you not believe
that I am in the Father and the Father is in me?
The words I say to you I do not speak as from myself:
it is the Father, living in me, who is doing this work.
You must believe me when I say
that I am in the Father and the Father is in me;
believe it on the evidence of this work, if for no other reason.
I tell you most solemnly,
whoever believes in me
will perform the same works as I do myself,
he will perform even greater works,
because I am going to the Father.
Whatever you ask for in my name I will do,
so that the Father may be glorified in the Son.
If you ask for anything in my name,
I will do it.’

The Word of the Lord.

May 3rd : Responsorial PsalmPsalm 18(19):2-5 Their word goes forth through all the earth.orAlleluia!

May 3rd :  Responsorial Psalm

Psalm 18(19):2-5 

Their word goes forth through all the earth.
or
Alleluia!
The heavens proclaim the glory of God,
  and the firmament shows forth the work of his hands.
Day unto day takes up the story
  and night unto night makes known the message.

Their word goes forth through all the earth.
or
Alleluia!

No speech, no word, no voice is heard
  yet their span extends through all the earth,
  their words to the utmost bounds of the world.

Their word goes forth through all the earth.
or
Alleluia!

Gospel Acclamation Jn14:6,9

Alleluia, alleluia!

I am the Way, the Truth, and the Life, says the Lord.
Philip, to have seen me is to have seen the Father.
Alleluia!

May 3rd : First ReadingThe Lord appeared to James, and then to all the apostlesA Reading from the First letter of St.Paul to the Corinthians 15:1-8

May 3rd :   First Reading

The Lord appeared to James, and then to all the apostles

A Reading from the First letter of St.Paul to the Corinthians 15:1-8 
Brothers, I want to remind you of the gospel I preached to you, the gospel that you received and in which you are firmly established; because the gospel will save you only if you keep believing exactly what I preached to you – believing anything else will not lead to anything.
  Well then, in the first place, I taught you what I had been taught myself, namely that Christ died for our sins, in accordance with the scriptures; that he was buried; and that he was raised to life on the third day, in accordance with the scriptures; that he appeared first to Cephas and secondly to the Twelve. Next he appeared to more than five hundred of the brothers at the same time, most of whom are still alive, though some have died; then he appeared to James, and then to all the apostles; and last of all he appeared to me too; it was as though I was born when no one expected it.

The Word of the Lord.

புதன், 1 மே, 2024

மே 2 : நற்செய்தி வாசகம்என் அன்பில் நிலைத்திருங்கள். உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறும்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15 : 9-11

மே 2  :  நற்செய்தி வாசகம்

என் அன்பில் நிலைத்திருங்கள். உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15 : 9-11
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 2 : பதிலுரைப் பாடல்திபா 96: 1-2a. 2b-3. 10 (பல்லவி: 3)பல்லவி: ஆண்டவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

மே 2  :  பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 10 (பல்லவி: 3)

பல்லவி: ஆண்டவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
2a
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி

2b
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி

10
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ‘ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! 

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 2 : முதல் வாசகம்என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 7-21

மே 2  :  முதல் வாசகம்

என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 7-21
அந்நாள்களில்

நெடுநேர விவாதத்திற்குப் பின்பு, பேதுரு எழுந்து, திருத்தூதர்களையும் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது:

“சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக் கேட்டு அதில் நம்பிக்கை கொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்தது போல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக் கொண்டார். நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை. ஆகவே நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்.”

இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர். கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம் அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப் பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது: “சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச் சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள். இறைவாக்கினரின் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:

‘இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் எழுப்புவேன்; அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்து அதைச் சீர்படுத்துவேன். அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும் என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் வேற்று இனத்தார் அனைவரும் ஆண்டவரைத் தேடுவர், என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.’

தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார். எனவே என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. ஆனால் சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுத வேண்டும். மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 2nd : Gospel Remain in my loveA Reading from the Holy Gospel according to St.John 15: 9-11

May 2nd :  Gospel 

Remain in my love

A Reading from the Holy Gospel according to St.John 15: 9-11
Jesus said to his disciples:
‘As the Father has loved me,
so I have loved you.
Remain in my love.
If you keep my commandments
you will remain in my love,
just as I have kept my Father’s commandments
and remain in his love.
I have told you this
so that my own joy may be in you
and your joy be complete.’

The Word of the Lord.

May 2nd : Responsorial PsalmPsalm 95(96):1-3,10 Proclaim the wonders of the Lord among all the peoples.orAlleluia!

May 2nd  :  Responsorial Psalm

Psalm 95(96):1-3,10 

Proclaim the wonders of the Lord among all the peoples.
or
Alleluia!
O sing a new song to the Lord,
  sing to the Lord all the earth.
  O sing to the Lord, bless his name.

Proclaim the wonders of the Lord among all the peoples.
or
Alleluia!

Proclaim his help day by day,
  tell among the nations his glory
  and his wonders among all the peoples.

Proclaim the wonders of the Lord among all the peoples.
or
Alleluia!

Proclaim to the nations: ‘God is king.’
  The world he made firm in its place;
  he will judge the peoples in fairness.

Proclaim the wonders of the Lord among all the peoples.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Christ has risen, he who created all things,
and has granted his mercy to men.
Alleluia!

May 2nd : First Reading I rule that we do not make things more difficult for the pagans who turn to God.A Reading from the Acts of Apostles 15:7-21

May 2nd :  First Reading 

I rule that we do not make things more difficult for the pagans who turn to God.

A Reading from the Acts of Apostles 15:7-21 
After the discussion had gone on a long time, Peter stood up and addressed the apostles and the elders.
  ‘My brothers,’ he said ‘you know perfectly well that in the early days God made his choice among you: the pagans were to learn the Good News from me and so become believers. In fact God, who can read everyone’s heart, showed his approval of them by giving the Holy Spirit to them just as he had to us. God made no distinction between them and us, since he purified their hearts by faith. It would only provoke God’s anger now, surely, if you imposed on the disciples the very burden that neither we nor our ancestors were strong enough to support? Remember, we believe that we are saved in the same way as they are: through the grace of the Lord Jesus.’
  This silenced the entire assembly, and they listened to Barnabas and Paul describing the signs and wonders God had worked through them among the pagans.
  When they had finished it was James who spoke. ‘My brothers,’ he said ‘listen to me. Simeon has described how God first arranged to enlist a people for his name out of the pagans. This is entirely in harmony with the words of the prophets, since the scriptures say:
After that I shall return
and rebuild the fallen House of David;
I shall rebuild it from its ruins
and restore it.
Then the rest of mankind,
all the pagans who are consecrated to my name,
will look for the Lord,
says the Lord who made this known so long ago.
‘I rule, then, that instead of making things more difficult for pagans who turn to God, we send them a letter telling them merely to abstain from anything polluted by idols, from fornication, from the meat of strangled animals and from blood. For Moses has always had his preachers in every town, and is read aloud in the synagogues every sabbath.’

The Word of the Lord.