இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 14 ஜூன், 2024

June 15th : Responsorial PsalmPsalm 15(16):1-2,5,7-10 You are my inheritance, O Lord.

June 15th :  Responsorial Psalm

Psalm 15(16):1-2,5,7-10 

You are my inheritance, O Lord.
Preserve me, God, I take refuge in you.
  I say to the Lord: ‘You are my God.’
O Lord, it is you who are my portion and cup;
  it is you yourself who are my prize.

You are my inheritance, O Lord.

I will bless the Lord who gives me counsel,
  who even at night directs my heart.
I keep the Lord ever in my sight:
  since he is at my right hand, I shall stand firm.

You are my inheritance, O Lord.

And so my heart rejoices, my soul is glad;
  even my body shall rest in safety.
For you will not leave my soul among the dead,
  nor let your beloved know decay.

You are my inheritance, O Lord.

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!
Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!

June 15th : Gospel Do not swear: say 'Yes' if you mean Yes, 'No' if you mean No.A Reading from the Holy Gospel according to St.Matthew 5:33-37

June 15th : Gospel 

Do not swear: say 'Yes' if you mean Yes, 'No' if you mean No.

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:33-37 
Jesus said to his disciples: ‘You have learnt how it was said to our ancestors: You must not break your oath, but must fulfil your oaths to the Lord. But I say this to you: do not swear at all, either by heaven, since that is God’s throne; or by the earth, since that is his footstool; or by Jerusalem, since that is the city of the great king. Do not swear by your own head either, since you cannot turn a single hair white or black. All you need say is “Yes” if you mean yes, “No” if you mean no; anything more than this comes from the evil one.’

The Gospel of the Lord.

June 15th : First ReadingElisha leaves the plough to follow Elijah.A Reading from the First Book of Kings 19: 19-21.

June 15th :  First Reading

Elisha leaves the plough to follow Elijah.

A Reading from the First Book of Kings 19: 19-21.
Leaving Mount Horeb, Elijah came on Elisha son of Shaphat as he was ploughing behind twelve yoke of oxen, he himself being with the twelfth. Elijah passed near to him and threw his cloak over him. Elisha left his oxen and ran after Elijah. ‘Let me kiss my father and mother, then I will follow you’ he said. Elijah answered, ‘Go, go back; for have I done anything to you?’ Elisha turned away, took the pair of oxen and slaughtered them. He used the plough for cooking the oxen, then gave to his men, who ate. He then rose, and followed Elijah and became his servant.

The Word of the Lord.

வியாழன், 13 ஜூன், 2024

ஜூன் 14 : நற்செய்தி வாசகம்ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

ஜூன் 14 :  நற்செய்தி வாசகம்

ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ ‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.

உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 14 : பதிலுரைப் பாடல்திபா 27: 7-8a. 8b-9abc. 13-14 (பல்லவி: 8b)பல்லவி: ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.

ஜூன் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 27: 7-8a. 8b-9abc. 13-14 (பல்லவி: 8b)

பல்லவி: ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
7
ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
8
‘புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம். - பல்லவி

8a
ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
9abc
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 2: 15-16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

ஜூன் 14 : முதல் வாசகம்மலைமேல் ஆண்டவர் திருமுன் வந்து நில்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9a, 11-16

ஜூன் 14 :  முதல் வாசகம்

மலைமேல் ஆண்டவர் திருமுன் வந்து நில்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9a, 11-16
அந்நாள்களில்

எலியா அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், “வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன்” என்றார்.

உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.

அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது. அதற்கு அவர், “படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர்; உம் பலி பீடங்களைத் தகர்த்து விட்டனர்; உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்” என்றார்.

அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திருப்பொழிவு செய். நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 14th : Responsorial PsalmPsalm 26(27):7-9,13-14 It is your face, O Lord, that I seek.

June 14th : Responsorial Psalm

Psalm 26(27):7-9,13-14 

It is your face, O Lord, that I seek.

O Lord, hear my voice when I call;
  have mercy and answer.
Of you my heart has spoken:
  ‘Seek his face.’
It is your face, O Lord, that I seek.

It is your face, O Lord, that I seek;
  hide not your face.
Dismiss not your servant in anger;
  you have been my help.

It is your face, O Lord, that I seek.

I am sure I shall see the Lord’s goodness
  in the land of the living.
Hope in him, hold firm and take heart.
  Hope in the Lord!

It is your face, O Lord, that I seek.

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!

The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

June 14th : Gospel If your right eye should cause you to sin, tear it outA Reading from the Holy Gospel according to St. Matthew 5: 27-32

June 14th :  Gospel 

If your right eye should cause you to sin, tear it out

A Reading from the Holy Gospel according to St. Matthew 5: 27-32 
Jesus said to his disciples: ‘You have learnt how it was said: You must not commit adultery. But I say this to you: if a man looks at a woman lustfully, he has already committed adultery with her in his heart. If your right eye should cause you to sin, tear it out and throw it away; for it will do you less harm to lose one part of you than to have your whole body thrown into hell. And if your right hand should cause you to sin, cut it off and throw it away; for it will do you less harm to lose one part of you than to have your whole body go to hell.
  ‘It has also been said: Anyone who divorces his wife must give her a writ of dismissal. But I say this to you: everyone who divorces his wife, except for the case of fornication, makes her an adulteress; and anyone who marries a divorced woman commits adultery.’

The Word of the Lord.

June 14th : First ReadingThe Lord was not in the wind, or the earthquake, or the fireA reading from the first book of Kings 19: 9,11-16

June 14th :  First Reading

The Lord was not in the wind, or the earthquake, or the fire

A reading from the first book of Kings 19: 9,11-16 
When Elijah reached Horeb, the mountain of God, he went into the cave and spent the night in it. Then he was told, ‘Go out and stand on the mountain before the Lord.’ Then the Lord himself went by. There came a mighty wind, so strong it tore the mountains and shattered the rocks before the Lord. But the Lord was not in the wind. After the wind came an earthquake. But the Lord was not in the earthquake. After the earthquake came a fire. But the Lord was not in the fire. And after the fire there came the sound of a gentle breeze. And when Elijah heard this, he covered his face with his cloak and went out and stood at the entrance of the cave. Then a voice came to him, which said, ‘What are you doing here, Elijah?’ He replied, ‘I am filled with jealous zeal for the Lord of Hosts, because the sons of Israel have deserted you, broken down your altars and put your prophets to the sword. I am the only one left and they want to kill me.’
  ‘Go,’ the Lord said, ‘go back by the same way to the wilderness of Damascus. You are to go and anoint Hazael as king of Aram. You are to anoint Jehu son of Nimshi as king of Israel, and to anoint Elisha son of Shaphat, of Abel Meholah, as prophet to succeed you.’

The Word of the Lord.

புதன், 12 ஜூன், 2024

ஜூன் 13 : நற்செய்தி வாசகம்தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

ஜூன் 13 :  நற்செய்தி வாசகம்

தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.