இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

செப்டம்பர் 18 : முதல் வாசகம் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31- 13: 13

 செப்டம்பர் 18 : முதல் வாசகம்

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31- 13: 13

சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டு விட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பது போல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.
ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.

September 18th : Gospel 'We played the pipes, and you wouldn't dance' A Reading from the Holy Gospel according to St.Luke 7:31-35

 September 18th : Gospel

'We played the pipes, and you wouldn't dance'

A Reading from the Holy Gospel according to St.Luke 7:31-35




Jesus said to the people: ‘What description can I find for the men of this generation? What are they like? They are like children shouting to one another while they sit in the market-place: ‘“We played the pipes for you, and you wouldn’t dance;

we sang dirges, and you wouldn’t cry.” ‘For John the Baptist comes, not eating bread, not drinking wine, and you say, “He is possessed.” The Son of Man comes, eating and drinking, and you say, “Look, a glutton and a drunkard, a friend of tax collectors and sinners.” Yet Wisdom has been proved right by all her children.’

The Gospel of the Lord.


September 18th : Responsorial Psalm Psalm 32(33):2-5,12,22

 September 18th : Responsorial Psalm

Psalm 32(33):2-5,12,22

Happy the people the Lord has chosen as his own.
Give thanks to the Lord upon the harp, with a ten-stringed lute sing him songs.O sing him a song that is new, play loudly, with all your skill.
Happy the people the Lord has chosen as his own.
For the word of the Lord is faithful and all his works to be trusted. The Lord loves justice and right and fills the earth with his love.
Happy the people the Lord has chosen as his own.
They are happy, whose God is the Lord, the people he has chosen as his own. May your love be upon us, O Lord, as we place all our hope in you.
Happy the people the Lord has chosen as his own.
Gospel Acclamation cf.1Th2:13
Alleluia, alleluia!
Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

September 18th : First Reading The supremacy of charity A Reading from the First Letter of St.Paul to the Corinthians 12:31-13:13

 September 18th : First Reading

The supremacy of charity

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 12:31-13:13


Be ambitious for the higher gifts. And I am going to show you a way that is better than any of them.

If I have all the eloquence of men or of angels, but speak without love, I am simply a gong booming or a cymbal clashing. If I have the gift of prophecy, understanding all the mysteries there are, and knowing everything, and if I have faith in all its fullness, to move mountains, but without love, then I am nothing at all. If I give away all that I possess, piece by piece, and if I even let them take my body to burn it, but am without love, it will do me no good whatever.

Love is always patient and kind; it is never jealous; love is never boastful or conceited; it is never rude or selfish; it does not take offence, and is not resentful. Love takes no pleasure in other people’s sins but delights in the truth; it is always ready to excuse, to trust, to hope, and to endure whatever comes.

Love does not come to an end. But if there are gifts of prophecy, the time will come when they must fail; or the gift of languages, it will not continue for ever; and knowledge – for this, too, the time will come when it must fail. For our knowledge is imperfect and our prophesying is imperfect; but once perfection comes, all imperfect things will disappear. When I was a child, I used to talk like a child, and think like a child, and argue like a child, but now I am a man, all childish ways are put behind me. Now we are seeing a dim reflection in a mirror; but then we shall be seeing face to face. The knowledge that I have now is imperfect; but then I shall know as fully as I am known.

In short, there are three things that last: faith, hope and love; and the greatest of these is love.

The Word of the Lord.


திங்கள், 16 செப்டம்பர், 2024

செப்டம்பர் 17 : நற்செய்தி வாசகம்இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17

செப்டம்பர் 17  :  நற்செய்தி வாசகம்

இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17
அக்காலத்தில்

இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.

அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள்.

அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.

அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 17 : பதிலுரைப் பாடல்திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 3c)பல்லவி: ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்!

செப்டம்பர் 17  :  பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 3c)

பல்லவி: ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்!
1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி

5
ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

செப்டம்பர் 17 : முதல் வாசகம்நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14, 27-31a

செப்டம்பர் 17  :  முதல் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14, 27-31a
சகோதரர் சகோதரிகளே,

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது.

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்ல செயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 17th : Gospel The only son of his mother, and she a widowA Reading from the Holy Gospel according to St,Luke 7: 11-17

September 17th : Gospel 

The only son of his mother, and she a widow

A Reading from the Holy Gospel according to St,Luke 7: 11-17 
Jesus went to a town called Nain, accompanied by his disciples and a great number of people. When he was near the gate of the town it happened that a dead man was being carried out for burial, the only son of his mother, and she was a widow. And a considerable number of the townspeople were with her. When the Lord saw her he felt sorry for her. ‘Do not cry’ he said. Then he went up and put his hand on the bier and the bearers stood still, and he said, ‘Young man, I tell you to get up.’ And the dead man sat up and began to talk, and Jesus gave him to his mother. Everyone was filled with awe and praised God saying, ‘A great prophet has appeared among us; God has visited his people.’ And this opinion of him spread throughout Judaea and all over the countryside.

The Word of the Lord.

September 17th : Responsorial Psalm Psalm 99(100) We are his people, the sheep of his flock.

September 17th : Responsorial Psalm 

Psalm 99(100) 

We are his people, the sheep of his flock.
Cry out with joy to the Lord, all the earth.
  Serve the Lord with gladness.
  Come before him, singing for joy.

We are his people, the sheep of his flock.

Know that he, the Lord, is God.
  He made us, we belong to him,
  we are his people, the sheep of his flock.

We are his people, the sheep of his flock.

Go within his gates, giving thanks.
  Enter his courts with songs of praise.
  Give thanks to him and bless his name.

We are his people, the sheep of his flock.

Indeed, how good is the Lord,
  eternal his merciful love.
  He is faithful from age to age.

We are his people, the sheep of his flock.

Gospel Acclamation cf.2Tim1:10

Alleluia, alleluia!

Our Saviour Jesus Christ abolished death
and he has proclaimed life through the Good News.
Alleluia!

September 17th : First ReadingYou together are Christ's body: each of you a different partA Reading from the First Letter of St.Paul to the Corinthians 12: 12-14, 27-31

September 17th : First Reading

You together are Christ's body: each of you a different part

A Reading from the First Letter of St.Paul to the  Corinthians 12: 12-14, 27-31 

Just as a human body, though it is made up of many parts, is a single unit because all these parts, though many, make one body, so it is with Christ. In the one Spirit we were all baptised, Jews as well as Greeks, slaves as well as citizens, and one Spirit was given to us all to drink.
  Nor is the body to be identified with any one of its many parts. Now you together are Christ’s body; but each of you is a different part of it. In the Church, God has given the first place to apostles, the second to prophets, the third to teachers; after them, miracles, and after them the gift of healing; helpers, good leaders, those with many languages. Are all of them apostles, or all of them prophets, or all of them teachers? Do they all have the gift of miracles, or all have the gift of healing? Do all speak strange languages, and all interpret them? Be ambitious for the higher gifts.

The Word of the Lord.