இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 18 செப்டம்பர், 2024

செப்டம்பர் 19 : முதல் வாசகம் நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11

 செப்டம்பர் 19 :   முதல் வாசகம்

நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11

சகோதரர் சகோதரிகளே,


உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிட வில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


Gospel “Her sins, even her many sins, are forgiven, because she has shown great love” (Lk 7:36-50) Alleluia. Alleluia.

 Gospel

“Her sins, even her many sins, are forgiven, because she has shown great love” (Lk 7:36-50)
Alleluia. Alleluia.

Come to me, all you who labor
and are burdened, says the Lord,
and I will give you rest.
Alleluia. (Mt 11:28)
Gospel of Jesus Christ according to Saint Luke
At that time
a Pharisee had invited Jesus to eat with him.
Jesus went in
and sat down at the table.
Then a woman from the city, a sinner, came
and heard that Jesus was reclining at the table in the Pharisee's house.
She had brought an alabaster jar of perfume.
She stood behind him at his feet, weeping,
and began to wet his feet with her tears.
She wiped them with her hair,
kissed them,
and anointed them with perfume.
When the Pharisee who had invited Jesus saw this,
he said to himself,
“If this man were a prophet,
he would know who this woman is who is touching him,
and that she is a sinner.”
Jesus answered and said to him,
“Simon, I have something to say to you.”
“Speak, Master.”
Jesus said to him,
“A certain creditor had two debtors;
the one owed him five hundred pieces of silver, and
the other fifty.
Since neither of them could pay him back,
he forgave them both.
Which of them will love him more?”
Simon answered,
“I suppose the one who has been forgiven
the greater debt.
” Jesus said to him, “You are right.”
He turned to the woman and said to Simon,
“Do you see this woman?
I came into your house,
and you did not pour water on my feet;
but she wet them with her tears
and wiped them with her hair.”
You did not kiss me;
she, since she came in,
has not stopped kissing my feet.
You did not anoint my head;
she poured perfume on my feet.
Therefore I tell you,
her sins, even her many sins, are forgiven,
because she has shown much love.
But he who is forgiven little,
shows little love. "
Then he said to the woman,
"Your sins are forgiven."
Those who were with them began to say to themselves,
"Who is this man
who forgives sins?"
Then Jesus said to the woman,
"Your faith has saved you.
Go in peace."
– Let us acclaim the Word of God.

Psalm (Ps 117 (118), 1-2, 16-17, 28.21) R/ Give thanks to the Lord: He is good! or: Alleluia! (Ps 117, 1a)

 Psalm

(Ps 117 (118), 1-2, 16-17, 28.21)
R/ Give thanks to the Lord: He is good!
or: Alleluia! (Ps 117, 1a)

Give thanks to the Lord: He is good!
His love endures forever!
Yes, let Israel say:
His love endures forever!
The arm of the Lord is lifted up,
the arm of the Lord is strong!
No, I will not die, I will live
to announce the works of the Lord.
You are my God; I will praise you;
my God, I will exalt you!
I will praise you because you have heard me;
you are my salvation.

September 19, 2024 Thursday, 24th Week of Ordinary Time — Even Year St. Januarius, Bishop and Martyr Optional Memorial The readings displayed below are those of the Roman calendar. For this day, there are specific readings for: France Readings of the Mass First reading “This is what we proclaim, this is what you believe” (1 Cor 15:1-11)

 September 19, 2024

Thursday, 24th Week of Ordinary Time — Even Year
St. Januarius, Bishop and Martyr
Optional Memorial

The readings displayed below are those of the Roman calendar. For this day, there are specific readings for: France
Readings of the Mass
First reading
“This is what we proclaim, this is what you believe” (1 Cor 15:1-11)
Reading from the first letter of Saint Paul the Apostle to the Corinthians
Brothers and sisters,
I remind you of the gospel
that I preached to you;
you received it;
in it you stand firm,
and through it you will be saved
if you hold fast to what I preached to you;
otherwise, you have believed in vain.
First of all, I delivered to you what
I also received:
that Christ died for our sins
in accordance with the Scriptures
and was buried;
that he rose again on the third day
in accordance with the Scriptures;
that he appeared to Peter, then to the Twelve;
then to more than five hundred brothers at once
—most of them are still living,
but some have fallen asleep in death—
then to James, then to all the apostles.
And last of all, he appeared to me, who is out of due time.
For I am the least of the Apostles,
and am not worthy to be called an Apostle,
because I persecuted the church of God.
But what I am,
I am by the grace of God,
and his grace, which came to me, was not unfruitful.
I have labored more than all;
but it is not I,
but the grace of God with me.
In short, whether it is me or others,
this is what we proclaim,
this is what you believe.
– Word of the Lord.

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

செப்டம்பர் 18 : நற்செய்தி வாசகம் நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை. லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35

 செப்டம்பர் 18 : நற்செய்தி வாசகம்

நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35


அக்காலத்தில்

இயேசு, “இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை’ என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவும் இல்லை; திராட்சை மது குடிக்கவும் இல்லை; அவரை, ‘பேய் பிடித்தவன்’ என்றீர்கள்.

மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 18 : பதிலுரைப் பாடல் திபா 33: 2-3. 4-5. 12,22 . (பல்லவி: 12b) பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

 செப்டம்பர் 18 :  பதிலுரைப் பாடல்

திபா 33: 2-3. 4-5. 12,22 . (பல்லவி: 12b)


பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

2.யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.

3.புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். - பல்லவி

4.ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5.அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

12.ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

22.உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

செப்டம்பர் 18 : முதல் வாசகம் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31- 13: 13

 செப்டம்பர் 18 : முதல் வாசகம்

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31- 13: 13

சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டு விட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பது போல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.
ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.

September 18th : Gospel 'We played the pipes, and you wouldn't dance' A Reading from the Holy Gospel according to St.Luke 7:31-35

 September 18th : Gospel

'We played the pipes, and you wouldn't dance'

A Reading from the Holy Gospel according to St.Luke 7:31-35




Jesus said to the people: ‘What description can I find for the men of this generation? What are they like? They are like children shouting to one another while they sit in the market-place: ‘“We played the pipes for you, and you wouldn’t dance;

we sang dirges, and you wouldn’t cry.” ‘For John the Baptist comes, not eating bread, not drinking wine, and you say, “He is possessed.” The Son of Man comes, eating and drinking, and you say, “Look, a glutton and a drunkard, a friend of tax collectors and sinners.” Yet Wisdom has been proved right by all her children.’

The Gospel of the Lord.


September 18th : Responsorial Psalm Psalm 32(33):2-5,12,22

 September 18th : Responsorial Psalm

Psalm 32(33):2-5,12,22

Happy the people the Lord has chosen as his own.
Give thanks to the Lord upon the harp, with a ten-stringed lute sing him songs.O sing him a song that is new, play loudly, with all your skill.
Happy the people the Lord has chosen as his own.
For the word of the Lord is faithful and all his works to be trusted. The Lord loves justice and right and fills the earth with his love.
Happy the people the Lord has chosen as his own.
They are happy, whose God is the Lord, the people he has chosen as his own. May your love be upon us, O Lord, as we place all our hope in you.
Happy the people the Lord has chosen as his own.
Gospel Acclamation cf.1Th2:13
Alleluia, alleluia!
Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

September 18th : First Reading The supremacy of charity A Reading from the First Letter of St.Paul to the Corinthians 12:31-13:13

 September 18th : First Reading

The supremacy of charity

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 12:31-13:13


Be ambitious for the higher gifts. And I am going to show you a way that is better than any of them.

If I have all the eloquence of men or of angels, but speak without love, I am simply a gong booming or a cymbal clashing. If I have the gift of prophecy, understanding all the mysteries there are, and knowing everything, and if I have faith in all its fullness, to move mountains, but without love, then I am nothing at all. If I give away all that I possess, piece by piece, and if I even let them take my body to burn it, but am without love, it will do me no good whatever.

Love is always patient and kind; it is never jealous; love is never boastful or conceited; it is never rude or selfish; it does not take offence, and is not resentful. Love takes no pleasure in other people’s sins but delights in the truth; it is always ready to excuse, to trust, to hope, and to endure whatever comes.

Love does not come to an end. But if there are gifts of prophecy, the time will come when they must fail; or the gift of languages, it will not continue for ever; and knowledge – for this, too, the time will come when it must fail. For our knowledge is imperfect and our prophesying is imperfect; but once perfection comes, all imperfect things will disappear. When I was a child, I used to talk like a child, and think like a child, and argue like a child, but now I am a man, all childish ways are put behind me. Now we are seeing a dim reflection in a mirror; but then we shall be seeing face to face. The knowledge that I have now is imperfect; but then I shall know as fully as I am known.

In short, there are three things that last: faith, hope and love; and the greatest of these is love.

The Word of the Lord.