இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 30 செப்டம்பர், 2024

October 1st : First ReadingWhy did I not perish on the day I was born?A Reading from the Book of Job 3:1-3,11-17,20-23

October 1st :  First Reading

Why did I not perish on the day I was born?

A Reading from the Book of Job 3:1-3,11-17,20-23 
Job broke the silence and cursed the day of his birth. This is what he said:
May the day perish when I was born,
  and the night that told of a boy conceived.
Why did I not die new-born,
  not perish as I left the womb?
Why were there two knees to receive me,
  two breasts for me to suck?
Had there not been, I should now be lying in peace,
  wrapped in a restful slumber,
with the kings and high viziers of earth
  who build themselves vast vaults,
or with princes who have gold and to spare
  and houses crammed with silver.
Or put away like a still-born child that never came to be,
  like unborn babes that never see the light.
Down there, bad men bustle no more,
  there the weary rest.
Why give light to a man of grief?
  Why give life to those bitter of heart,
who long for a death that never comes,
  and hunt for it more than for a buried treasure?
They would be glad to see the grave-mound
  and shout with joy if they reached the tomb.
Why make this gift of light to a man who does not see his way,
  whom God baulks on every side?

The Word of the Lord.

அக்டோபர் 1 : நற்செய்தி வாசகம்இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56

அக்டோபர் 1  : நற்செய்தி வாசகம்

இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 1 : பதிலுரைப் பாடல்திபா 88: 1-2. 3-4. 5. 6-7 (பல்லவி: 2a)

அக்டோபர் 1  : பதிலுரைப் பாடல்

திபா 88: 1-2. 3-4. 5. 6-7 (பல்லவி: 2a)
பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!

1
ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.
2
என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்! - பல்லவி

3
ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது; என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.
4
படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக நானும் கணிக்கப் படுகின்றேன்; வலுவிழந்த மனிதரைப் போல் ஆனேன். - பல்லவி

5
இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்; கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்; அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை; அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள். - பல்லவி

6
ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டுவிட்டீர்.
7
உமது சினம் என்னை அழுத்துகின்றது; உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

அக்டோபர் 1 : முதல் வாசகம்உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?யோபு நூலிலிருந்து வாசகம் 3: 1-4a, 11-17, 20-23

அக்டோபர் 1  :  முதல் வாசகம்

உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?

யோபு நூலிலிருந்து வாசகம் 3: 1-4a, 11-17, 20-23
யோபு வாய் திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். யோபு கூறியது: “ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண் மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே! அந்த நாள் இருளாகட்டும்.

கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா? என்னை ஏந்த முழங்கால்கள் முன்வந்ததேன்? நான் பாலுண்ண முலைகள் இருந்ததேன்?

இல்லாதிருந்திருந்தால், நான் வெறுமனே கிடந்து துயில் கொண்டிருப்பேன். பாழானவைகளைத் தமக்குக் கட்டிக்கொண்ட மாநிலத்து மன்னர்களோடும் அமைச்சர்களோடும் அல்லது பொன்னை மிகுதியிருக்கக் கொண்டு, வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின உயர்குடி மக்களோடும் நான் உறங்கியிருந்திருப்பேன். அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன். அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர். களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.

உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்? சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்; அதைப் புதையலினும் மேலாய்க் கருதித் தேடுகிறார்கள். ஆனால் அதுவோ வந்தபாடில்லை. கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்? எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்?”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

செப்டம்பர் 30 : நற்செய்தி வாசகம் உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50

 செப்டம்பர் 30 : நற்செய்தி வாசகம்

உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50


அக்காலத்தில்

தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.

இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 30 : பதிலுரைப் பாடல் திபா 17: 1. 2-3. 6-7 (பல்லவி: 6cd) பல்லவி: ஆண்டவரே, உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

 செப்டம்பர் 30 : பதிலுரைப் பாடல்

திபா 17: 1. 2-3. 6-7 (பல்லவி: 6cd)

பல்லவி: ஆண்டவரே, உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.


1

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

2

உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.

3

என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். - பல்லவி

6

இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

7

உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

செப்டம்பர் 30 : முதல் வாசகம் ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக! யோபு நூலிலிருந்து வாசகம் 1: 6-22

 செப்டம்பர் 30 :  முதல் வாசகம்

ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!

யோபு நூலிலிருந்து வாசகம் 1: 6-22


ஒரு நாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்து நின்றான். ஆண்டவர் சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை” என்றார்.

மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம், “ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்” என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், “இதோ! அவனுக்கு உரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே” என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.

ஒரு நாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, “எருதுகள் உழுது கொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்து விட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.

யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்; தம் தலையை மழித்துக் கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!” என்றார். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவும் இல்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 30th : Gospel The least among you all is the greatest A Reading from the Holy Gospel according to St.Luke 9:46-50

 September 30th : Gospel 

The least among you all is the greatest

A Reading from the Holy Gospel according to St.Luke 9:46-50 


An argument started between the disciples about which of them was the greatest. Jesus knew what thoughts were going through their minds, and he took a little child and set him by his side and then said to them, ‘Anyone who welcomes this little child in my name welcomes me; and anyone who welcomes me welcomes the one who sent me. For the least among you all, that is the one who is great.’

  John spoke up. ‘Master,’ he said ‘we saw a man casting out devils in your name, and because he is not with us we tried to stop him.’ But Jesus said to him, ‘You must not stop him: anyone who is not against you is for you.’

The Word of the Lord.

September 30th : Responsorial Psalm Psalm 16(17):1-3,6-7

 September 30th : Responsorial Psalm

Psalm 16(17):1-3,6-7 


Turn your ear to me, O Lord; hear my words.

Lord, hear a cause that is just,

  pay heed to my cry.

Turn your ear to my prayer:

  no deceit is on my lips.

Turn your ear to me, O Lord; hear my words.

From you may my judgement come forth.

  Your eyes discern the truth.

You search my heart, you visit me by night.

  You test me and you find in me no wrong.

Turn your ear to me, O Lord; hear my words.

I am here and I call, you will hear me, O God.

  Turn your ear to me; hear my words.

Display your great love, you whose right hand saves

  your friends from those who rebel against them.

Turn your ear to me, O Lord; hear my words.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!

I am the Way, the Truth and the Life, says the Lord;

No one can come to the Father except through me.

Alleluia!

September 30th : First Reading The Lord gave, the Lord has taken back: blessed be the name of the Lord A Reading from the Bok of Job 1:6-22

 September 30th :  First Reading 

The Lord gave, the Lord has taken back: blessed be the name of the Lord

A Reading from the Bok of Job 1:6-22 


One day the Sons of God came to attend on the Lord, and among them was Satan. So the Lord said to Satan, ‘Where have you been?’ ‘Round the earth,’ he answered ‘roaming about.’ So the Lord asked him, ‘Did you notice my servant Job? There is no one like him on the earth: a sound and honest man who fears God and shuns evil.’ ‘Yes,’ Satan said ‘but Job is not God-fearing for nothing, is he? Have you not put a wall round him and his house and all his domain? You have blessed all he undertakes, and his flocks throng the countryside. But stretch out your hand and lay a finger on his possessions: I warrant you, he will curse you to your face.’ ‘Very well,’ the Lord said to Satan ‘all he has is in your power. But keep your hands off his person.’ So Satan left the presence of the Lord.

  On the day when Job’s sons and daughters were at their meal and drinking wine at their eldest brother’s house, a messenger came to Job. ‘Your oxen’ he said ‘were at the plough, with the donkeys grazing at their side, when the Sabaeans swept down on them and carried them off. Your servants they put to the sword: I alone escaped to tell you.’ He had not finished speaking when another messenger arrived. ‘The fire of God’ he said ‘has fallen from the heavens and burnt up all your sheep, and your shepherds too: I alone escaped to tell you.’ He had not finished speaking when another messenger arrived. ‘The Chaldaeans,’ he said ‘three bands of them, have raided your camels and made off with them. Your servants they put to the sword: I alone escaped to tell you.’ He had not finished speaking when another messenger arrived. ‘Your sons and daughters’ he said ‘were at their meal and drinking wine at their eldest brother’s house, when suddenly from the wilderness a gale sprang up, and it battered all four corners of the house which fell in on the young people. They are dead: I alone escaped to tell you.’

  Job rose and tore his gown and shaved his head. Then falling to the ground he worshipped and said:

‘Naked I came from my mother’s womb,

naked I shall return.

The Lord gave, the Lord has taken back.

Blessed be the name of the Lord!’

In all this misfortune Job committed no sin nor offered any insult to God.

The Word of the Lord.