ஞாயிறு, 19 ஜனவரி, 2025
சனவரி 20 : முதல் வாசகம்இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-10
சனி, 18 ஜனவரி, 2025
சனவரி 19 : நற்செய்தி வாசகம் கானாவில் இயேசு செய்த முதல் அரும் அடையாளத்தில் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
சனவரி 19 : நற்செய்தி வாசகம்
கானாவில் இயேசு செய்த முதல் அரும் அடையாளத்தில் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
சனவரி 19 : இரண்டாம் வாசகம் தூய ஆவியார் தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11.
சனவரி 19 : இரண்டாம் வாசகம்
தூய ஆவியார் தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11.
சகோதரர் சகோதரிகளே,
அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.
பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவு செறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணி தீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். தூய ஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும், இன்னொருவருக்கு இறைவாக்கு உரைக்கும் ஆற்றலையும், வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும், மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றலையும், பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.
அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 தெச 2: 14
அல்லேலூயா, அல்லேலூயா!
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
சனவரி 19 : பதிலுரைப் பாடல் திபா 96: 1,2a. 2b-3. 7-8a. 9-10ac (பல்லவி: 3b) பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
சனவரி 19 : பதிலுரைப் பாடல்
திபா 96: 1,2a. 2b-3. 7-8a. 9-10ac (பல்லவி: 3b)
பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2a
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி
2b
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி
7
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8a
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். - பல்லவி
9
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.
10ac
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி
சனவரி 19 : முதல் வாசகம் மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5
சனவரி 19 : முதல் வாசகம்
மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5
சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.
‘கைவிடப்பட்டவள்’ என்று இனி நீ பெயர் பெற மாட்டாய்; ‘பாழ்பட்டது’ என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘எப்சிபா’ என்று அழைக்கப் படுவாய்; உன் நாடு ‘பெயுலா’ என்று பெயர்பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்.
இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பது போல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வது போல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
January 19th : Gospel 'My hour has not come yet' - 'Do whatever he tells you'. A Reading from the Holy Gospel according to St.John 2: 1-11
January 19th : Gospel
'My hour has not come yet' - 'Do whatever he tells you'.
A Reading from the Holy Gospel according to St.John 2: 1-11
There was a wedding at Cana in Galilee. The mother of Jesus was there, and Jesus and his disciples had also been invited. When they ran out of wine, since the wine provided for the wedding was all finished, the mother of Jesus said to him, ‘They have no wine.’ Jesus said ‘Woman, why turn to me? My hour has not come yet.’ His mother said to the servants, ‘Do whatever he tells you.’ There were six stone water jars standing there, meant for the ablutions that are customary among the Jews: each could hold twenty or thirty gallons. Jesus said to the servants, ‘Fill the jars with water’, and they filled them to the brim. ‘Draw some out now’ he told them ‘and take it to the steward.’ They did this; the steward tasted the water, and it had turned into wine. Having no idea where it came from – only the servants who had drawn the water knew – the steward called the bridegroom and said, ‘People generally serve the best wine first, and keep the cheaper sort till the guests have had plenty to drink; but you have kept the best wine till now.’
This was the first of the signs given by Jesus: it was given at Cana in Galilee. He let his glory be seen, and his disciples believed in him.
The Word of the Lord.
January 19th : Second Reading The Spirit distributes gifts to different people just as he chooses. A Reading from the First letter of St.Paul to the Corinthians 12: 4-11.
January 19th : Second Reading
The Spirit distributes gifts to different people just as he chooses.
A Reading from the First letter of St.Paul to the Corinthians 12: 4-11.
There is a variety of gifts but always the same Spirit; there are all sorts of service to be done, but always to the same Lord; working in all sorts of different ways in different people, it is the same God who is working in all of them. The particular way in which the Spirit is given to each person is for a good purpose. One may have the gift of preaching with wisdom given him by the Spirit; another may have the gift of preaching instruction given him by the same Spirit; and another the gift of faith given by the same Spirit; another again the gift of healing, through this one Spirit; one, the power of miracles; another, prophecy; another the gift of recognising spirits; another the gift of tongues and another the ability to interpret them. All these are the work of one and the same Spirit, who distributes different gifts to different people just as he chooses.
The Word of the Lord.
Gospel Acclamation 1S3:9,Jn6:68
Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!
January 19th : Responsorial Psalm Psalm 95(96):1-3,7-10
January 19th : Responsorial Psalm
Psalm 95(96):1-3,7-10
Proclaim the wonders of the Lord among all the peoples.
O sing a new song to the Lord,
sing to the Lord all the earth.
O sing to the Lord, bless his name.
Proclaim the wonders of the Lord among all the peoples.
Proclaim his help day by day,
tell among the nations his glory
and his wonders among all the peoples.
Proclaim the wonders of the Lord among all the peoples.
Give the Lord, you families of peoples,
give the Lord glory and power;
give the Lord the glory of his name.
Proclaim the wonders of the Lord among all the peoples.
Worship the Lord in his temple.
O earth, tremble before him.
Proclaim to the nations: ‘God is king.’
He will judge the peoples in fairness.
Proclaim the wonders of the Lord among all the peoples.
January 19th : First Reading The bridegroom rejoices in his bride. A Reading from the Book of Isaiah 62 : 1-5
January 19th : First Reading
The bridegroom rejoices in his bride.
A Reading from the Book of Isaiah 62 : 1-5
About Zion I will not be silent,
about Jerusalem I will not grow weary,
until her integrity shines out like the dawn
and her salvation flames like a torch.
The nations then will see your integrity,
all the kings your glory,
and you will be called by a new name,
one which the mouth of the Lord will confer.
You are to be a crown of splendour in the hand of the Lord,
a princely diadem in the hand of your God;
no longer are you to be named ‘Forsaken’,
nor your land ‘Abandoned’,
but you shall be called ‘My Delight’
and your land ‘The Wedded’;
for the Lord takes delight in you
and your land will have its wedding.
Like a young man marrying a virgin,
so will the one who built you wed you,
and as the bridegroom rejoices in his bride,
so will your God rejoice in you.
The Word of the Lord.
வெள்ளி, 17 ஜனவரி, 2025
January 18th : Gospel Your light must shine in the sight of men A Reading from the Holy Gospel according to St.Mark 2:13-17
January 18th : Gospel
Your light must shine in the sight of men
A Reading from the Holy Gospel according to St.Mark 2:13-17
Jesus went out to the shore of the lake; and all the people came to him, and he taught them. As he was walking on he saw Levi the son of Alphaeus, sitting by the customs house, and he said to him, ‘Follow me.’ And he got up and followed him.
When Jesus was at dinner in his house, a number of tax collectors and sinners were also sitting at the table with Jesus and his disciples; for there were many of them among his followers. When the scribes of the Pharisee party saw him eating with sinners and tax collectors, they said to his disciples, ‘Why does he eat with tax collectors and sinners?’ When Jesus heard this he said to them, ‘It is not the healthy who need the doctor, but the sick. I did not come to call the virtuous, but sinners.’
The Word of the Lord.