இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 20 ஜனவரி, 2025

சனவரி 21 : பதிலுரைப் பாடல் திபா 111: 1-2. 4-5. 9,10c (பல்லவி: 5b) பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

 சனவரி 21 :  பதிலுரைப் பாடல்

திபா 111: 1-2. 4-5. 9,10c (பல்லவி: 5b)


பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

1

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

2

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். - பல்லவி

4

அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.

5

அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். - பல்லவி

9

தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது.

10c

அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 17-18 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா!

 கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! அல்லேலூயா.

சனவரி 21 : முதல் வாசகம் எதிர்நோக்கே உள்ளத்திற்குப் பாதுகாப்பானது; உறுதியான நங்கூரம் போன்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20 சகோதரர் சகோதரிகளே,

 சனவரி 21 :  முதல் வாசகம்

எதிர்நோக்கே உள்ளத்திற்குப் பாதுகாப்பானது; உறுதியான நங்கூரம் போன்றது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20


சகோதரர் சகோதரிகளே,

கடவுள் நீதியற்றவர் அல்ல. இறைமக்களுக்கு நீங்கள் முன்பு தொண்டாற்றி வந்தீர்கள்; இப்போதும் தொண்டு செய்து வருகின்றீர்கள். எனவே கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்பையும் அவர் மறக்கமாட்டார். நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதி பெறும் பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதிவரை காட்டவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப் பேறாகப் பெற்றவர்களைப்போல் வாழுங்கள்.

ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக் கூற இயலாததால், தம்மீதே ஆணையிட்டு, “நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்” என்றார். இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார். தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும்.

அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிப்படுத்தினார். மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்த வரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும். இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான நங்கூரம் போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது. நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 21st : Gospel The sabbath was made for man, not man for the sabbath A Reading from the Holy Gospel according to St.Mark 2: 23-28

 January 21st :  Gospel 

The sabbath was made for man, not man for the sabbath

A Reading from the Holy Gospel according to St.Mark 2: 23-28 


One sabbath day, Jesus happened to be taking a walk through the cornfields, and his disciples began to pick ears of corn as they went along. And the Pharisees said to him, ‘Look, why are they doing something on the sabbath day that is forbidden?’ And he replied, ‘Did you never read what David did in his time of need when he and his followers were hungry – how he went into the house of God when Abiathar was high priest, and ate the loaves of offering which only the priests are allowed to eat, and how he also gave some to the men with him?’

  And he said to them, ‘The sabbath was made for man, not man for the sabbath; the Son of Man is master even of the sabbath.’

The Word of the Lord.

January 21st : Responsorial Psalm Psalm 110(111):1-2,4-5,9,10 The Lord keeps his covenant ever in mind.

 January 21st :  Responsorial Psalm

Psalm 110(111):1-2,4-5,9,10 


The Lord keeps his covenant ever in mind.

I will thank the Lord with all my heart

  in the meeting of the just and their assembly.

Great are the works of the Lord,

  to be pondered by all who love them.

The Lord keeps his covenant ever in mind.

He makes us remember his wonders.

  The Lord is compassion and love.

He gives food to those who fear him;

  keeps his covenant ever in mind.

The Lord keeps his covenant ever in mind.

He has sent deliverance to his people

  and established his covenant for ever.

Holy his name, to be feared.

  His praise shall last for ever!

The Lord keeps his covenant ever in mind.

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider

the wonders of your law.

Alleluia!

January 21st : First Reading In this hope we have an anchor for our soul A reading from the letter to the Hebrews 6: 10-20

 January 21st : First Reading

In this hope we have an anchor for our soul
A reading from the letter to the Hebrews 6: 10-20

God would not be so unjust as to forget all you have done, the love that you have for his name or the services you have done, and are still doing, for the saints. Our one desire is that every one of you should go on showing the same earnestness to the end, to the perfect fulfilment of our hopes, never growing careless, but imitating those who have the faith and the perseverance to inherit the promises.
When God made the promise to Abraham, he swore by his own self, since it was impossible for him to swear by anyone greater: I will shower blessings on you and give you many descendants. Because of that, Abraham persevered and saw the promise fulfilled. Men, of course, swear an oath by something greater than themselves, and between men, confirmation by an oath puts an end to all dispute. In the same way, when God wanted to make the heirs to the promise thoroughly realise that his purpose was unalterable, he conveyed this by an oath; so that there would be two unalterable things in which it was impossible for God to be lying, and so that we, now we have found safety, should have a strong encouragement to take a firm grip on the hope that is held out to us. Here we have an anchor for our soul, as sure as it is firm, and reaching right through beyond the veil where Jesus has entered before us and on our behalf, to become a high priest of the order of Melchizedek, and for ever.
The Word of the Lord.

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

January 20th : Gospel'Why do your disciples not fast?'A Reading from the Holy Gospel according to St.Mark 2:18-22

January 20th :  Gospel

'Why do your disciples not fast?'

A Reading from the Holy Gospel according to St.Mark 2:18-22 
One day when John’s disciples and the Pharisees were fasting, some people came to Jesus and said to him, ‘Why is it that John’s disciples and the disciples of the Pharisees fast, but your disciples do not?’ Jesus replied, ‘Surely the bridegroom’s attendants would never think of fasting while the bridegroom is still with them? As long as they have the bridegroom with them, they could not think of fasting. But the time will come for the bridegroom to be taken away from them, and then, on that day, they will fast. No one sews a piece of unshrunken cloth on an old cloak; if he does, the patch pulls away from it, the new from the old, and the tear gets worse. And nobody puts new wine into old wineskins; if he does, the wine will burst the skins, and the wine is lost and the skins too. No! New wine, fresh skins!’

The Word of the Lord.

January 20th : Responsorial PsalmPsalm 109(110):1-4 You are a priest for ever, a priest like Melchizedek of old.

January 20th :  Responsorial Psalm

Psalm 109(110):1-4 

You are a priest for ever, a priest like Melchizedek of old.
The Lord’s revelation to my Master:
  ‘Sit on my right:
  your foes I will put beneath your feet.’

You are a priest for ever, a priest like Melchizedek of old.

The Lord will wield from Zion
  your sceptre of power:
  rule in the midst of all your foes.

You are a priest for ever, a priest like Melchizedek of old.

A prince from the day of your birth
  on the holy mountains;
  from the womb before the dawn I begot you.

You are a priest for ever, a priest like Melchizedek of old.

The Lord has sworn an oath he will not change.
  ‘You are a priest for ever,
  a priest like Melchizedek of old.’

You are a priest for ever, a priest like Melchizedek of old.

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!

Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

January 20th : First Reading Although he was Son, he learned to obey through sufferingA reading from the letter to the Hebrews 5: 1-10

January 20th :  First Reading 

Although he was Son, he learned to obey through suffering

A reading from the letter to the Hebrews 5: 1-10 
Every high priest has been taken out of mankind and is appointed to act for men in their relations with God, to offer gifts and sacrifices for sins; and so he can sympathise with those who are ignorant or uncertain because he too lives in the limitations of weakness. That is why he has to make sin offerings for himself as well as for the people. No one takes this honour on himself, but each one is called by God, as Aaron was. Nor did Christ give himself the glory of becoming high priest, but he had it from the one who said to him: You are my son, today I have become your father, and in another text: You are a priest of the order of Melchizedek, and for ever. During his life on earth, he offered up prayer and entreaty, aloud and in silent tears, to the one who had the power to save him out of death, and he submitted so humbly that his prayer was heard. Although he was Son, he learnt to obey through suffering; but having been made perfect, he became for all who obey him the source of eternal salvation and was acclaimed by God with the title of high priest of the order of Melchizedek.

The Word of the Lord.

சனவரி 20 : நற்செய்தி வாசகம்மணமகன் விருந்தினரோடு இருக்கிறார்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22

சனவரி 20 : நற்செய்தி வாசகம்

மணமகன் விருந்தினரோடு இருக்கிறார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22
யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற் பைகளுக்கே ஏற்றது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 20 : பதிலுரைப் பாடல்திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)பல்லவி: 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.'

சனவரி 20 :  பதிலுரைப் பாடல்

திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)

பல்லவி: 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.'
1
ஆண்டவர் என் தலைவரிடம், ‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். - பல்லவி

2
வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! - பல்லவி

3
நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். - பல்லவி

4
‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!

 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.