திங்கள், 10 பிப்ரவரி, 2025
February 11th : Gospel You get round the commandment of God to preserve your own traditionA Reading from the Holy Gospel according to St.Mark 7: 1-13
February 11th : Responsorial Psalm Psalm 8:4-9 How great is your name, O Lord our God, through all the earth!
February 11th : First Reading'Let us make man in our own image'A Reading from the Book of Genesis 1:20-2:4
February 10th : Gospel All those who touched him were curedA Reading from the Holy Gospel according to St.Mark 6:53-56
February 10th : Responsorial PsalmPsalm 103(104):1-2,5-6,10,12,24,35
February 10th : First Reading God saw that it was goodA Reading from the Book of Genesis 1:1-19
பிப்ரவரி 10 : நற்செய்தி வாசகம்இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56
பிப்ரவரி 10 : பதிலுரைப் பாடல்திபா 104: 1-2. 5-6. 10-12. 24,35c (பல்லவி: 31b)பல்லவி: ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
பிப்ரவரி 10 : முதல் வாசகம்கடவுள் உரைத்தார்: அஃது அவ்வாறே ஆயிற்று.தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1-19
சனி, 8 பிப்ரவரி, 2025
பிப்ரவரி 9 : நற்செய்தி வாசகம் அனைத்தையும் விட்டுவிட்டு, சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11
பிப்ரவரி 9 : நற்செய்தி வாசகம்
அனைத்தையும் விட்டுவிட்டு, சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11
ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.
அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.