இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

மார்ச் 1 : முதல் வாசகம்கடவுள் தமது சாயலாகவே மனிதரை உருவாக்கினார்.சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 1-15

மார்ச் 1 :  முதல் வாசகம்

கடவுள் தமது சாயலாகவே மனிதரை உருவாக்கினார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 1-15
ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்; மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

தமக்கு உள்ளதைப் போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்; தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார். எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்; விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்; ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்; அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார். விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.

அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார். அவர்களின் உள்ளத்தைப் பற்றி விழிப்பாய் இருந்தார்; தம் செயல்களில் மேன்மையைக் காட்டினார். தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.

அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்; இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள். அறிவை அவர்களுக்கு வழங்கினார்; வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார்.

அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்; தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன; அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன. `எல்லா வகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள்' என்று அவர் எச்சரித்தார்; அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்; அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 1st : Gospel It is to such as these little children that the kingdom of God belongsA Reading from the Holy Gospel according to St.Mark 10:13-16

March 1st : Gospel 

It is to such as these little children that the kingdom of God belongs

A Reading from the Holy Gospel according to St.Mark 10:13-16 
People were bringing little children to Jesus, for him to touch them. The disciples turned them away, but when Jesus saw this he was indignant and said to them, ‘Let the little children come to me; do not stop them; for it is to such as these that the kingdom of God belongs. I tell you solemnly, anyone who does not welcome the kingdom of God like a little child will never enter it.’ Then he put his arms round them, laid his hands on them and gave them his blessing.

The Gospel of the Lord.

March 1st : Responsorial PsalmPsalm 102(103):13-18

March 1st : Responsorial Psalm

Psalm 102(103):13-18 

The love of the Lord is everlasting upon those who hold him in fear.
As a father has compassion on his sons,
  the Lord has pity on those who fear him;
for he knows of what we are made,
  he remembers that we are dust.

The love of the Lord is everlasting upon those who hold him in fear.

As for man, his days are like grass;
  he flowers like the flower of the field;
the wind blows and he is gone
  and his place never sees him again.

The love of the Lord is everlasting upon those who hold him in fear.

But the love of the Lord is everlasting
  upon those who hold him in fear;
his justice reaches out to children’s children
  when they keep his covenant in truth.

The love of the Lord is everlasting upon those who hold him in fear.

Gospel Acclamation Mt11:25
Alleluia, alleluia!
Blessed are you, Father,
Lord of heaven and earth,
for revealing the mysteries of the kingdom
to mere children.
Alleluia!

March 1st : First ReadingTheir ways cannot be hidden from his sightA reading from the book of Ecclesiasticus 17:1-13

March 1st : First Reading

Their ways cannot be hidden from his sight

A reading from the book of Ecclesiasticus 17:1-13 
The Lord fashioned man from the earth,
  to consign him back to it.
He gave them so many days’ determined time,
  he gave them authority over everything on earth.
He clothed them with strength like his own,
  and made them in his own image.
He filled all living things with dread of man,
  making him master over beasts and birds.
He shaped for them a mouth and tongue, eyes and ears,
  and gave them a heart to think with.
He filled them with knowledge and understanding,
  and revealed to them good and evil.
He put his own light in their hearts
  to show them the magnificence of his works.
They will praise his holy name,
  as they tell of his magnificent works.
He set knowledge before them,
  he endowed them with the law of life.
Their eyes saw his glorious majesty,
  and their ears heard the glory of his voice.
He said to them, ‘Beware of all wrong-doing’;
  he gave each a commandment concerning his neighbour.
Their ways are always under his eye,
  they cannot be hidden from his sight.

The Word of the Lord.

வியாழன், 27 பிப்ரவரி, 2025

February 28th : Gospel What God has united, man must not divide A Reading from the Holy Gospel according to St.Mark 10:1-12

 February 28th : Gospel 

What God has united, man must not divide

A Reading from the Holy Gospel according to St.Mark 10:1-12 


Jesus came to the district of Judaea and the far side of the Jordan. And again crowds gathered round him, and again he taught them, as his custom was. Some Pharisees approached him and asked, ‘Is it against the law for a man to divorce his wife?’ They were testing him. He answered them, ‘What did Moses command you?’ ‘Moses allowed us’ they said ‘to draw up a writ of dismissal and so to divorce.’ Then Jesus said to them, ‘It was because you were so unteachable that he wrote this commandment for you. But from the beginning of creation God made them male and female. This is why a man must leave father and mother, and the two become one body. They are no longer two, therefore, but one body. So then, what God has united, man must not divide.’ Back in the house the disciples questioned him again about this, and he said to them, ‘The man who divorces his wife and marries another is guilty of adultery against her. And if a woman divorces her husband and marries another she is guilty of adultery too.’

The Gospel of the Lord.

February 28th : Responsorial Psalm Psalm 118(119):12,16,18,27,34-35

 February 28th : Responsorial Psalm

Psalm 118(119):12,16,18,27,34-35 


Guide me, Lord, in the path of your commands.

Blessed are you, O Lord;

  teach me your statutes.

I take delight in your statutes;

  I will not forget your word.

Guide me, Lord, in the path of your commands.

Open my eyes that I may see

  the wonders of your law.

Make me grasp the way of your precepts

  and I will muse on your wonders.

Guide me, Lord, in the path of your commands.

Train me to observe your law,

  to keep it with my heart.

Guide me in the path of your commands;

  for there is my delight.

Guide me, Lord, in the path of your commands.

Gospel Acclamation Ps110:7,8

Alleluia, alleluia!

Your precepts, O Lord, are all of them sure;

they stand firm for ever and ever.

Alleluia!

February 28th : First Reading A faithful friend is a sure shelter A reading from the book of Ecclesiasticus 6: 5-17

 February 28th : First Reading

A faithful friend is a sure shelter

A reading from the book of Ecclesiasticus 6: 5-17 


A kindly turn of speech multiplies a man’s friends,  and a courteous way of speaking invites many a friendly reply.

Let your acquaintances be many,  but your advisers one in a thousand. If you want to make a friend, take him on trial,

  and be in no hurry to trust him; for one kind of friend is only so when it suits him   but will not stand by you in your day of trouble. Another kind of friend will fall out with you  and to your dismay make the quarrel public, and a third kind of friend will share your table,  but not stand by you in your day of trouble:

when you are doing well he will be your second self,

  ordering your servants about; but if ever you are brought low he will turn against you  and will hide himself from you. Keep well clear of your enemies,  and be wary of your friends. A faithful friend is a sure shelter,  whoever finds one has found a rare treasure. A faithful friend is something beyond price,  there is no measuring his worth. A faithful friend is the elixir of life,  and those who fear the Lord will find one. Whoever fears the Lord makes true friends,  for as a man is, so is his friend.

The word of the Lord.

பிப்ரவரி 28 : நற்செய்தி வாசகம் கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

 பிப்ரவரி  28 : நற்செய்தி வாசகம்

கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12


அக்காலத்தில் இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.

பரிசேயர் அவரை அணுகி, ``கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?'' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' என்று கேட்டார்.

அவர்கள், ``மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்'' என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.

படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார்.

பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.

இயேசு அவர்களை நோக்கி, ``தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்'' என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.  

பிப்ரவரி 28 : பதிலுரைப் பாடல் திபா 119: 12,16. 18, 27. 34,35 (பல்லவி: 35ய) பல்லவி: உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.

 பிப்ரவரி 28  : பதிலுரைப் பாடல்

திபா 119: 12,16. 18, 27. 34,35 (பல்லவி: 35ய)


பல்லவி: உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.

12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். 16 உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன். பல்லவி

18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். 35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். பல்லவி

நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி

யோவா 17:17 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை; உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

பிப்ரவரி 28 : முதல் வாசகம் நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை. சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 5-17

 பிப்ரவரி 28 : முதல் வாசகம்

நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 5-17


இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்; பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும். அனைவரோடும் நட்புடன் பழகு; ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.

ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே. தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.

பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள்.

உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.

நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்; உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்; நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்; உன் முகத்தில் விழிக்க மாட்டார்கள்.

உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்; உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்.

நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை; அவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை.

நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.

ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர். அவர்களை அடுத்தவர்களும் அவர்களைப் போலவே இருப்பார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.