இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 6 மார்ச், 2025

March 7th : First reading The sort of fast that pleases me A reading from the book of Isaiah 58:1-9

 March 7th :  First reading 

The sort of fast that pleases me

A reading from the book of Isaiah 58:1-9 


Thus says the Lord:

Shout for all you are worth,

  raise your voice like a trumpet.

Proclaim their faults to my people,

  their sins to the House of Jacob.

They seek me day after day,

  they long to know my ways,

like a nation that wants to act with integrity

  and not ignore the law of its God.

They ask me for laws that are just,

  they long for God to draw near:

‘Why should we fast if you never see it,

  why do penance if you never notice?’

Look, you do business on your fast-days,

  you oppress all your workmen;

look, you quarrel and squabble when you fast

  and strike the poor man with your fist.

Fasting like yours today

  will never make your voice heard on high.

Is that the sort of fast that pleases me,

  a truly penitential day for men?

Hanging your head like a reed,

  lying down on sackcloth and ashes?

Is that what you call fasting,

  a day acceptable to the Lord?

Is not this the sort of fast that pleases me

 – it is the Lord who speaks –

to break unjust fetters and

  undo the thongs of the yoke,

to let the oppressed go free,

  and break every yoke,

to share your bread with the hungry,

  and shelter the homeless poor,

to clothe the man you see to be naked

  and not turn from your own kin?

Then will your light shine like the dawn

  and your wound be quickly healed over.

Your integrity will go before you

  and the glory of the Lord behind you.

Cry, and the Lord will answer;

  call, and he will say, ‘I am here.’

The Word of the Lord.


மார்ச் 7 : நற்செய்தி வாசகம் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15

 மார்ச் 7  :  நற்செய்தி வாசகம்

மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15


அக்காலத்தில்

யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 7 : பதிலுரைப் பாடல் திபா 51: 1-2. 3-4a. 16-17 (பல்லவி: 17b) பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.

 மார்ச் 7 :  பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 3-4a. 16-17 (பல்லவி: 17b)

பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.


1

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2

என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

3

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.

4a

உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி

16

ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.

17

கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றம் உணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

ஆமோ 5: 14

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.


மார்ச் 7 : முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a

 மார்ச் 7 :  முதல் வாசகம்

உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு!

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a


இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்:

பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவதுபோல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு. அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்; என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்; நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்; கடவுளை அணுகிவர விழைகின்றார்கள். ‘நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்?’ என்கின்றார்கள்.

நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள். இதோ, வழக்காடவும், வீண் சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது.

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது? ஒருவன் நாணலைப்போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

புதன், 5 மார்ச், 2025

மார்ச் 6 : நற்செய்தி வாசகம் என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25

 மார்ச் 6 :  நற்செய்தி வாசகம்

என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கி, “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.

பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 6 : பதிலுரைப் பாடல் திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: திபா40:4a) பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர். 1

 மார்ச் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: திபா40:4a)

பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.


1

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2

ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3

அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

4

ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.

6

நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 17

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர்.

மார்ச் 6 : முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20

 மார்ச் 6 :  முதல் வாசகம்

இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20


மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.

ஆனால் உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்து போவாய். நீ உரிமையாக்கிக்கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.

உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும்பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக்கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 6th : Gospel Whoever loses his life for my sake will save it A reading from the Holy Gospel according to St.Luke 9: 22-25.

 March 6th : Gospel 

Whoever loses his life for my sake will save it

A reading from the Holy Gospel according to St.Luke 9: 22-25.


Jesus said to his disciples:

  ‘The Son of Man is destined to suffer grievously, to be rejected by the elders and chief priests and scribes and to be put to death, and to be raised up on the third day.’

  Then to all he said:

  ‘If anyone wants to be a follower of mine, let him renounce himself and take up his cross every day and follow me. For anyone who wants to save his life will lose it; but anyone who loses his life for my sake, that man will save it. What gain, then, is it for a man to have won the whole world and to have lost or ruined his very self?’

The Word of the Lord.

March 6th : Responsorial Psalm Psalm 1:1-4,6

 March 6th :  Responsorial Psalm 

Psalm 1:1-4,6 


Happy the man who has placed his trust in the Lord.

Happy indeed is the man

  who follows not the counsel of the wicked;

nor lingers in the way of sinners

  nor sits in the company of scorners,

but whose delight is the law of the Lord

  and who ponders his law day and night.

Happy the man who has placed his trust in the Lord.

He is like a tree that is planted

  beside the flowing waters,

that yields its fruit in due season

  and whose leaves shall never fade;

  and all that he does shall prosper.

Happy the man who has placed his trust in the Lord.

Not so are the wicked, not so!

For they like winnowed chaff

  shall be driven away by the wind:

for the Lord guards the way of the just

  but the way of the wicked leads to doom.

Happy the man who has placed his trust in the Lord.

Gospel Acclamation Ps50:12,14

Praise and honour to you, Lord Jesus!

A pure heart create for me, O God,

and give me again the joy of your help.

Praise and honour to you, Lord Jesus!

March 6th : First reading I set before you today life or death, blessing or curse. A reading from the book of Deuteronomy 30:15-20

 March 6th :  First reading

I set before you today life or death, blessing or curse.

A reading from the book of Deuteronomy 30:15-20 


Moses said to the people: ‘See, today I set before you life and prosperity, death and disaster. If you obey the commandments of the Lord your God that I enjoin on you today, if you love the Lord your God and follow his ways, if you keep his commandments, his laws, his customs, you will live and increase, and the Lord your God will bless you in the land which you are entering to make your own. But if your heart strays, if you refuse to listen, if you let yourself be drawn into worshipping other gods and serving them, I tell you today, you will most certainly perish; you will not live long in the land you are crossing the Jordan to enter and possess. I call heaven and earth to witness against you today: I set before you life or death, blessing or curse. Choose life, then, so that you and your descendants may live, in the love of the Lord your God, obeying his voice, clinging to him; for in this your life consists, and on this depends your long stay in the land which the Lord swore to your fathers Abraham, Isaac and Jacob he would give them.’

The Word of the Lord.