இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 11 மார்ச், 2025

மார்ச் 12 : முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

 மார்ச்  12  :  முதல் வாசகம்

நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள்.

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10


இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்தகுரலில், “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக்கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து, அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். “இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.”

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

திங்கள், 10 மார்ச், 2025

மார்ச் 11 : நற்செய்தி வாசகம் நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

 மார்ச் 11 : நற்செய்தி வாசகம்

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.”
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 11 : பதிலுரைப் பாடல் திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18 (பல்லவி: 17b) பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.

மார்ச் 11 : பதிலுரைப் பாடல்

திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18 (பல்லவி: 17b)


பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.

3

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4

துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

15

ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.

16

ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். - பல்லவி

17

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.

18

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

மார்ச் 11 : முதல் வாசகம் என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

 மார்ச் 11 :  முதல் வாசகம்

என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11


ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 11th : Gospel How to pray A reading from the Holy Gospel according to St.Matthew 6: 7-15

 March 11th :  Gospel 

How to pray

A reading from the Holy Gospel according to St.Matthew 6: 7-15 


Jesus said to his disciples: ‘In your prayers do not babble as the pagans do, for they think that by using many words they will make themselves heard. Do not be like them; your Father knows what you need before you ask him. So you should pray like this:

‘Our Father in heaven,

may your name be held holy,

your kingdom come,

your will be done,

on earth as in heaven.

Give us today our daily bread.

And forgive us our debts, as we have forgiven those who are in debt to us.

And do not put us to the test,

but save us from the evil one.

‘Yes, if you forgive others their failings, your heavenly Father will forgive you yours; but if you do not forgive others, your Father will not forgive your failings either.’

The Word of the Lord.


March 11th : Responsorial Psalm Psalm 33(34):4-7,16-19

 March 11th :  Responsorial Psalm

Psalm 33(34):4-7,16-19 


The Lord rescues the just in all their distress.

Glorify the Lord with me.

  Together let us praise his name.

I sought the Lord and he answered me;

  from all my terrors he set me free.

The Lord rescues the just in all their distress.

Look towards him and be radiant;

  let your faces not be abashed.

This poor man called, the Lord heard him

  and rescued him from all his distress.

The Lord rescues the just in all their distress.

The Lord turns his face against the wicked

  to destroy their remembrance from the earth.

The Lord turns his eyes to the just

  and his ears to their appeal.

The Lord rescues the just in all their distress.

They call and the Lord hears

  and rescues them in all their distress.

The Lord is close to the broken-hearted;

  those whose spirit is crushed he will save.

The Lord rescues the just in all their distress.

Gospel Acclamation Mt4:4

Praise and honour to you, Lord Jesus!

Man does not live on bread alone,

but on every word that comes from the mouth of God.

Praise and honour to you, Lord Jesus!

March 11th : First reading The word that goes out from my mouth does not return to me empty A reading from the book of Isaiah 55: 10-11

 March 11th :  First reading

The word that goes out from my mouth does not return to me empty

A reading from the book of Isaiah 55: 10-11 


Thus says the Lord: ‘As the rain and the snow come down from the heavens and do not return without watering the earth, making it yield and giving growth to provide seed for the sower and bread for the eating, so the word that goes from my mouth does not return to me empty, without carrying out my will and succeeding in what it was sent to do.’

The Word of the Lord.

ஞாயிறு, 9 மார்ச், 2025

March 10th : Gospel I was naked and you clothed me; sick, and you visited meA reading from the Holy Gospel according to St.Matthew 25: 31-46

March 10th :  Gospel 

I was naked and you clothed me; sick, and you visited me

A reading from the Holy Gospel according to St.Matthew 25: 31-46
Jesus said to his disciples: ‘When the Son of Man comes in his glory, escorted by all the angels, then he will take his seat on his throne of glory. All the nations will be assembled before him and he will separate men one from another as the shepherd separates sheep from goats. He will place the sheep on his right hand and the goats on his left.
  ‘Then the King will say to those on his right hand, “Come, you whom my Father has blessed, take for your heritage the kingdom prepared for you since the foundation of the world. For I was hungry and you gave me food; I was thirsty and you gave me drink; I was a stranger and you made me welcome; naked and you clothed me, sick and you visited me, in prison and you came to see me.” Then the virtuous will say to him in reply, “Lord, when did we see you hungry and feed you; or thirsty and give you drink? When did we see you a stranger and make you welcome; naked and clothe you; sick or in prison and go to see you?” And the King will answer, “I tell you solemnly, in so far as you did this to one of the least of these brothers of mine, you did it to me.”
  ‘Next he will say to those on his left hand, “Go away from me, with your curse upon you, to the eternal fire prepared for the devil and his angels. For I was hungry and you never gave me food; I was thirsty and you never gave me anything to drink; I was a stranger and you never made me welcome, naked and you never clothed me, sick and in prison and you never visited me.” Then it will be their turn to ask, “Lord, when did we see you hungry or thirsty, a stranger or naked, sick or in prison, and did not come to your help?” Then he will answer, “I tell you solemnly, in so far as you neglected to do this to one of the least of these, you neglected to do it to me.”
  ‘And they will go away to eternal punishment, and the virtuous to eternal life.’

The Word of the Lord.
March 10th :  Responsorial Psalm

Psalm 18(19):8-10,15 

Your words are spirit, Lord, and they are life.
The law of the Lord is perfect,
  it revives the soul.
The rule of the Lord is to be trusted,
  it gives wisdom to the simple.

Your words are spirit, Lord, and they are life.

The precepts of the Lord are right,
  they gladden the heart.
The command of the Lord is clear,
  it gives light to the eyes.

Your words are spirit, Lord, and they are life.

The fear of the Lord is holy,
  abiding for ever.
The decrees of the Lord are truth
  and all of them just.

Your words are spirit, Lord, and they are life.

May the spoken words of my mouth,
  the thoughts of my heart,
win favour in your sight, O Lord,
  my rescuer, my rock!

Your words are spirit, Lord, and they are life.

Gospel Acclamation Ezk18:31

Praise to you, O Christ, king of eternal glory!
Shake off all your sins – it is the Lord who speaks –
and make yourselves a new heart and a new spirit.
Praise to you, O Christ, king of eternal glory!

March 10th: First readingOnly pass judgement on your neighbour according to justiceA reading from the book of Leviticus 19: 1-2,11-18

March 10th:  First reading

Only pass judgement on your neighbour according to justice

A reading from the book of Leviticus 19: 1-2,11-18 
The Lord spoke to Moses; he said: ‘Speak to the whole community of the sons of Israel and say to them:
  ‘“Be holy, for I, the Lord your God, am holy.
  ‘“You must not steal nor deal deceitfully or fraudulently with your neighbour. You must not swear falsely by my name, profaning the name of your God. I am the Lord. You must not exploit or rob your neighbour. You must not keep back the labourer’s wage until next morning. You must not curse the dumb, nor put an obstacle in the blind man’s way, but you must fear your God. I am the Lord.
  ‘“You must not be guilty of unjust verdicts. You must neither be partial to the little man nor overawed by the great; you must pass judgement on your neighbour according to justice. You must not slander your own people, and you must not jeopardise your neighbour’s life. I am the Lord. You must not bear hatred for your brother in your heart. You must openly tell him, your neighbour, of his offence; this way you will not take a sin upon yourself. You must not exact vengeance, nor must you bear a grudge against the children of your people. You must love your neighbour as yourself. I am the Lord.”’

The Word of the Lord.