இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 19 ஏப்ரல், 2025

ஏப்ரல் 19 : பாஸ்கா திருவிழிப்புமூன்றாம் வாசகம்இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 15- 15: 1

ஏப்ரல் 19  :  பாஸ்கா திருவிழிப்பு

மூன்றாம் வாசகம்

இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 15- 15: 1
அந்நாள்களில்

ஆண்டவர் மோசேயை நோக்கி, “ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்” என்றார்.

இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் அவர்களுக்குப் பின் வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்றுகொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.

மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க, இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல் வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், “இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்றுவிடுவோம். ஏனெனில், ஆண்டவர் தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்” என்றனர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள், குதிரை வீரர் அனைவர் மேலும் திரும்பி வரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு” என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பி வந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரை வீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன்கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.

இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலை அளித்தார்.

கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:

பதிலுரைப் பாடல்

விப 15: 1-2. 3-4. 5-6. 17-18 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில் மாட்சியுடன் வெற்றி பெற்றார்.

1
ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
2
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன். - பல்லவி

3
போரில் வல்லவர் ஆண்டவர்; ‘ஆண்டவர்’ என்பது அவர் பெயராம்.
4
பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். - பல்லவி

5
ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.
6
ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது. - பல்லவி

17
ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.
18
ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார். - பல்லவி

ஏப்ரல் 19 : பாஸ்கா திருவிழிப்புஇரண்டாம் வாசகம்நம் தந்தை ஆபிரகாமின் பலி.தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-18

ஏப்ரல் 19  :  பாஸ்கா திருவிழிப்பு

இரண்டாம் வாசகம்

நம் தந்தை ஆபிரகாமின் பலி.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-18
கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்” என்றார்.

அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக்கொண்டு, எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டியபின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார்.

பின் ஆபிரகாம் எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின்மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக்கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, ‘அப்பா!’ என, அவர், ‘என்ன? மகனே!’ என்று கேட்டார். அதற்கு அவன், “இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், “எரிபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே” என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.

ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின்மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையில் எடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று “ஆபிரகாம்! ஆபிரகாம்!” என்று கூப்பிட, அவர் “இதோ! அடியேன்” என்றார். அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்து தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு ‘யாவேயிரே’ என்று பெயரிட்டார். ஆதலால்தான் ‘மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்’ என்று இன்றுவரை வழங்கி வருகிறது.

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழி மரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

9
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி

11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி

ஏப்ரல் 19 : பாஸ்கா திருவிழிப்புமுதல் வாசகம்கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1- 2: 2

ஏப்ரல் 19 :  பாஸ்கா திருவிழிப்பு

முதல் வாசகம்

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1- 2: 2
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு ‘விண்ணுலகம்’ என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு ‘நிலம்’ என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் ‘கடல்’ என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின் படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப் பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளி தர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப் பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்று விப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1-2a. 5-6. 10,12. 13-14. 24,35c (பல்லவி: 30)

பல்லவி: ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2a
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். - பல்லவி

5
நீவிர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது.
6
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. - பல்லவி

10
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்.
12
நீரூற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன. - பல்லவி

13
உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.
14
கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றீர். - பல்லவி

24
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
35c
என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! - பல்லவி

EASTER VIGILApril 19th : Gospel Why look among the dead for someone who is alive?A reading from the Holy Gospel according to St.Luke 24: 1-12

EASTER VIGIL

April 19th :   Gospel 

Why look among the dead for someone who is alive?

A reading from the Holy Gospel according to St.Luke 24: 1-12 

On the first day of the week, at the first sign of dawn, they went to the tomb with the spices they had prepared. They found that the stone had been rolled away from the tomb, but on entering discovered that the body of the Lord Jesus was not there. As they stood there not knowing what to think, two men in brilliant clothes suddenly appeared at their side. Terrified, the women lowered their eyes. But the two men said to them, ‘Why look among the dead for someone who is alive? He is not here; he has risen. Remember what he told you when he was still in Galilee: that the Son of Man had to be handed over into the power of sinful men and be crucified, and rise again on the third day?’ And they remembered his words.
  When the women returned from the tomb they told all this to the Eleven and to all the others. The women were Mary of Magdala, Joanna, and Mary the mother of James. The other women with them also told the apostles, but this story of theirs seemed pure nonsense, and they did not believe them.
  Peter, however, went running to the tomb. He bent down and saw the binding cloths but nothing else; he then went back home, amazed at what had happened.

The Word of the Lord.

April 19th : Epistle Christ, having been raised from the dead, will never die againRomans 6:3-11

April 19th : Epistle 

Christ, having been raised from the dead, will never die again

Romans 6:3-11 

When we were baptised in Christ Jesus we were baptised in his death; in other words, when we were baptised we went into the tomb with him and joined him in death, so that as Christ was raised from the dead by the Father’s glory, we too might live a new life.
  If in union with Christ we have imitated his death, we shall also imitate him in his resurrection. We must realise that our former selves have been crucified with him to destroy this sinful body and to free us from the slavery of sin. When a Christian dies, of course, he has finished with sin.
  But we believe that having died with Christ we shall return to life with him: Christ, as we know, having been raised from the dead will never die again. Death has no power over him any more. When he died, he died, once for all, to sin, so his life now is life with God; and in that way, you too must consider yourselves to be dead to sin but alive for God in Christ Jesus.

Psalm

Psalm 117(118):1-2,16-17,22-23 

Alleluia, alleluia, alleluia!

Give thanks to the Lord for he is good,
  for his love has no end.
Let the sons of Israel say:
  ‘His love has no end.’
Alleluia, alleluia, alleluia!
The Lord’s right hand has triumphed;
  his right hand raised me up.
I shall not die, I shall live
  and recount his deeds.
Alleluia, alleluia, alleluia!
The stone which the builders rejected
  has become the corner stone.
This is the work of the Lord,
  a marvel in our eyes.
Alleluia, alleluia, alleluia!

April 19th : Night VigilSeventh readingI shall pour clean water over you and I shall give you a new heartA reading from the book of the Prophet Ezekiel 36:16-17,18-28

April 19th :  Night Vigil

Seventh reading

I shall pour clean water over you and I shall give you a new heart

A reading from the book of the Prophet Ezekiel 36:16-17,18-28 

The word of the Lord was addressed to me as follows: ‘Son of man, the members of the House of Israel used to live in their own land, but they defiled it by their conduct and actions. I then discharged my fury at them because of the blood they shed in their land and the idols with which they defiled it. I scattered them among the nations and dispersed them in foreign countries. I sentenced them as their conduct and actions deserved. And now they have profaned my holy name among the nations where they have gone, so that people say of them, “These are the people of the Lord; they have been exiled from his land.”
  ‘But I have been concerned about my holy name, which the House of Israel has profaned among the nations where they have gone.
  ‘And so, say to the House of Israel, “The Lord says this: I am not doing this for your sake, House of Israel, but for the sake of my holy name, which you have profaned among the nations where you have gone. I mean to display the holiness of my great name, which has been profaned among the nations, which you have profaned among them. And the nations will learn that I am the Lord – it is the Lord who speaks – when I display my holiness for your sake before their eyes. Then I am going to take you from among the nations and gather you together from all the foreign countries, and bring you home to your own land.
  ‘“I shall pour clean water over you and you will be cleansed; I shall cleanse you of all your defilement and all your idols. I shall give you a new heart, and put a new spirit in you; I shall remove the heart of stone from your bodies and give you a heart of flesh instead. I shall put my spirit in you, and make you keep my laws and sincerely respect my observances. You will live in the land which I gave your ancestors. You
 shall be my people and I will be your God.”’

The Word of the Lord.

Psalm
Psalm 41(42):2-3,5,42:3-4 ©
Like the deer that yearns for running streams, so my soul is yearning for you, my God.
My soul is thirsting for God,
  the God of my life;
when can I enter and see
  the face of God?
Like the deer that yearns for running streams, so my soul is yearning for you, my God.
These things will I remember
  as I pour out my soul:
how I would lead the rejoicing crowd
  into the house of God,
amid cries of gladness and thanksgiving,
  the throng wild with joy.
Like the deer that yearns for running streams, so my soul is yearning for you, my God.
O send forth your light and your truth;
  let these be my guide.
Let them bring me to your holy mountain,
  to the place where you dwell.
Like the deer that yearns for running streams, so my soul is yearning for you, my God.
And I will come to the altar of God,
  the God of my joy.
My redeemer, I will thank you on the harp,
  O God, my God.
Like the deer that yearns for running streams, so my soul is yearning for you, my God.

April 19th : Night VigilSixth readingIn the radiance of the Lord, make your way to lightA reading from the book of Baruch 3:9-15,32-4:4

April 19th :  Night Vigil

Sixth reading

In the radiance of the Lord, make your way to light

A reading from the book of Baruch 3:9-15,32-4:4 

Listen, Israel, to commands that bring life;
hear, and learn what knowledge means.
Why, Israel, why are you in the country of your enemies,
growing older and older in an alien land,
sharing defilement with the dead,
reckoned with those who go to Sheol?
Because you have forsaken the fountain of wisdom.
Had you walked in the way of God,
you would have lived in peace for ever.
Learn where knowledge is, where strength,
where understanding, and so learn
where length of days is, where life,
where the light of the eyes and where peace.
But who has found out where she lives,
who has entered her treasure house?
But the One who knows all knows her,
he has grasped her with his own intellect,
he has set the earth firm for ever
and filled it with four-footed beasts.
He sends the light – and it goes,
he recalls it – and trembling it obeys;
the stars shine joyfully at their set times:
when he calls them, they answer, ‘Here we are’;
they gladly shine for their creator.
It is he who is our God,
no other can compare with him.
He has grasped the whole way of knowledge,
and confided it to his servant Jacob,
to Israel his well-beloved;
so causing her to appear on earth
and move among men.
This is the book of the commandments of God,
the Law that stands for ever;
those who keep her live,
those who desert her die.
Turn back, Jacob, seize her,
in her radiance make your way to light:
do not yield your glory to another,
your privilege to a people not your own.
Israel, blessed are we:
what pleases God has been revealed to us.

The Word of the Lord.

Psalm
Psalm 18(19):8-11 

You have the message of eternal life, O Lord.
The law of the Lord is perfect,
  it revives the soul.
The rule of the Lord is to be trusted,
  it gives wisdom to the simple.
You have the message of eternal life, O Lord?.
The precepts of the Lord are right,
  they gladden the heart.
The command of the Lord is clear,
  it gives light to the eyes.
You have the message of eternal life, O Lord.
The fear of the Lord is holy,
  abiding for ever.
The decrees of the Lord are truth
  and all of them just.
You have the message of eternal life, O Lord.
They are more to be desired than gold,
  than the purest of gold
and sweeter are they than honey,
  than honey from the comb.
You have the message of eternal life, O Lord.

April 19th : Night VigilFifth reading Come to me and your soul will live, and I will make an everlasting covenant with youA Reading from the Book of the Prophet Isaiah 55:1-11

April 19th :  Night Vigil

Fifth reading 

Come to me and your soul will live, and I will make an everlasting covenant with you

A Reading from the Book of the Prophet Isaiah 55:1-11 

Thus says the Lord:
Oh, come to the water all you who are thirsty;
though you have no money, come!
Buy corn without money, and eat,
and, at no cost, wine and milk.
Why spend money on what is not bread,
your wages on what fails to satisfy?
Listen, listen to me, and you will have good things to eat
and rich food to enjoy.
Pay attention, come to me;
listen, and your soul will live.
With you I will make an everlasting covenant
out of the favours promised to David.
See, I have made of you a witness to the peoples,
a leader and a master of the nations.
See, you will summon a nation you never knew,
those unknown will come hurrying to you,
for the sake of the Lord your God,
of the Holy One of Israel who will glorify you.
Seek the Lord while he is still to be found,
call to him while he is still near.
Let the wicked man abandon his way,
the evil man his thoughts.
Let him turn back to the Lord who will take pity on him,
to our God who is rich in forgiving;
for my thoughts are not your thoughts,
my ways not your ways – it is the Lord who speaks.
Yes, the heavens are as high above earth
as my ways are above your ways,
my thoughts above your thoughts.
Yes, as the rain and the snow come down from the heavens and do not return without watering the earth, making it yield and giving growth to provide seed for the sower and bread for the eating, so the word that goes from my mouth does not return to me empty, without carrying out my will and succeeding in what it was sent to do.

Canticle Isaiah 12 

The rejoicing of a redeemed people
With joy you will draw water from the wells of salvation.
Truly, God is my salvation,
  I trust, I shall not fear.
For the Lord is my strength, my song,
  he became my saviour.
With joy you will draw water
  from the wells of salvation.
With joy you will draw water from the wells of salvation.
Give thanks to the Lord, give praise to his name!
  Make his mighty deeds known to the peoples!
  Declare the greatness of his name.
With joy you will draw water from the wells of salvation.
Sing a psalm to the Lord
  for he has done glorious deeds;
  make them known to all the earth!
People of Zion, sing and shout for joy,
  for great in your midst is the Holy One of Israel.
With joy you will draw water from the wells of salvation.

April 19th : Night VigilFourth reading With everlasting love the Lord your redeemer has taken pity on youA Reading from the Book of the Prophet Isaiah 54:5-14

April 19th :  Night Vigil

Fourth reading 

With everlasting love the Lord your redeemer has taken pity on you

A Reading from the Book of the Prophet Isaiah 54:5-14 

Thus says the Lord:
Now your creator will be your husband,
his name, the Lord of Hosts;
your redeemer will be the Holy One of Israel,
he is called the God of the whole earth.
Yes, like a forsaken wife, distressed in spirit,
the Lord calls you back.
Does a man cast off the wife of his youth?
says your God.
I did forsake you for a brief moment,
but with great love will I take you back.
In excess of anger, for a moment
I hid my face from you.
But with everlasting love I have taken pity on you,
says the Lord, your redeemer.
I am now as I was in the days of Noah
when I swore that Noah’s waters
should never flood the world again.
So now I swear concerning my anger with you
and the threats I made against you;
for the mountains may depart,
the hills be shaken,
but my love for you will never leave you
and my covenant of peace with you will never be shaken,
says the Lord who takes pity on you.
Unhappy creature, storm-tossed, disconsolate,
see, I will set your stones on carbuncles
and your foundations on sapphires.
I will make rubies your battlements,
your gates crystal,
and your entire wall precious stones.
Your sons will all be taught by the Lord.
The prosperity of your sons will be great.
You will be founded on integrity;
remote from oppression, you will have nothing to fear;
remote from terror, it will not approach you.

The Word of the Lord.

Psalm

Psalm 29(30):2,4-6,11-13 

I will praise you, Lord, you have rescued me.
I will praise you, Lord, you have rescued me
  and have not let my enemies rejoice over me.
O Lord, you have raised my soul from the dead,
  restored me to life from those who sink into the grave.
I will praise you, Lord, you have rescued me.
Sing psalms to the Lord, you who love him,
  give thanks to his holy name.
His anger lasts a moment; his favour all through life.
  At night there are tears, but joy comes with dawn.
I will praise you, Lord, you have rescued me.
The Lord listened and had pity.
  The Lord came to my help.
For me you have changed my mourning into dancing:
  O Lord my God, I will thank you for ever.
I will praise you, Lord, you have rescued me.

April 19th : Night vigilThird ReadingThe sons of Israel went on dry ground right into the seaA Reading from the Book of Exodus 14:15-15:1

April 19th :  Night vigil

Third Reading

The sons of Israel went on dry ground right into the sea

A Reading from the Book of Exodus 14:15-15:1 

The Lord said to Moses, ‘Why do you cry to me so? Tell the sons of Israel to march on. For yourself, raise your staff and stretch out your hand over the sea and part it for the sons of Israel to walk through the sea on dry ground. I for my part will make the heart of the Egyptians so stubborn that they will follow them. So shall I win myself glory at the expense of Pharaoh, of all his army, his chariots, his horsemen. And when I have won glory for myself, at the expense of Pharaoh and his chariots and his army, the Egyptians will learn that I am the Lord.’
  Then the angel of God, who marched at the front of the army of Israel, changed station and moved to their rear. The pillar of cloud changed station from the front to the rear of them, and remained there. It came between the camp of the Egyptians and the camp of Israel. The cloud was dark, and the night passed without the armies drawing any closer the whole night long.
  Moses stretched out his hand over the sea. The Lord drove back the sea with a strong easterly wind all night, and he made dry land of the sea. The waters parted and the sons of Israel went on dry ground right into the sea, walls of water to right and to left of them. The Egyptians gave chase: after them they went, right into the sea, all Pharaoh’s horses, his chariots, and his horsemen.
  In the morning watch, the Lord looked down on the army of the Egyptians from the pillar of fire and of cloud, and threw the army into confusion. He so clogged their chariot wheels that they could scarcely make headway. ‘Let us flee from the Israelites,’ the Egyptians cried. ‘The Lord is fighting for them against the Egyptians!’
  ‘Stretch out your hand over the sea,’ the Lord said to Moses, ‘that the waters may flow back on the Egyptians and their chariots and their horsemen.’
  Moses stretched out his hand over the sea and, as day broke, the sea returned to its bed. The fleeing Egyptians marched right into it, and the Lord overthrew the Egyptians in the very middle of the sea. The returning waters overwhelmed the chariots and the horsemen of Pharaoh’s whole army, which had followed the Israelites into the sea; not a single one of them was left. But the sons of Israel had marched through the sea on dry ground, walls of water to right and to left of them.
  That day, the Lord rescued Israel from the Egyptians, and Israel saw the Egyptians lying dead on the shore. Israel witnessed the great act that the Lord had performed against the Egyptians, and the people venerated the Lord; they put their faith in the Lord and in Moses, his servant.
  It was then that Moses and the sons of Israel sang this song in honour of the Lord:

Canticle Exodus 15 

Hymn of victory after crossing the Red Sea

I will sing to the Lord, glorious his triumph!
I will sing to the Lord, glorious his triumph!
  Horse and rider he has thrown into the sea!
The Lord is my strength, my song, my salvation.
  This is my God and I extol him,
  my father’s God and I give him praise.
I will sing to the Lord, glorious his triumph!
The Lord is a warrior! ‘The Lord’ is his name.
  The chariots of Pharaoh he hurled into the sea,
the flower of his army is drowned in the sea.
  The deeps hide them; they sank like a stone.
I will sing to the Lord, glorious his triumph!
Your right hand, Lord, glorious in its power,
  your right hand, Lord, has shattered the enemy.
  In the greatness of your glory you crushed the foe.
I will sing to the Lord, glorious his triumph!
You will lead your people and plant them on your mountain,
  the place, O Lord, where you have made your home,
the sanctuary, Lord, which your hands have made.
  The Lord will reign for ever and ever.
I will sing to the Lord, glorious his triumph!