இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 2 மே, 2025

May 3rd : Responsorial PsalmPsalm 18(19):2-5

May 3rd  :  Responsorial Psalm

Psalm 18(19):2-5 

Their word goes forth through all the earth.
or Alleluia!

The heavens proclaim the glory of God,
  and the firmament shows forth the work of his hands.
Day unto day takes up the story
  and night unto night makes known the message.

Their word goes forth through all the earth.
or Alleluia!

No speech, no word, no voice is heard
  yet their span extends through all the earth,
  their words to the utmost bounds of the world.

Their word goes forth through all the earth.
or Alleluia!

Gospel Acclamation Jn14:6,9

Alleluia, alleluia!

I am the Way, the Truth, and the Life, says the Lord.
Philip, to have seen me is to have seen the Father.
Alleluia!

May 3rd : First ReadingThe Lord appeared to James, and then to all the apostlesA Reading from the First Letter of St.Paul to the Corinthians 15 :1-8

May 3rd  :  First Reading

The Lord appeared to James, and then to all the apostles

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 15 :1-8 

Brothers, I want to remind you of the gospel I preached to you, the gospel that you received and in which you are firmly established; because the gospel will save you only if you keep believing exactly what I preached to you – believing anything else will not lead to anything.
  Well then, in the first place, I taught you what I had been taught myself, namely that Christ died for our sins, in accordance with the scriptures; that he was buried; and that he was raised to life on the third day, in accordance with the scriptures; that he appeared first to Cephas and secondly to the Twelve. Next he appeared to more than five hundred of the brothers at the same time, most of whom are still alive, though some have died; then he appeared to James, and then to all the apostles; and last of all he appeared to me too; it was as though I was born when no one expected it.

The Word of the Lord.

வியாழன், 1 மே, 2025

மே 2 : நற்செய்தி வாசகம்அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

மே 2  :  நற்செய்தி வாசகம்

அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

அக்காலத்தில்

இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.

இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார்.

இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

மே 2 : பதிலுரைப் பாடல்திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 4b)பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்.

மே 2  :  பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 4b)

பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்; ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b
அல்லேலூயா, அல்லேலூயா!

 மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

மே 2 : முதல் வாசகம்இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால், மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 34-42

மே 2 :  முதல் வாசகம்

இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால், மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 34-42அந்நாள்களில்

கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. இவற்றுக்குப் பின்பு மக்கள் தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர்.

ஆகவே இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.” அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர்.

பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப் புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 2nd : Gospel The feeding of the five thousandA Reading from the Holy Gospel according to St.John 6: 1-15

May 2nd :  Gospel 

The feeding of the five thousand

A Reading from the Holy Gospel according to St.John 6: 1-15

Jesus went off to the other side of the Sea of Galilee – or of Tiberias – and a large crowd followed him, impressed by the signs he gave by curing the sick. Jesus climbed the hillside, and sat down there with his disciples. It was shortly before the Jewish feast of Passover.
  Looking up, Jesus saw the crowds approaching and said to Philip, ‘Where can we buy some bread for these people to eat?’ He only said this to test Philip; he himself knew exactly what he was going to do. Philip answered, ‘Two hundred denarii would only buy enough to give them a small piece each.’ One of his disciples, Andrew, Simon Peter’s brother, said, ‘There is a small boy here with five barley loaves and two fish; but what is that between so many?’ Jesus said to them, ‘Make the people sit down.’ There was plenty of grass there, and as many as five thousand men sat down. Then Jesus took the loaves, gave thanks, and gave them out to all who were sitting ready; he then did the same with the fish, giving out as much as was wanted. When they had eaten enough he said to the disciples, ‘Pick up the pieces left over, so that nothing gets wasted.’ So they picked them up, and filled twelve hampers with scraps left over from the meal of five barley loaves. The people, seeing this sign that he had given, said, ‘This really is the prophet who is to come into the world.’ Jesus, who could see they were about to come and take him by force and make him king, escaped back to the hills by himself.

The Word of the Lord.

May 2nd : Responsorial PsalmPsalm 26(27):1,4,13-14 There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.orAlleluia!

May 2nd :  Responsorial Psalm

Psalm 26(27):1,4,13-14 

There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.
or
Alleluia!

The Lord is my light and my help;
  whom shall I fear?
The Lord is the stronghold of my life;
  before whom shall I shrink?

There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.
or
Alleluia!

There is one thing I ask of the Lord,
  for this I long,
to live in the house of the Lord,
  all the days of my life,
to savour the sweetness of the Lord,
  to behold his temple.

There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.
or
Alleluia!

I am sure I shall see the Lord’s goodness
  in the land of the living.
Hope in him, hold firm and take heart.
  Hope in the Lord!

There is one thing I ask of the Lord, to live in the house of the Lord.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

We know that Christ is truly risen from the dead:
have mercy on us, triumphant King.
Alleluia!

May 2nd : First Reading They were glad to have had the honour of suffering humiliation for the sake of the nameA Reading from the Acts of Apostles 5:34-42

May 2nd :   First Reading 

They were glad to have had the honour of suffering humiliation for the sake of the name

A Reading from the Acts of Apostles  5:34-42 

One member of the Sanhedrin, a Pharisee called Gamaliel, who was a doctor of the Law and respected by the whole people, stood up and asked to have the apostles taken outside for a time. Then he addressed the Sanhedrin, ‘Men of Israel, be careful how you deal with these people. There was Theudas who became notorious not so long ago. He claimed to be someone important, and he even collected about four hundred followers; but when he was killed, all his followers scattered and that was the end of them. And then there was Judas the Galilean, at the time of the census, who attracted crowds of supporters; but he got killed too, and all his followers dispersed. What I suggest, therefore, is that you leave these men alone and let them go. If this enterprise, this movement of theirs, is of human origin it will break up of its own accord; but if it does in fact come from God you will not only be unable to destroy them, but you might find yourselves fighting against God.’
  His advice was accepted; and they had the apostles called in, gave orders for them to be flogged, warned them not to speak in the name of Jesus and released them. And so they left the presence of the Sanhedrin glad to have had the honour of suffering humiliation for the sake of the name.
  They preached every day both in the Temple and in private houses, and their proclamation of the Good News of Christ Jesus was never interrupted.

The Word of the Lord.

புதன், 30 ஏப்ரல், 2025

மே 1 : நற்செய்தி வாசகம்இவர் தச்சருடைய மகன் அல்லவா?✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

மே 1 :  நற்செய்தி வாசகம்

இவர் தச்சருடைய மகன் அல்லவா?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58
அக்காலத்தில்

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 1 : பதிலுரைப் பாடல்திபா 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17c)பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்!அல்லது: அல்லேலூயா.

மே 1 :  பதிலுரைப் பாடல்

திபா 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17c)

பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்!

அல்லது: அல்லேலூயா.

2
மலைகள் தோன்றும் முன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! - பல்லவி

3
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4
ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

12
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
16
உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 68: 19
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. அல்லேலூயா.