இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 11 ஜூன், 2025

ஜூன் 12 : முதல் வாசகம் கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15- 4: 1, 3-6

 ஜூன் 12 :  முதல் வாசகம்

கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15- 4: 1, 3-6


சகோதரர் சகோதரிகளே,

இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும் போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது. ஆனால் ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும். இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக் குறிக்கிறது. ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு. இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சி பெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே.

கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம். நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது. எனவே அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காண முடிவதில்லை.

நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. “இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 12th : Gospel Anyone who is angry with his brother will answer for it A Reading from the Holy Gospel according to St.Matthew 5: 20-26

 June 12th :  Gospel 

Anyone who is angry with his brother will answer for it

A Reading from the Holy Gospel according to St.Matthew 5: 20-26 

Jesus said to his disciples: ‘If your virtue goes no deeper than that of the scribes and Pharisees, you will never get into the kingdom of heaven.

  ‘You have learnt how it was said to our ancestors: You must not kill; and if anyone does kill he must answer for it before the court. But I say this to you: anyone who is angry with his brother will answer for it before the court; if a man calls his brother “Fool” he will answer for it before the Sanhedrin; and if a man calls him “Renegade” he will answer for it in hell fire. So then, if you are bringing your offering to the altar and there remember that your brother has something against you, leave your offering there before the altar, go and be reconciled with your brother first, and then come back and present your offering. Come to terms with your opponent in good time while you are still on the way to the court with him, or he may hand you over to the judge and the judge to the officer, and you will be thrown into prison. I tell you solemnly, you will not get out till you have paid the last penny.’

The Word of the Lord.


June 12th : Responsorial Psalm Psalm 84(85):9-14

 June 12th :  Responsorial Psalm

Psalm 84(85):9-14 

The glory of the Lord will dwell in our land.

I will hear what the Lord God has to say,

  a voice that speaks of peace.

His help is near for those who fear him

  and his glory will dwell in our land.

The glory of the Lord will dwell in our land.

Mercy and faithfulness have met;

  justice and peace have embraced.

Faithfulness shall spring from the earth

  and justice look down from heaven.

The glory of the Lord will dwell in our land.

The Lord will make us prosper

  and our earth shall yield its fruit.

Justice shall march before him

  and peace shall follow his steps.

The glory of the Lord will dwell in our land.

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!

Accept God’s message for what it really is:

God’s message, and not some human thinking.

Alleluia!


June 12th : First Reading The veil over their eyes will not be removed until they turn to the Lord A Reading from the Second letter of St.Paul to the Corinthians 3: 15-4:1,3-6

 June 12th :  First Reading

The veil over their eyes will not be removed until they turn to the Lord

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 3: 15-4:1,3-6 

Even today, whenever Moses is read, the veil is over their minds. It will not be removed until they turn to the Lord. Now this Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom. And we, with our unveiled faces reflecting like mirrors the brightness of the Lord, all grow brighter and brighter as we are turned into the image that we reflect; this is the work of the Lord who is Spirit.

  Since we have by an act of mercy been entrusted with this work of administration, there is no weakening on our part. If our gospel does not penetrate the veil, then the veil is on those who are not on the way to salvation; the unbelievers whose minds the god of this world has blinded, to stop them seeing the light shed by the Good News of the glory of Christ, who is the image of God. For it is not ourselves that we are preaching, but Christ Jesus as the Lord, and ourselves as your servants for Jesus’ sake. It is the same God that said, ‘Let there be light shining out of darkness’, who has shone in our minds to radiate the light of the knowledge of God’s glory, the glory on the face of Christ.

The Word of the Lord.


செவ்வாய், 10 ஜூன், 2025

ஜூன் 11 : நற்செய்தி வாசகம் அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

 ஜூன் 11 :  நற்செய்தி வாசகம்

அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 11 : பதிலுரைப் பாடல் திபா 99: 5. 6. 7. 8. 9 (பல்லவி: 9c) பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். 5

 ஜூன் 11 :  பதிலுரைப் பாடல்

திபா 99: 5. 6. 7. 8. 9 (பல்லவி: 9c)

பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.


5

நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்! - பல்லவி

6

மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். - பல்லவி

7

மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். - பல்லவி

8

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்; மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்; ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர். - பல்லவி

9

நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 25: 4c, 5a

அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.


ஜூன் 11 : முதல் வாசகம் புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைக் கடவுள் எங்களுக்குத் தந்தார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-11

 ஜூன் 11 :  முதல் வாசகம்

புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைக் கடவுள் எங்களுக்குத் தந்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-11


சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம். நாங்களே செய்ததாக எதன்மேலும் உரிமை பாராட்டிக்கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடம் இருந்தே வருகிறது. அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல; தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு.

கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாய் இருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாய் இருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளி வீசியது. அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவி சார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாய் இருக்கும்! தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாய் இருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாய் இருக்கும்! அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல. மறையப் போவது மாட்சி உடையதாய் இருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாய் இருக்கும்!

ஆண்டவரின் அருள்வாக்கு.


June 11th : Gospel I have not come to abolish the Law and the Prophets but to complete them A Reading from the Holy Gospel according to St.Matthew 5: 17-19

 June 11th :  Gospel 

I have not come to abolish the Law and the Prophets but to complete them

A Reading from the Holy Gospel according to St.Matthew 5: 17-19

Jesus said to his disciples: ‘Do not imagine that I have come to abolish the Law or the Prophets. I have come not to abolish but to complete them. I tell you solemnly, till heaven and earth disappear, not one dot, not one little stroke, shall disappear from the Law until its purpose is achieved. Therefore, the man who infringes even one of the least of these commandments and teaches others to do the same will be considered the least in the kingdom of heaven; but the man who keeps them and teaches them will be considered great in the kingdom of heaven.’

The Word of the Lord.

June 11th : Responsorial Psalm Psalm 98(99):5-9

 June 11th :  Responsorial Psalm

Psalm 98(99):5-9 

You are holy, O Lord our God.

Exalt the Lord our God;

  bow down before Zion, his footstool.

  He the Lord is holy.

You are holy, O Lord our God.

Among his priests were Aaron and Moses,

  among those who invoked his name was Samuel.

  They invoked the Lord and he answered.

You are holy, O Lord our God.

To them he spoke in the pillar of cloud.

  They did his will; they kept the law,

  which he, the Lord, had given.

You are holy, O Lord our God.

O Lord our God, you answered them.

  For them you were a God who forgives;

  yet you punished all their offences.

You are holy, O Lord our God.

Exalt the Lord our God;

  bow down before his holy mountain

  for the Lord our God is holy.

You are holy, O Lord our God.

Gospel Acclamation Ps118:27

Alleluia, alleluia!

Make me grasp the way of your precepts,

and I will muse on your wonders.

Alleluia!

June 11th : First Reading The new covenant is a covenant of the Spirit A Reading from the Second letter of St.Paul to the Corinthians 3:4-11

 June 11th :  First Reading

The new covenant is a covenant of the Spirit

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 3:4-11 

Before God, we are confident of this through Christ: not that we are qualified in ourselves to claim anything as our own work: all our qualifications come from God. He is the one who has given us the qualifications to be the administrators of this new covenant, which is not a covenant of written letters but of the Spirit: the written letters bring death, but the Spirit gives life. Now if the administering of death, in the written letters engraved on stones, was accompanied by such a brightness that the Israelites could not bear looking at the face of Moses, though it was a brightness that faded, then how much greater will be the brightness that surrounds the administering of the Spirit! For if there was any splendour in administering condemnation, there must be very much greater splendour in administering justification. In fact, compared with this greater splendour, the thing that used to have such splendour now seems to have none; and if what was so temporary had any splendour, there must be much more in what is going to last for ever.

The Word of the Lord.