இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 25 ஜூன், 2025

ஜூன் 26 : முதல் வாசகம் ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12,15-16

 ஜூன் 26 :  முதல் வாசகம்

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12,15-16


அந்நாள்களில் ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஆபிராமிடம், ``ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்'' என்றார்.

ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார். ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.

அப்பொழுது சாராய் ஆபிராமிடம், ``எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்'' என்றார். ஆபிராம் சாராயிடம், ``உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்'' என்றார். இதற்குப் பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார்.

ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, ``சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?'' என்று கேட்டார். அதற்கு அவள், ``என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்'' என்றாள்.

ஆண்டவரின் தூதர் அவளிடம், ``நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட'' என்றார். பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், ``உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்'' என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், ``இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு `இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்'' என்றார்.

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 26th : Gospel The wise man built his house on a rock. A Reading from the Holy Gospel according to St.Matthew 7: 21-29 .

 June 26th : Gospel 

The wise man built his house on a rock.

A Reading from the Holy Gospel according to St.Matthew 7: 21-29 .

Jesus said to his disciples: ‘It is not those who say to me, “Lord, Lord,” who will enter the kingdom of heaven, but the person who does the will of my Father in heaven. When the day comes many will say to me, “Lord, Lord, did we not prophesy in your name, cast out demons in your name, work many miracles in your name?” Then I shall tell them to their faces: I have never known you; away from me, you evil men!

  ‘Therefore, everyone who listens to these words of mine and acts on them will be like a sensible man who built his house on rock. Rain came down, floods rose, gales blew and hurled themselves against that house, and it did not fall: it was founded on rock. But everyone who listens to these words of mine and does not act on them will be like a stupid man who built his house on sand. Rain came down, floods rose, gales blew and struck that house, and it fell; and what a fall it had!’

  Jesus had now finished what he wanted to say, and his teaching made a deep impression on the people because he taught them with authority, and not like their own scribes.

The Gospel of the Lord.


June 26th : Responsorial Psalm Psalm 105(106):1-5

June 26th : Responsorial Psalm

Psalm 105(106):1-5 

O give thanks to the Lord for he is good.

or Alleluia!

O give thanks to the Lord for he is good;

  for his love endures for ever.

Who can tell the Lord’s mighty deeds?

  Who can recount all his praise?

O give thanks to the Lord for he is good.

or Alleluia!

They are happy who do what is right,

  who at all times do what is just.

O Lord, remember me

  out of the love you have for your people.

O give thanks to the Lord for he is good.

or Alleluia!

Come to me, Lord, with your help

  that I may see the joy of your chosen ones

and may rejoice in the gladness of your nation

  and share the glory of your people.

O give thanks to the Lord for he is good.

or Alleluia!

Gospel Acclamation Heb4:12

Alleluia, alleluia!

The word of God is something alive and active:

it can judge secret emotions and thoughts.

Alleluia!

June 26th : First Reading Hagar bears Abram a son. A Reading from the Book of Genesis 16: 1-12,15-16

 June 26th : First Reading

Hagar bears Abram a son.

A Reading from the Book of Genesis 16: 1-12,15-16 

Abram’s wife Sarai had borne him no child, but she had an Egyptian maidservant named Hagar. So Sarai said to Abram, ‘Listen, now! Since the Lord has kept me from having children, go to my slave-girl. Perhaps I shall get children through her.’ Abram agreed to what Sarai had said.

  Thus after Abram had lived in the land of Canaan for ten years Sarai took Hagar her Egyptian slave-girl and gave her to Abram as his wife. He went to Hagar and she conceived. And once she knew she had conceived, her mistress counted for nothing in her eyes. Then Sarai said to Abram, ‘May this insult to me come home to you! It was I who put my slave-girl into your arms but now she knows that she has conceived, I count for nothing in her eyes. Let the Lord judge between me and you.’ ‘Very well,’ Abram said to Sarai ‘your slave-girl is at your disposal. Treat her as you think fit.’ Sarai accordingly treated her so badly that she ran away from her.

  The angel of the Lord met her near a spring in the wilderness, the spring that is on the road to Shur. He said, ‘Hagar, slave-girl of Sarai, where have you come from, and where are you going?’ ‘I am running away from my mistress Sarai’ she replied. The angel of the Lord said to her, ‘Go back to your mistress and submit to her.’ The angel of the Lord said to her, ‘I will make your descendants too numerous to be counted.’ Then the angel of the Lord said to her:

‘Now you have conceived, and you will bear a son,

and you shall name him Ishmael,

for the Lord has heard your cries of distress.

A wild-ass of a man he will be,

against every man, and every man against him,

setting himself to defy all his brothers.’

Hagar bore Abram a son, and Abram gave to the son that Hagar bore the name Ishmael. Abram was eighty-six years old when Hagar bore him Ishmael.

The Word of the Lord.

செவ்வாய், 24 ஜூன், 2025

ஜூன் 25 : நற்செய்தி வாசகம் போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

 ஜூன் 25 :  நற்செய்தி வாசகம்

போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 25 : பதிலுரைப் பாடல் திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a) பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

 ஜூன் 25 : பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.


1

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

2

அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி

3

அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

4

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி

6

அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!

7

அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

8

அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.

9

ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! 

நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

ஜூன் 25 : முதல் வாசகம் ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார். தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12, 17-18

 ஜூன் 25 :  முதல் வாசகம்

ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12, 17-18


அந்நாள்களில்

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.” அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்” என்றார்.

அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?” என்றார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.

கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


June 25th : Gospel You will be able to tell them by their fruits A Reading from the Holy Gospel according to St.Matthew 7:15-20

 June 25th :  Gospel 

You will be able to tell them by their fruits

A Reading from the Holy Gospel according to St.Matthew 7:15-20 

Jesus said to his disciples: ‘Beware of false prophets who come to you disguised as sheep but underneath are ravenous wolves. You will be able to tell them by their fruits. Can people pick grapes from thorns, or figs from thistles? In the same way, a sound tree produces good fruit but a rotten tree bad fruit. A sound tree cannot bear bad fruit, nor a rotten tree bear good fruit. Any tree that does not produce good fruit is cut down and thrown on the fire. I repeat, you will be able to tell them by their fruits.’

The Word of the Lord.


June 25th : Responsorial Psalm Psalm 104(105):1-4,6-9

 June 25th :  Responsorial Psalm

Psalm 104(105):1-4,6-9 

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

Give thanks to the Lord, tell his name,

  make known his deeds among the peoples.

O sing to him, sing his praise;

  tell all his wonderful works!

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

Be proud of his holy name,

  let the hearts that seek the Lord rejoice.

Consider the Lord and his strength;

  constantly seek his face.

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

O children of Abraham, his servant,

  O sons of the Jacob he chose.

He, the Lord, is our God:

  his judgements prevail in all the earth.

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

He remembers his covenant for ever,

  his promise for a thousand generations,

the covenant he made with Abraham,

  the oath he swore to Isaac.

The Lord remembers his covenant for ever.

or

Alleluia!

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider

the wonders of your law.

Alleluia!


June 25th : First Reading Count the stars: such shall be your descendants A Reading from the Book of Genesis 15:1-12,17-18

 June 25th : First Reading

Count the stars: such shall be your descendants

A Reading from the Book of Genesis 15:1-12,17-18 

It happened that the word of the Lord was spoken to Abram in a vision, ‘Have no fear, Abram, I am your shield; your reward will be very great.’

  ‘My Lord,’ Abram replied ‘what do you intend to give me? I go childless…’. Then Abram said, ‘See, you have given me no descendants; some man of my household will be my heir.’ And then this word of the Lord was spoken to him, ‘He shall not be your heir; your heir shall be of your own flesh and blood.’ Then taking him outside he said, ‘Look up to heaven and count the stars if you can. Such will be your descendants’ he told him. Abram put his faith in the Lord, who counted this as making him justified.

  ‘I am the Lord’ he said to him ‘who brought you out of Ur of the Chaldaeans to make you heir to this land.’ ‘My Lord,’ Abram replied ‘how am I to know that I shall inherit it?’ He said to him, ‘Get me a three-year-old heifer, a three-year-old goat, a three-year-old ram, a turtledove and a young pigeon.’ He brought him all these, cut them in half and put half on one side and half facing it on the other; but the birds he did not cut in half. Birds of prey came down on the carcases but Abram drove them off.

  Now as the sun was setting Abram fell into a deep sleep, and terror seized him. When the sun had set and darkness had fallen, there appeared a smoking furnace and a firebrand that went between the halves. That day the Lord made a Covenant with Abram in these terms:

‘To your descendants I give this land,

from the wadi of Egypt to the Great River,

the river Euphrates.’

The Word of the Lord.