இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 24 ஜூலை, 2025

July 25th : Gospel 'Can you drink the cup that I am going to drink?' A reading from the Holy Gospel according to St.Matthew 20: 20-28

 July 25th :  Gospel

'Can you drink the cup that I am going to drink?'

A reading from the Holy Gospel according to St.Matthew 20: 20-28 

The mother of the sons of Zebedee came to Jesus with her sons to make a request of him, and bowed low; and he said to her, ‘What is it you want?’ She said to him, ‘Promise that these two sons of mine may sit one at your right hand and the other at your left in your kingdom.’ ‘You do not know what you are asking’ Jesus answered. ‘Can you drink the cup that I am going to drink?’ They replied, ‘We can.’ ‘Very well,’ he said ‘you shall drink my cup, but as for seats at my right hand and my left, these are not mine to grant; they belong to those to whom they have been allotted by my Father.’

  When the other ten heard this they were indignant with the two brothers. But Jesus called them to him and said, ‘You know that among the pagans the rulers lord it over them, and their great men make their authority felt. This is not to happen among you. No; anyone who wants to be great among you must be your servant, and anyone who wants to be first among you must be your slave, just as the Son of Man came not to be served but to serve, and to give his life as a ransom for many.’

The Word of the Lord.


July 25th : Responsorial Psalm Psalm 125(126):1-6

 July 25th :  Responsorial Psalm

Psalm 125(126):1-6 

Those who are sowing in tears will sing when they reap.

When the Lord delivered Zion from bondage,

  it seemed like a dream.

Then was our mouth filled with laughter,

  on our lips there were songs.

Those who are sowing in tears will sing when they reap.

The heathens themselves said: ‘What marvels

  the Lord worked for them!’

What marvels the Lord worked for us!

  Indeed we were glad.

Those who are sowing in tears will sing when they reap.

Deliver us, O Lord, from our bondage

  as streams in dry land.

Those who are sowing in tears

  will sing when they reap.

Those who are sowing in tears will sing when they reap.

They go out, they go out, full of tears,

  carrying seed for the sowing:

they come back, they come back, full of song,

  carrying their sheaves.

Those who are sowing in tears will sing when they reap.

Gospel Acclamation cf.Jn15:16

Alleluia, alleluia!

I chose you from the world

to go out and bear fruit,

fruit that will last,

says the Lord.

Alleluia!

July 25th : First reading Such an overwhelming power comes from God and not from us. A reading from the Second Letter of St.Paul to the Corinthians 4: 7-15

 July 25th :  First reading

Such an overwhelming power comes from God and not from us.

A reading from the Second Letter of St.Paul to the Corinthians 4: 7-15 

We are only the earthenware jars that hold this treasure, to make it clear that such an overwhelming power comes from God and not from us. We are in difficulties on all sides, but never cornered; we see no answer to our problems, but never despair; we have been persecuted, but never deserted; knocked down, but never killed; always, wherever we may be, we carry with us in our body the death of Jesus, so that the life of Jesus, too, may always be seen in our body. Indeed, while we are still alive, we are consigned to our death every day, for the sake of Jesus, so that in our mortal flesh the life of Jesus, too, may be openly shown. So death is at work in us, but life in you.

  But as we have the same spirit of faith that is mentioned in scripture – I believed, and therefore I spoke – we too believe and therefore we too speak, knowing that he who raised the Lord Jesus to life will raise us with Jesus in our turn, and put us by his side and you with us. You see, all this is for your benefit, so that the more grace is multiplied among people, the more thanksgiving there will be, to the glory of God.

The Word of the Lord.


புதன், 23 ஜூலை, 2025

ஜூலை 24 : நற்செய்தி வாசகம்விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

ஜூலை 24 :  நற்செய்தி வாசகம்

விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17


அக்காலத்தில்

சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:

‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’

உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 24 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 29a,29c. 30,31. 32,33 (பல்லவி: 29b)

ஜூலை 24 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 29a,29c. 30,31. 32,33 (பல்லவி: 29b)


பல்லவி: என்றென்றும் நீர் புகழ் பெறவும் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.

29a
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக!
29c
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது! - பல்லவி

30
உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக!
31
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப்பெறுவீராக! - பல்லவி

32
உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக!
33
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா!

 தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

ஜூலை 24 : முதல் வாசகம்மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 9-11, 16-20

ஜூலை 24 :  முதல் வாசகம்

மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 9-11, 16-20


அந்நாள்களில்

எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலை நிலத்தைச் சென்றடைந்தனர். இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர்கள் சீனாய் பாலை நிலத்தை வந்தடைந்து, பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ! நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்கும்படியும் என்றென்றும் உன்னை நம்பும்படியும் நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார்.

மோசேயும் மக்களின் வார்த்தைகளை ஆண்டவருக்கு அறிவித்தார். ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ மக்களிடம் போய் அவர்களை இன்றும் நாளையும் தூய்மைப்படுத்து. அவர்கள் தம் துணிகளைத் துவைத்துக் கொள்ளட்டும். இவ்வாறு மூன்றாம் நாளுக்காகத் தயாராகட்டும். ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார்” என்றார்.

மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர். கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள். சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காள முழக்கம் எழும்பி, வர வர மிகுதியாயிற்று.

மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார். ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 24th : GospelProphets and holy men longed to hear what you hearA reading from the Holy Gospel according to St.Matthew 13: 10-17

July 24th :  Gospel

Prophets and holy men longed to hear what you hear

A reading from the Holy Gospel according to St.Matthew 13: 10-17

The disciples went up to Jesus and asked, ‘Why do you talk to them in parables?’ ‘Because’ he replied, ‘the mysteries of the kingdom of heaven are revealed to you, but they are not revealed to them. For anyone who has will be given more, and he will have more than enough; but from anyone who has not, even what he has will be taken away. The reason I talk to them in parables is that they look without seeing and listen without hearing or understanding. So in their case this prophecy of Isaiah is being fulfilled:
You will listen and listen again, but not understand,
see and see again, but not perceive.
For the heart of this nation has grown coarse,
their ears are dull of hearing, and they have shut their eyes,
for fear they should see with their eyes,
hear with their ears,
understand with their heart,
and be converted
and be healed by me.
‘But happy are your eyes because they see, your ears because they hear! I tell you solemnly, many prophets and holy men longed to see what you see, and never saw it; to hear what you hear, and never heard it.’

The Word of the Lord.

July 24th : Responsorial Psalm Daniel 3:52-56

July 24th :  Responsorial Psalm 

Daniel 3:52-56 

To you glory and praise for evermore.

You are blest, Lord God of our fathers.

To you glory and praise for evermore.

Blest your glorious holy name.

To you glory and praise for evermore.

You are blest in the temple of your glory.

To you glory and praise for evermore.

You are blest on the throne of your kingdom.

To you glory and praise for evermore.

You are blest who gaze into the depths.

To you glory and praise for evermore.

You are blest in the firmament of heaven.

To you glory and praise for evermore.

Gospel Acclamation Ps94:8

Alleluia, alleluia!
Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Alleluia!

July 24th : First readingMoses speaks with God on SinaiA reading from the book of Exodus 19:1-2,9-11,16-20

July 24th : First reading

Moses speaks with God on Sinai

A reading from the book of Exodus 19:1-2,9-11,16-20 

Three months after they came out of the land of Egypt, on that day the sons of Israel came to the wilderness of Sinai. From Rephidim they set out again; and when they reached the wilderness of Sinai, there in the wilderness they pitched their camp; there facing the mountain Israel pitched camp.
  The Lord said to Moses, ‘I am coming to you in a dense cloud so that the people may hear when I speak to you and may trust you always.’ And Moses took the people’s reply back to the Lord.
  The Lord said to Moses, ‘Go to the people and tell them to prepare themselves today and tomorrow. Let them wash their clothing and hold themselves in readiness for the third day, because on the third day the Lord will descend on the mountain of Sinai in the sight of all the people.’
  Now at daybreak on the third day there were peals of thunder on the mountain and lightning flashes, a dense cloud, and a loud trumpet blast, and inside the camp all the people trembled. Then Moses led the people out of the camp to meet God; and they stood at the bottom of the mountain. The mountain of Sinai was entirely wrapped in smoke, because the Lord had descended on it in the form of fire. Like smoke from a furnace the smoke went up, and the whole mountain shook violently. Louder and louder grew the sound of the trumpet. Moses spoke, and God answered him with peals of thunder. The Lord came down on the mountain of Sinai, on the mountain top, and the Lord called Moses to the top of the mountain; and Moses went up.

The Word of the Lord.

செவ்வாய், 22 ஜூலை, 2025

ஜூலை 23 : நற்செய்தி வாசகம் நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன. ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

 ஜூலை 23 :  நற்செய்தி வாசகம்

நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9


அக்காலத்தில்

இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந் திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற் கரையில் நின்று கொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.