இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 15 செப்டம்பர், 2025

September 16th : Gospel The only son of his mother, and she a widow A reading from the Holy Gospel according to St.Luke 7: 11-17

 September 16th :  Gospel  

The only son of his mother, and she a widow

A reading from the Holy Gospel according to St.Luke 7: 11-17

At that time: Jesus went to a town called Nain, and his disciples and a great crowd went with him. As he drew near to the gate of the town, behold, a man who had died was being carried out, the only son of his mother, and she was a widow, and a considerable crowd from the town was with her. And when the Lord saw her, he had compassion on her and said to her, “Do not weep.” Then he came up and touched the bier, and the bearers stood still. And he said, “Young man, I say to you, arise.” And the dead man sat up and began to speak, and Jesus gave him to his mother. Fear seized them all, and they glorified God, saying, “A great prophet has arisen among us!” and “God has visited his people!” And this report about him spread through the whole of Judea and all the surrounding country.

The Gospel of the Lord.

September 16th : Responsorial Psalm Psalm 101:1–2ab, 2cd–3ab, 5, 6 (R. 2c) Response : I will walk with blameless heart.

 September 16th :  Responsorial Psalm

Psalm 101:1–2ab, 2cd–3ab, 5, 6 (R. 2c)

Response :  I will walk with blameless heart.

I sing of merciful love and justice; I raise a psalm to you, O Lord. I will ponder the way of the blameless. O when will you come to me?

Response :  I will walk with blameless heart.

I will walk with blameless heart within my house; I will not set before my eyes whatever is base. 

Response :  I will walk with blameless heart.

Whoever slanders a neighbour in secret I will bring to silence. Proud eyes and haughty heart I will never endure. 

Response :  I will walk with blameless heart.

My eyes are on the faithful of the land, that they may dwell with me. The one who walks in the way of the blameless shall be my servant.

Response :  I will walk with blameless heart.

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. A great prophet has arisen among us, and God has visited his people.

R. Alleluia.

September 16th : First reading The president must be of impeccable character A reading from the first letter of St.Paul to Timothy 3: 1-13

 September 16th :  First reading

The president must be of impeccable character

A reading from the first letter of St.Paul to Timothy 3: 1-13 

Beloved:  The saying is trustworthy: If anyone aspires to the office of bishop, he desires a noble task. Therefore a bishop must be above reproach, the husband of one wife, sober-minded, self-controlled, respectable, hospitable, able to teach, not a drunkard, not violent but gentle, not quarrelsome, not a lover of money. He must manage his own household well, with all dignity keeping his children submissive, for if someone does not know how to manage his own household, how will he care for God’s church? He must not be a recent convert, or he may become puffed up with conceit and fall into the condemnation of the devil. Moreover, he must be well thought of by outsiders, so that he may not fall into disgrace, into a snare of the devil. Deacons likewise must be dignified, not double-tongued, not addicted to much wine, not greedy for dishonest gain. They must hold the mystery of the faith with a clear conscience. And let them also be tested first; then let them serve as deacons if they prove themselves blameless. Their wives likewise must be dignified, not slanderers, but sober-minded, faithful in all things. Let deacons each be the husband of one wife, managing their children and their own households well. For those who serve well as deacons gain a good standing for themselves and also great confidence in the faith that is in Christ Jesus.

The word of the Lord.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

செப்டம்பர் 15 : நற்செய்தி வாசகம்திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

செப்டம்பர் 15 :  நற்செய்தி வாசகம்

திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27
அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 15 : பதிலுரைப் பாடல்திபா 31: 1-2ab. 2c-3. 4-5. 14-15. 19 (பல்லவி: 16a)பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.

செப்டம்பர் 15 :  பதிலுரைப் பாடல்

திபா 31: 1-2ab. 2c-3. 4-5. 14-15. 19 (பல்லவி: 16a)

பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.
1
ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
2ab
உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும். - பல்லவி

2c
எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். - பல்லவி

4
அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.
5
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். - பல்லவி

14
ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.
15
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். - பல்லவி

19
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! - பல்லவி
------------------------------------------------------------------------
தொடர்பாடல்

இப்பாடலை முழுமையாகவோ அல்லது சுருக்கமாகவோ (எண் 11. தூய நல்தாயே... முதல்) தேவைக்கேற்ப பாடலாம் அல்லது சொல்லலாம்.

1. திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில்,
கண்ணீர் பெருகிடத் துயருடன் அந்தோ!
நின்றார் வியாகுலத் தாய்மரி.

2.பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத்
துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ!
ஊடுருவிற்றே கூர்வாள், காணீர்.

3.தேவ சுதனின் அன்பால் அன்னை,
பேரரும் ஆசி பெற்றவர், அன்று
எத்துணைத் துயரும் வருத்தமும் கொண்டார்.

4.அன்புத் தாயவர் மாண்புறு மகனின்
துன்பம் அனைத்தும் நோக்கிய போது
கொண்ட துயரமும் வருத்தமும் என்னே!

5.இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும்
கிறிஸ்துவின் அன்னையைக் காணும் போதில்
எவரும் வருந்தாதிருந்திடுவாரோ!

6.தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும்
கிறிஸ்துவின் அன்னையை நோக்கிடும் போதில்
உளம் உருகாமல் நிற்பவர் யாரோ!

7.தம்முடைய மக்களின் பாவம் நீங்க
தாங்கரும் வேதனை, கசையடி ஏற்ற
தம் திருமகனாம் இயேசுவைக் கண்டார்.

8.தேனினுமினிய தேவனின் மைந்தன்
அனைவரும் கைவிட ஆறுதலின்றித்
தனிமையில் தமது உயிர்விடக் கண்டார்

9.அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா,
அடியேன் உம்முடன் அழுது வருந்த,
உமதுள்ளத் துயரை உணர்ந்திடச் செய்வீர்.

10.இறைவனாம் கிறிஸ்துவுக் கன்பு செய்து
என்றும் அவருக் குகந்தவராக,
என்னுளம் அன்பால் எரிந்திடச் செய்வீர்.

11.தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்:
துயருறும் சிலுவை நாதரின் காயம்
ஆழமாய் நெஞ்சில் அழுந்திடச் செய்வீர்.

12.அடியேனுக்காய்க் காயமும் துன்பமும்
ஏற்கத் திருவுளம் கொண்ட உம் மகனின்
துயரில் எனக்கொரு பங்கு தருவீர்.

13.சிலுவை நாதருடன் துயருறவும்,
பக்தியால் உம்முடன் புலம்பவும்,
என்றன் உயிருள்ளளவும் அருள் புரிவீரே.

14.சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும்
கண்ணீர் அழுகையில் நானும் சேர்ந்து
பங்குற விரும்புகின்றேனே.

15. கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே,
கனிவுடன் என்னைக் கடைக்கண் நோக்கி
உம்மோடழுதிட அருள் செய், அம்மா.

16.கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும்
பாடுகள் யாவிலும் பங்கு கொள்ளவும்
காயம் நினைத்து இரங்கவும் செய்யும்.

17.நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும்
அவரது சிலுவையும், சிந்திய இரத்தமும்
என் மனம் நிரப்ப அருள் செய்வீரே.

18.என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில்
வீழ்ந்து அவதியுறாமல் கன்னியே,
என்னைக் காத்திடுவீரே.

19.கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே
வந்திடும் வேளை வெற்றிக் குருத்தைத்
தாங்க நும் அன்னை வழியாய் அருள்வீர்.

20. என்னுடல் மரித்து அழியும் போதில்
என்றன் ஆன்மா பரகதி மகிமை
எய்திடும் வரத்தை வேண்டி நின்றேன். ஆமென்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.

செப்டம்பர் 15 : புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவுமுதல் வாசகம்கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

செப்டம்பர் 15 :  புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவு

முதல் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9
சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Septermber 15th : Gospel 'Woman, this is your son'A Reading from the Holy Gospel according to St.John 19 : 25-27

Septermber 15th :  Gospel 

'Woman, this is your son'

A Reading from the Holy Gospel according to St.John 19 : 25-27

Standing by the cross of Jesus were his mother, and his mother’s sister, Mary the wife of Clopas, and Mary Magdalene. When Jesus saw his mother and the disciple whom he loved standing nearby, he said to his mother, “Woman, behold, your son!” Then he said to the disciple, “Behold, your mother!” And from that hour the disciple took her to his own home.

The Gospel of the Lord.

September 15th : Responsorial PsalmPsalm 31:2–3a, 3bc–4, 5–6, 15–16, 20 (R. 17b)Response : Save me, O Lord, in your merciful love.

September 15th : Responsorial Psalm

Psalm 31:2–3a, 3bc–4, 5–6, 15–16, 20 (R. 17b)

Response : Save me, O Lord, in your merciful love.

In you, O Lord, I take refuge. Let me never be put to shame. In your justice, set me free; incline your ear to me, and speedily rescue me. 

Response : Save me, O Lord, in your merciful love.
 
Be a rock of refuge for me, a mighty stronghold to save me. For you are my rock, my stronghold! Lead me, guide me, for the sake of your name. 

Response : Save me, O Lord, in your merciful love.

Release me from the snare they have hidden, for you indeed are my refuge. Into your hands I commend my spirit. You will redeem me, O Lord, O faithful God. 

Response : Save me, O Lord, in your merciful love.

But as for me, I trust in you, O Lord; I say, “You are my God. My lot is in your hands, deliver me from the hands of my enemies and those who pursue me.” 

Response : Save me, O Lord, in your merciful love.

How great is the goodness, Lord, that you keep for those who fear you, that you show to those who trust you in the sight of the children of men. 

Response : Save me, O Lord, in your merciful love.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Blessed are you, O Virgin Mary; without dying you won the martyr’s crown beneath the Cross of the Lord.

R. Alleluia.

September 15th : First Reading He learned to obey and he became the source of eternal salvationA Reading from the letter to the Hebrews 5 : 7-9

September 15th : First Reading 

He learned to obey and he became the source of eternal salvation

A Reading from the letter to the Hebrews 5 : 7-9

In the days of his flesh, Jesus offered up prayers and supplications, with loud cries and tears, to him who was able to save him from death, and he was heard because of his reverence. Although he was a Son, he learned obedience through what he suffered. And being made perfect, he became the source of eternal salvation to all who obey him.

The word of the Lord.

சனி, 13 செப்டம்பர், 2025

செப்டம்பர் 14 : நற்செய்தி வாசகம் மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

 செப்டம்பர் 14 :  நற்செய்தி வாசகம்

மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17


அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.