இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 2 நவம்பர், 2025

November 3rd : Responsorial PsalmPsalm 69:30–31, 33–34, 36–37 (R. 14c)Response : In your great mercy, answer me, O Lord.

November 3rd : Responsorial Psalm

Psalm 69:30–31, 33–34, 36–37 (R. 14c)

Response : In your great mercy, answer me, O Lord.

As for me in my poverty and pain, let your salvation, O God, raise me up. Then I will praise God’s name with a song; I will glorify him with thanksgiving.

R.: In your great mercy, answer me, O Lord.

The poor when they see it will be glad, and God-seeking hearts will revive; for the Lord listens to the needy, and does not spurn his own in their chains.

R.: In your great mercy, answer me, O Lord.

For God will bring salvation to Sion, and rebuild the cities of Judah, and they shall dwell there in possession. The children of his servants shall inherit it; those who love his name shall dwell there.

R.: In your great mercy, answer me, O Lord.

Gospel Acclamation

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. If you abide in my word, you are truly my disciple, and you will know the truth, says the Lord.

R. Alleluia.

November 3rd : First reading God never takes back his giftsA reading from the letter of St.Paul to the Romans 11: 29-36

November 3rd :  First reading 

God never takes back his gifts

A reading from the letter of St.Paul to the Romans 11: 29-36 

Brethren: The gifts and the calling of God are irrevocable. For just as you were at one time disobedient to God but now have received mercy because of their disobedience, so they too have now been disobedient in order that by the mercy shown to you they also may now receive mercy. For God has consigned all to disobedience, that he may have mercy on all. Oh, the depth of the riches and wisdom and knowledge of God! How unsearchable are his judgments and how inscrutable his ways! “For who has known the mind of the Lord, or who has been his counsellor?” “Or who has given a gift to him that he might be repaid?” For from him and through him and to him are all things. To him be glory for ever. Amen.

The Word of the Lord.

சனி, 1 நவம்பர், 2025

நவம்பர் 2 : நற்செய்தி வாசகம் தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 37-40

 நவம்பர்  2 :  நற்செய்தி வாசகம்

தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 37-40


தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்; ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். "அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார்

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 2 : இரண்டாம் வாசகம் உரோமையர் 5:5-11

 நவம்பர் 2 :  இரண்டாம் வாசகம்

உரோமையர் 5:5-11


அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது: எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.

நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.

ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?

நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 2 : பதிலுரைப் பாடல் திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

 நவம்பர் 2 :  பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

அல்லது: (13): வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.


1

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.

14

நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்;

உன்

உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி


நவம்பர் 2 : முதல் வாசகம் சாலமோனின் ஞானம் 3:1-9

 நவம்பர் 2 :   முதல் வாசகம்

சாலமோனின் ஞானம் 3:1-9


நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.

பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்: எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்: அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்: நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்: மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்: அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 2nd : Gospel A Reading from the Holy Gospel according to St.John 6: 37-40.

 November 2nd :   Gospel

A Reading from the Holy Gospel according to St.John  6: 37-40.

At that time: Jesus said to the crowds, “All that the Father gives me will come to me, and whoever comes to me I will never cast out. For I have come down from heaven, not to do my own will but the will of him who sent me. And this is the will of him who sent me, that I should lose nothing of all that he has given me, but raise it up on the last day. For this is the will of my Father, that everyone who looks on the Son and believes in him should have eternal life, and I will raise him up on the last day.”

The Gospel of the Lord.

November 2nd : Second reading Now we have been reconciled by the death of his Son, surely we may count on being saved by the life of his Son A reading from the letter of St.Paul to the Romans 5: 5-11

 November 2nd :  Second reading 

Now we have been reconciled by the death of his Son, surely we may count on being saved by the life of his Son

A reading from the letter of St.Paul to the Romans 5: 5-11

Brethren: Hope does not put us to shame, because God’s love has been poured into our hearts through the Holy Spirit who has been given to us. While we were still weak, at the right time Christ died for the ungodly. For one will scarcely die for a righteous person— though perhaps for a good person one would dare even to die— but God shows his love for us in that while we were still sinners, Christ died for us. Since, therefore, we have now been justified by his blood, much more shall we be saved by him from the wrath of God. For if while we were enemies we were reconciled to God by the death of his Son, much more, now that we are reconciled, shall we be saved by his life. More than that, we also rejoice in God through our Lord Jesus Christ, through whom we have now received reconciliation.

The Word of the Lord.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. God so loved the world, that he gave his only begotten Son, that whoever believes in him should not perish but have eternal life.

R. Alleluia.

November 2nd : Responsorial Psalm Psalm 26(27):1,4,13-14

 November 2nd :  Responsorial Psalm

Psalm 26(27):1,4,13-14 

The Lord is my light and my salvation

The Lord is my light and my help;

  whom shall I fear?

The Lord is the stronghold of my life;

  before whom shall I shrink?

The Lord is my light and my salvation

There is one thing I ask of the Lord,

  for this I long,

to live in the house of the Lord,

  all the days of my life,

to savour the sweetness of the Lord,

  to behold his temple.

The Lord is my light and my salvation

I am sure I shall see the Lord’s goodness

  in the land of the living.

Hope in him, hold firm and take heart.

  Hope in the Lord!

The Lord is my light and my salvation

November 2nd : First reading The souls of the virtuous are in the hands of God A reading from the book of Wisdom 3:1-9

 November 2nd :  First reading 

The souls of the virtuous are in the hands of God

A reading from the book of Wisdom 3:1-9 

The souls of the righteous are in the hand of God, and no torment will ever touch them. In the eyes of the foolish they seemed to have died, and their departure was thought to be an evil thing, and their going from us to be their destruction; but they are at peace. For though in the sight of men they were punished, their hope is full of immortality. Having been disciplined a little, they will receive great good, because God tested them and found them worthy of himself; like gold in the furnace he tried them, and like a sacrificial whole burnt offering he accepted them. In the time of their visitation they will shine forth and will run like sparks through the stubble. They will govern nations and rule over peoples, and the Lord will reign over them for ever. Those who trust in him will understand truth, and the faithful will abide with him in love, because grace and mercy are upon his holy ones.

The word of the Lord.