இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 26 நவம்பர், 2025

நவம்பர் 27 : முதல் வாசகம் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27

 நவம்பர் 27 :  முதல் வாசகம்

கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27


அந்நாள்களில்

முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள்.

உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, “அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?” என்றார்கள்.

அதற்கு அரசன், “ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல், இதுவும் மாறாததே” என்றான்.

உடனே அவர்கள் அரசனை நோக்கி, “யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்” என்றார்கள். ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான்.

ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, “அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்” என்றனர்.

ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டு வரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, “நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!” என்றான். அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை அடைத்தார்கள்; தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் மோதிரங்களாலும் அதற்கு முத்திரையிட்டான்.

பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை; வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை விட்டு அகன்றது. பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான். தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக் குரலில் அவன் தானியேலை நோக்கி, “தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா?” என்று உரக்கக் கேட்டான்.

அதற்குத் தானியேல் அரசனிடம், “அரசரே! நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே” என்று மறுமொழி கொடுத்தார். எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார். பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன.

அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவருக்கும் நாட்டினருக்கும் மொழியினருக்கும் ஓர் அறிக்கை விடுத்தான். “உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்; அவரது ஆட்சி என்றும் அழிவற்றது; அவரது அரசுரிமைக்கு முடிவே இராது. தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!”

ஆண்டவரின் அருள்வாக்கு.


November 27th : Gospel There will be signs in the sun and moon and stars. A Reading from the Holy Gospel according to St. Luke 21: 20-28

 November 27th : Gospel 

There will be signs in the sun and moon and stars.

A Reading from the Holy Gospel according to  St. Luke 21: 20-28 

At that time: Jesus said to his disciples, “But when you see Jerusalem surrounded by armies, then know that its desolation has come near. Then let those who are in Judea flee to the mountains, and let those who are inside the city depart, and let not those who are out in the country enter it, for these are days of vengeance, to fulfil all that is written. Alas for women who are pregnant and for those who are nursing infants in those days! For there will be great distress upon the earth and wrath against this people. They will fall by the edge of the sword and be led captive among all nations, and Jerusalem will be trampled underfoot by the Gentiles, until the times of the Gentiles are fulfilled. “And there will be signs in sun and moon and stars, and on the earth distress of nations in perplexity because of the roaring of the sea and the waves, people fainting with fear and with foreboding of what is coming on the world. For the powers of the heavens will be shaken. And then they will see the Son of Man coming in a cloud with power and great glory. Now when these things begin to take place, straighten up and raise your heads, because your redemption is drawing near.”

The Gospel of the Lord.


November 27th : Responsorial Psalm Daniel 3:68, 69, 70, 71, 72, 73, 74 (R. 59b)

 November 27th : Responsorial Psalm

Daniel 3:68, 69, 70, 71, 72, 73, 74 (R. 59b)

Response : Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, dews and snows, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, nights and days, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, light and darkness, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, ice and cold, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, frosts and snows, sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, lightnings and clouds, sing praise to him and highly exalt him forever. R.

Let the earth bless the Lord; let it sing praise to him and highly exalt him forever. 

R.: Sing praise to him and highly exalt him forever.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Straighten up and raise your heads, because your redemption is drawing near.

R. Alleluia.

November 27th : First Reading Daniel in the lions' den. A Reading from the Book of Daniel 6: 12-28.

 November 27th : First Reading 

Daniel in the lions' den.

A Reading from the Book of Daniel 6: 12-28. 

In those days: Some men came by agreement and found Daniel making petition and plea before his God. Then they came near and said before the king, concerning the injunction, “O king! Did you not sign an injunction, that anyone who makes petition to any god or man within thirty days except to you, O king, shall be cast into the den of lions?” The king answered and said, “The thing stands fast, according to the law of the Medes and Persians, which cannot be revoked.” Then they answered and said before the king, “Daniel, who is one of the exiles from Judah, pays no attention to you, O king, or the injunction you have signed, but makes his petition three times a day.” Then the king, when he heard these words, was much distressed and set his mind to deliver Daniel. And he laboured till the sun went down to rescue him. Then these men came by agreement to the king and said to the king, “Know, O king, that it is a law of the Medes and Persians that no injunction or ordinance that the king establishes can be changed.” Then the king commanded, and Daniel was brought and cast into the den of lions. The king declared to Daniel, “May your God, whom you serve continually, deliver you!” And a stone was brought and laid on the mouth of the den, and the king sealed it with his own signet and with the signet of his lords, that nothing might be changed concerning Daniel. Then the king went to his palace and spent the night fasting; no diversions were brought to him, and sleep fled from him. Then, at break of day, the king arose and went in haste to the den of lions. As he came near to the den where Daniel was, he cried out in a tone of anguish. The king declared to Daniel, “O Daniel, servant of the living God, has your God, whom you serve continually, been able to deliver you from the lions?” Then Daniel said to the king, “O king, live for ever! My God sent his angel and shut the lions’ mouths, and they have not harmed me,

because I was found blameless before him; and also before you, O king, I have done no harm.” Then the king was exceedingly glad, and commanded that Daniel be taken up out of the den. So Daniel was taken up out of the den, and no kind of harm was found on him, because he had trusted in his God. And the king commanded, and those men who had maliciously accused Daniel were brought and cast into the den of lions— they, their children, and their wives. And before they reached the bottom of the den, the lions overpowered them and broke all their bones in pieces. Then King Darius wrote

to all the peoples, nations, and languages that dwell in all the earth: “Peace be multiplied to you. I make a decree, that in all my royal dominion people are to tremble and fear before the God of Daniel, for he is the living God, enduring for ever; his kingdom shall never be destroyed, and his dominion shall be to the end. He delivers and rescues; he works signs and wonders in heaven and on earth, he who has saved Daniel from the power of the lions.”

The word of the Lord.


செவ்வாய், 25 நவம்பர், 2025

நவம்பர் 26 : நற்செய்தி வாசகம் என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

 நவம்பர் 26 :  நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில்


இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 26 : பதிலுரைப் பாடல் தானி (இ) 1: 39-40. 41-42. 43-44 (பல்லவி: 39b) பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

 நவம்பர் 26 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 39-40. 41-42. 43-44 (பல்லவி: 39b)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.


39

கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.

40

விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

41

மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;

42

காற்று வகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

43

நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;

44

நடுக்கும் குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா!

 இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நவம்பர் 26 : முதல் வாசகம் மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6, 13-14, 16-17, 23-28

 நவம்பர் 26 :  முதல் வாசகம்

மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6, 13-14, 16-17, 23-28


அந்நாள்களில்

பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான். அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான்.

அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிலிருந்து கொண்டு வந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். அவர்கள் திராட்சை மது குடித்துக் கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.

திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான். அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான்.

இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார். அரசன் அவரைப் பார்த்து, “என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே? உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன் மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்” என்றான்.

அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: “உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன். விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்; மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை. ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னின்று அனுப்பி, இந்த எழுத்துக்களைப் பொறிக்கச் செய்தார்."

பொறிக்கப்பட்ட சொற்களாவன: “மேனே மேனே, தேகேல், பார்சின்” இவற்றின் உட்பொருள்: ‘மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும் குறைந்துள்ளீர். பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


November 26th : Gospel Your endurance will win you your lives A reading from the Holy Gospel according to St.Luke 21:12-19

 November 26th :  Gospel 

Your endurance will win you your lives

A reading from the Holy Gospel according to St.Luke 21:12-19 

At that time: Jesus said to his disciples, “They will lay their hands on you and persecute you, delivering you up to the synagogues and prisons, and you will be brought before kings and governors for my name’s sake. This will be your opportunity to bear witness. Settle it therefore in your minds not to meditate beforehand how to answer, for I will give you a mouth and wisdom, which none of your adversaries will be able to withstand or contradict. You will be delivered up even by parents and brothers and relatives and friends, and some of you they will put to death. You will be hated by all for my name’s sake. But not a hair of your head will perish. By your endurance you will gain your lives.”

The Gospel of the Lord.


November 26th : Responsorial Psalm Daniel 3:62, 63, 64, 65, 66, 67, (R. 59b)

 November 26th :  Responsorial Psalm

Daniel 3:62, 63, 64, 65, 66, 67, (R. 59b)

Response :  Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, sun and moon, sing praise to him and highly exalt him forever. 

R.:  Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, stars of heaven, sing praise to him and highly exalt him forever. 

R.:  Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, all rain and dew, sing praise to him and highly exalt him forever. 

R.:  Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, all winds, sing praise to him and highly exalt him forever. 

R.:  Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, fire and heat, sing praise to him and highly exalt him forever. 

R.:  Sing praise to him and highly exalt him forever.

Bless the Lord, winter cold and summer heat, sing praise to him and highly exalt him forever. 

R.:  Sing praise to him and highly exalt him forever.

Gospel Acclamation 

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Be faithful unto death, says the Lord, and I will give you the crown of life.

R. Alleluia.

November 26th : First reading The writing on the wall A reading from the book of Daniel 5:1-6,13-14,16-17,23-28

 November 26th :  First reading

The writing on the wall

A reading from the book of Daniel 5:1-6,13-14,16-17,23-28 

In those days: King Belshazzar made a great feast for a thousand of his lords and drank wine in front of the thousand. Belshazzar, when he tasted the wine, commanded that the vessels of gold and of silver that Nebuchadnezzar his father had taken out of the temple in Jerusalem be brought, that the king and his lords, his wives, and his concubines might drink from them. Then they brought in the golden vessels that had been taken out of the temple, the house of God in Jerusalem, and the king and his lords, his wives, and his concubines drank from them. They drank wine and praised the gods of gold and silver, bronze, iron, wood, and stone. Immediately the fingers of a human hand appeared and wrote on the plaster of the wall of the king’s palace, opposite the lampstand. And the king saw the hand as it wrote. Then the king’s colour changed, and his thoughts alarmed him; his limbs gave way, and his knees knocked together. Then Daniel was brought in before the king. The king answered and said to Daniel, “You are that Daniel, one of the exiles of Judah, whom the king my father brought from Judah. I have heard of you that the spirit of the gods is in you, and that light and understanding and excellent wisdom are found in you. “I have heard that you can give interpretations and solve problems. Now if you can read the writing and make known to me its interpretation, you shall be clothed with purple and have a chain of gold round your neck and shall be the third ruler in the kingdom.” Then Daniel answered and said before the king, “Let your gifts be for yourself, and give your rewards to another. Nevertheless, I will read the writing to the king and make known to him the interpretation.

You have lifted up yourself against the Lord of heaven. And the vessels of his house have been brought in before you, and you and your lords, your wives, and your concubines have drunk wine from them. And you have praised the gods of silver and gold, of bronze, iron, wood, and stone, which do not see or hear or know, but the God in whose hand is your breath, and whose are all your ways, you have not honoured. “Then from his presence the hand was sent, and this writing was inscribed. And this is the writing that was inscribed: Mene, Mene, Tekel, and Parsin. This is the interpretation of the matter:

Mene, God has numbered the days of your kingdom and brought it to an end; Tekel, you have been weighed in the balances and found wanting; Peres, your kingdom is divided and given to the Medes and Persians.”

The word of the Lord.