இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 1 டிசம்பர், 2025

டிசம்பர் 2 : முதல் வாசகம் ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10

 டிசம்பர் 2 :  முதல் வாசகம்

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10


ஆண்டவருக்குரிய நாளில்

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு — இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.

கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக் கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.

அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 2nd : Gospel No-one knows who the Son is except the Father A reading from the Holy Gospel according to St.Luke 10: 21-24

 December 2nd :  Gospel 

No-one knows who the Son is except the Father

A reading from the Holy Gospel according to St.Luke 10: 21-24 

At that hour: Jesus rejoiced in the Holy Spirit and said, “I thank you, Father, Lord of heaven and earth, that you have hidden these things from the wise and understanding and revealed them to little children; yes, Father, for such was your gracious will. All things have been handed over to me by my Father, and no one knows who the Son is except the Father, or who the Father is except the Son and anyone to whom the Son chooses to reveal him.” Then turning to the disciples he said privately, “Blessed are the eyes that see what you see! For I tell you that many prophets and kings desired to see what you see, and did not see it, and to hear what you hear, and did not hear it.”

The Gospel of the Lord.


December 2nd : Responsorial Psalm Psalm 72:1-2, 7-8, 12713, 17 (R. see 7) Response : In his days shall justice flourish, and great peace forever.

 December 2nd : Responsorial Psalm

Psalm 72:1-2, 7-8, 12713, 17 (R. see 7)

Response : In his days shall justice flourish, and great peace forever.

O God, give your judgment to the king, to a king’s son your justice, that he may judge your people in justice, and your poor in right judgment. 

R.: In his days shall justice flourish, and great peace forever.

In his days shall justice flourish, and great peace till the moon is no more. He shall rule from sea to sea, from the River to the bounds of the earth. 

R.: In his days shall justice flourish, and great peace forever.

For he shall save the needy when they cry, the poor, and those who are helpless. He will have pity on the weak and the needy, and save the lives of the needy.

R.: In his days shall justice flourish, and great peace forever.

May his name endure forever, his name continue like the sun. Every tribe shall be blest in him, all nations shall call him blessed. 

R.: In his days shall justice flourish, and great peace forever.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia. R. Alleluia.

V. Behold, our Lord shall come with power; he will enlighten the eyes of his servants.

R. Alleluia.

December 2nd : First reading A shoot springs from the stock of Jesse A reading from the book of the prophet Isaiah 11:1-10

 December 2nd :  First reading 

A shoot springs from the stock of Jesse

A reading from the book of the prophet Isaiah 11:1-10 

On that day: There shall come forth a shoot from the stump of Jesse, and a branch from his roots shall bear fruit. And the Spirit of the Lord shall rest upon him, the Spirit of wisdom and understanding, the Spirit of counsel and might, the Spirit of knowledge and the fear of the Lord. And his delight shall be in the fear of the Lord. He shall not judge by what his eyes see,

or decide disputes by what his ears hear, but with righteousness he shall judge the poor, and decide with equity for the meek of the earth; and he shall strike the earth with the rod of his mouth, and with the breath of his lips he shall kill the wicked. Righteousness shall be the belt of his waist, and faithfulness the belt of his loins. The wolf shall dwell with the lamb,

and the leopard shall lie down with the young goat, and the calf and the lion and the fattened calf together; and a little child shall lead them. The cow and the bear shall graze; their young shall lie down together; and the lion shall eat straw like the ox. The nursing child shall play over the hole of the cobra, and the weaned child shall put his hand on the adder’s den. They shall not hurt or destroy in all my holy mountain; for the earth shall be full of the knowledge of the Lord as the waters cover the sea. In that day the root of Jesse, who shall stand as a signal for the peoples— of him shall the nations inquire, and his resting-place shall be glorious.

The word of the Lord.


ஞாயிறு, 30 நவம்பர், 2025

டிசம்பர் 1 : நற்செய்தி வாசகம்கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

டிசம்பர் 1 :  நற்செய்தி வாசகம்

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11
அக்காலத்தில்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.” என்றார்

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 1 : பதிலுரைப் பாடல்திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

டிசம்பர் 1  :  பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
1
‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

6
எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7
உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

8
“உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 80: 3
அல்லேலூயா, அல்லேலூயா! 

கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.

டிசம்பர் 1 : முதல் வாசகம்நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6

டிசம்பர் 1 :  முதல் வாசகம்

நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6
ஆண்டவர் வரும் நாளில் அவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும். அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும் ‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் ‛புனிதர்’ எனப்படுவர்.

என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார். சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும். அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 1st : Gospel 'I am not worthy to have you under my roof: give the word, and my servant will be healed'A Reading from the Holy Gospel according to St.Matthew 8:5-11

December 1st  :  Gospel 

'I am not worthy to have you under my roof: give the word, and my servant will be healed'

A Reading from the Holy Gospel according to St.Matthew 8:5-11 

At that time: When Jesus had entered Capernaum, a centurion came forward to him, appealing to him, “Lord, my servant is lying paralysed at home, suffering terribly.” And he said to him, “I will come and heal him.” But the centurion replied, “Lord, I am not worthy to have you come under my roof, but only say the word, and my servant will be healed. For I too am a man under authority, with soldiers under me. And I say to one, ‘Go’, and he goes, and to another, ‘Come’, and he comes, and to my servant, ‘Do this’, and he does it.” When Jesus heard this, he marvelled and said to those who followed him, “Truly, I tell you, with no one in Israel have I found such faith. I tell you, many will come from east and west and recline at table with Abraham, Isaac, and Jacob in the kingdom of heaven.”

The Gospel of the Lord.

December 1st : Responsirial PsalmPsalm 122:1-2, 3-4ab, 4cd-5, 6-7, 8-9 (R. see 1)

December 1st : Responsirial Psalm

Psalm 122:1-2, 3-4ab, 4cd-5, 6-7, 8-9 (R. see 1)

Response : Let us go rejoicing to the house of the Lord.

I rejoiced when they said to me, “Let us go to the house of the Lord.” And now our feet are standing within your gates, O Jerusalem. 

R.: Let us go rejoicing to the house of the Lord.

Jerusalem is built as a city bonded as one together. It is there that the tribes go up, the tribes of the Lord. 

R.: Let us go rejoicing to the house of the Lord.

For Israel’s witness it is to praise the name of the Lord. There were set the thrones for judgment, the thrones of the house of David. 

R.: Let us go rejoicing to the house of the Lord.

For the peace of Jerusalem pray, “May they prosper, those who love you.” May peace abide in your walls, and security be in your towers. 

R.: Let us go rejoicing to the house of the Lord.

For the sake of my family and friends, let me say, “Peace upon you.” For the sake of the house of the Lord, our God, I will seek good things for you. 

R.: Let us go rejoicing to the house of the Lord.

Gospel Acclamation

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Come to save us, Lord our God, let your face shine on us, and we shall be saved.

R. Alleluia.

December 1st : First Reading The fruit of the earth shall be the pride and adornment of Israel's survivorsA Reading from the Book of the prophet Isaiah 4: 2-6

December 1st  :   First Reading 

The fruit of the earth shall be the pride and adornment of Israel's survivors

A Reading from the Book of the prophet Isaiah 4: 2-6 

In that day the branch of the Lord shall be beautiful and glorious, and the fruit of the land shall be the pride and honour of the survivors of Israel. And he who is left in Sion and remains in Jerusalem will be called holy, everyone who has been recorded for life in Jerusalem, when the Lord shall have washed away the filth of the daughters of Sion and cleansed the bloodstains of Jerusalem from its midst by a spirit of judgment and by a spirit of burning. Then the Lord will create over the whole site of Mount Sion and over her assemblies a cloud by day, and smoke and the shining of a flaming fire by night; for over all the glory there will be a canopy. There will be a booth for shade by day from the heat, and for a refuge and a shelter from the storm and rain.

The word of the Lord.