இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 4 டிசம்பர், 2025

டிசம்பர் 5 : முதல் வாசகம் ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

 டிசம்பர் 5 :  முதல் வாசகம்

ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24


இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.

ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 5th : Gospel 'Take care that no-one learns about this' A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 27-31

 December 5th :  Gospel 

'Take care that no-one learns about this'

A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 27-31 

At that time: As Jesus passed on, two blind men followed him, crying aloud, “Have mercy on us, Son of David.” When he entered the house, the blind men came to him, and Jesus said to them, “Do you believe that I am able to do this?” They said to him, “Yes, Lord.” Then he touched their eyes, saying, “According to your faith be it done to you.” And their eyes were opened. And Jesus sternly warned them, “See that no one knows about it.” But they went away and spread his fame through all that district.

The Gospel of the Lord.

December 5th : Responsorial Psalm Psalm 27:1, 4, 13-14 (R. 1a)

 December 5th : Responsorial Psalm

Psalm 27:1, 4, 13-14 (R. 1a)

Response :  The Lord is my light and my salvation.

The Lord is my light and my salvation; whom shall I fear? The Lord is the stronghold of my life; whom should I dread? 

R.:  The Lord is my light and my salvation.

The Lord is my light and my salvation. There is one thing I ask of the Lord, only this do I seek: to live in the house of the Lord all the days of my life, to gaze on the beauty of the Lord, to inquire at his temple. 

R.:  The Lord is my light and my salvation.

I believe I shall see the Lord’s goodness in the land of the living. Wait for the Lord; be strong; be stouthearted, and wait for the Lord! 

R.:  The Lord is my light and my salvation.

Gospel Acclamation 

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Behold, our Lord shall come with power; he will enlighten the eyes of his servants.

R. Alleluia.

December 5th : First Reading In a very short time, the deaf will hear and the eyes of the blind will see A Reading from the Book of the prophet Isaiah 29:17-24

 December 5th :  First Reading 

In a very short time, the deaf will hear and the eyes of the blind will see

A Reading from the Book of the prophet Isaiah 29:17-24 

Thus says the Lord God: Is it not yet a very little while until Lebanon shall be turned into a fruitful field, and the fruitful field shall be regarded as a forest? In that day the deaf shall hear the words of a book, and out of their gloom and darkness the eyes of the blind shall see. The meek shall obtain fresh joy in the Lord, and the poor among mankind shall exult in the Holy One of Israel. For the ruthless shall come to nothing and the scoffer cease, and all who watch to do evil shall be cut off, who by a word make a man out to be an offender, and lay a snare for him who reproves in the gate, and with an empty plea turn aside him who is in the right. Therefore thus says the Lord, who redeemed Abraham, concerning the house of Jacob: “Jacob shall no more be ashamed, no more shall his face grow pale. For when he sees his children, the work of my hands, in his midst, they will sanctify my name; they will sanctify the Holy One of Jacob and will stand in awe of the God of Israel.

And those who go astray in spirit will come to understanding, and those who murmur will accept instruction.”

The word of the Lord.

புதன், 3 டிசம்பர், 2025

டிசம்பர் 4 : நற்செய்தி வாசகம் என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27

 டிசம்பர் 4 :  நற்செய்தி வாசகம்

என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 4 : பதிலுரைப் பாடல் திபா 118: 1,8-9. 19-21. 25-27a (பல்லவி: 26a) பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.

 டிசம்பர் 4 : பதிலுரைப் பாடல்

திபா 118: 1,8-9. 19-21. 25-27a (பல்லவி: 26a)

பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.

அல்லது: அல்லேலூயா.


1

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

8

மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

9

உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! - பல்லவி

19

நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.

20

ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.

21

என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். - பல்லவி

25

ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!

26

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27a

ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 55: 6

அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா.

டிசம்பர் 4 : முதல் வாசகம் மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6

 டிசம்பர் 4 :  முதல் வாசகம்

மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6


நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.

ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


December 4th : Gospel The wise man built his house on a rock A reading from the Holy Gospel according to St.Matthew 7:21,24-27

 December 4th :  Gospel

The wise man built his house on a rock

A reading from the Holy Gospel according to St.Matthew 7:21,24-27 

At that time: Jesus said to his disciples, “Not everyone who says to me, ‘Lord, Lord’, will enter the kingdom of heaven, but the one who does the will of my Father who is in heaven. “Everyone then who hears these words of mine and does them will be like a wise man who built his house on the rock. And the rain fell, and the floods came, and the winds blew and beat on that house, but it did not fall, because it had been founded on the rock. And everyone who hears these words of mine and does not do them will be like a foolish man who built his house on the sand. And the rain fell, and the floods came,

and the winds blew and beat against that house, and it fell, and great was the fall of it.”

The Gospel of the Lord.

December 4th : Responsirial Psalm Psalm 118:1 and 8-9, 19-21, 25-27a (R. 26a) Response : Blest is he who comes in the name of the Lord. Give praise to the Lord, for he is good; his mercy endures forever. It is better t

 December 4th : Responsirial Psalm

Psalm 118:1 and 8-9, 19-21, 25-27a (R. 26a)

Response : Blest is he who comes in the name of the Lord.

Give praise to the Lord, for he is good; his mercy endures forever. It is better to take refuge in the Lord than to trust in man;

it is better to take refuge in the Lord than to trust in princes. 

R.: Blest is he who comes in the name of the Lord.

Open to me the gates of justice: I will enter and thank the Lord. This is the Lord’s own gate, where the just enter. I will thank you, for you have answered, and you are my saviour. 

R.: Blest is he who comes in the name of the Lord.

O Lord, grant salvation; O Lord, grant success. Blest is he who comes in the name of the Lord. We bless you from the house of the Lord; the Lord is God, and has given us light. 

R.: Blest is he who comes in the name of the Lord.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Seek the Lord while he may be found, call upon him while he is near.

R. Alleluia.

December 4th : First reading Open the gates; let the upright nation come in A reading from the book of the prophet Isaiah 26:1-6

 December 4th :  First reading 

Open the gates; let the upright nation come in

A reading from the book of the prophet Isaiah 26:1-6 

In that day this song will be sung in the land of Judah: “We have a strong city; he sets up salvation as walls and bulwarks.

Open the gates, that the righteous nation that keeps faith may enter in. You keep him in perfect peace whose mind is stayed on you, because he trusts in you. Trust in the Lord for ever, for the Lord God is an everlasting rock. For he has humbled the inhabitants of the height, the lofty city. He lays it low, lays it low to the ground, casts it to the dust. The foot tramples it, the feet of the poor, the steps of the needy.”

The word of the Lord.