இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 22 டிசம்பர், 2025

December 23rd : Gospel 'His name is John' A reading from the Holy Gospel according to St.Luke 1:57-66

 December 23rd :  Gospel 

'His name is John'

A reading from the Holy Gospel according to St.Luke 1:57-66 

The time came for Elizabeth to give birth, and she bore a son. And her neighbours and relatives heard that the Lord had shown great mercy to her, and they rejoiced with her. And on the eighth day they came to circumcise the child. And they would have called him Zechariah after his father, but his mother answered, “No; he shall be called John.” And they said to her, “None of your relatives is called by this name.” And they made signs to his father, inquiring what he wanted him to be called. And he asked for a writing tablet and wrote, “His name is John.” And they all wondered. And immediately his mouth was opened and his tongue loosed, and he spoke, blessing God. And fear came on all their neighbours. And all these things were talked about through all the hill country of Judea, and all who heard them laid them up in their hearts, saying, “What then will this child be?” For the hand of the Lord was with him.

The Gospel of the Lord.

December 23rd : Responsorial Psalm Psalm 25:4–5ab, 8–9, 10 and 14 (R. see Luke 21:28)

 December 23rd : Responsorial Psalm

Psalm 25:4–5ab, 8–9, 10 and 14 (R. see Luke 21:28)

Response : Look up and raise your heads, because your redemption is drawing near.

O Lord, make me know your ways. Teach me your paths. Guide me in your truth, and teach me; for you are the God of my salvation. 

R.: Look up and raise your heads, because your redemption is drawing near.

Good and upright is the Lord; he shows the way to sinners. He guides the humble in right judgment; to the humble he teaches his way. 

R.: Look up and raise your heads, because your redemption is drawing near.

All the Lord’s paths are mercy and faithfulness, for those who keep his covenant and commands. The Lord’s secret is for those who fear him; to them he reveals his covenant. 

R.: Look up and raise your heads, because your redemption is drawing near.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. O King of all nations and keystone of the Church: come and save man, whom you formed from the dust!

R. Alleluia.


December 23rd : First reading Before my day comes, I will send you Elijah my prophet A reading from the book of the Prophet Malachi 3: 1-4, 23-24

 December 23rd :  First reading

Before my day comes, I will send you Elijah my prophet

A reading from the book of the Prophet Malachi 3: 1-4, 23-24 

The Lord God says this: Look, I am going to send my messenger to prepare a way before me. And the Lord you are seeking will suddenly enter his Temple; and the angel of the covenant whom you are longing for, yes, he is coming, says the Lord of Hosts. Who will be able to resist the day of his coming? Who will remain standing when he appears? For he is like the refiner’s fire and the fullers’ alkali. He will take his seat as refiner and purifier; he will purify the sons of Levi and refine them like gold and silver, and then they will make the offering to the Lord as it should be made. The offering of Judah and Jerusalem will then be welcomed by the Lord as in former days, as in the years of old.

  Know that I am going to send you Elijah the prophet before my day comes, that great and terrible day. He shall turn the hearts of fathers towards their children and the hearts of children towards their fathers, lest I come and strike the land with a curse.

The Word of the Lord.

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

டிசம்பர் 22 : நற்செய்தி வாசகம்வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

டிசம்பர் 22 :  நற்செய்தி வாசகம்

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

மரியா கூறியது: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 22 : பதிலுரைப் பாடல்1 சாமு 2: 1. 4-5. 6-7. 8ab (பல்லவி: 1a)பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.

டிசம்பர் 22 :  பதிலுரைப் பாடல்

1 சாமு 2: 1. 4-5. 6-7. 8ab (பல்லவி: 1a)

பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.
1
ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். - பல்லவி

4
வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5
நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! - பல்லவி

6
ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்;
7
ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! - பல்லவி

8ab
புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

டிசம்பர் 22 : முதல் வாசகம்சாமுவேலின் பிறப்புக்காக அவரது தாய் அன்னா நன்றி செலுத்துகிறார்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28

டிசம்பர் 22 :  முதல் வாசகம்

சாமுவேலின் பிறப்புக்காக அவரது தாய் அன்னா நன்றி செலுத்துகிறார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28
அந்நாள்களில்

சாமுவேல் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல் பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.” அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 22nd : Gospel The Almighty has done great things for meA reading from the Holy Gospel according to St.Luke 1:46-56

December 22nd :  Gospel 

The Almighty has done great things for me

A reading from the Holy Gospel according to St.Luke 1:46-56 

At that time: Mary said, “My soul magnifies the Lord, and my spirit rejoices in God my Saviour, for he has looked on the humble estate of his servant. For behold, from now on all generations will call me blessed; for he who is mighty has done great things for me, and holy is his name. And his mercy is for those who fear him from generation to generation. He has shown strength with his arm; he has scattered the proud in the thoughts of their hearts; he has brought down the mighty from their thrones and exalted those of humble estate; he has filled the hungry with good things, and the rich he has sent away empty. He has helped his servant Israel, in remembrance of his mercy, as he spoke to our fathers, to Abraham and to his offspring for ever.” And Mary remained with her about three months and returned to her home.

The Gospel of the Lord.

December 22nd : Responsorial Psalm1 Samuel 2:1, 4–5, 6–7, 8abcd (R. see 1a)Response : My heart exults in the Lord, my Saviour.

December 22nd :  Responsorial Psalm

1 Samuel 2:1, 4–5, 6–7, 8abcd (R. see 1a)

Response : My heart exults in the Lord, my Saviour.

My heart exults in the Lord; my horn is exalted in the Lord. My mouth derides my enemies, because I rejoice in your salvation. 

R.: My heart exults in the Lord, my Saviour.

The bows of the mighty are broken, but the feeble bind on strength. Those who were full have hired themselves out for bread, but those who were hungry have ceased to hunger. The barren has borne seven, but she who has many children is forlorn. 

R.: My heart exults in the Lord, my Saviour.

The Lord kills and brings to life; he brings down to Sheol and raises up. The Lord makes poor and makes rich; he brings low and he exalts. 

R.: My heart exults in the Lord, my Saviour.

He raises up the poor from the dust; he lifts the needy from the ash heap to make them sit with princes and inherit a seat of honour. 

R.: My heart exults in the Lord, my Saviour.

Gospel Acclamation

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. O King of all nations and keystone of the Church: come and save man, whom you formed from the dust!

R. Alleluia.

December 22nd : First readingThis is the child I prayed for: he is made over to the Lord.A reading from the first book of Samuel 1:24-28

December 22nd :  First reading

This is the child I prayed for: he is made over to the Lord.

A reading from the first book of Samuel 1:24-28 

In those days: Hannah took Samuel up with her, along with a three-year-old bull, an ephah of flour, and a skin of wine, and she brought him to the house of the Lord at Shiloh. And the child was young. Then they slaughtered the bull, and they brought the child to Eli. And she said, “Oh, my lord! As you live, my Lord, I am the woman who was standing here in your presence, praying to the Lord. For this child I prayed, and the Lord has granted me my petition that I made to him. Therefore I have lent him to the Lord. As long as he lives, he is lent to the Lord.” And he worshipped the Lord there.

The word of the Lord.

சனி, 20 டிசம்பர், 2025

டிசம்பர் 21 : நற்செய்தி வாசகம் தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24

 டிசம்பர் 21 :  நற்செய்தி வாசகம்

தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24


இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்:

அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.

“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.